search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banks strike"

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறையால் 5 நாட்கள் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #BankStrike #BankHolidays
    சென்னை:

    ஊதிய உயர்வு ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் நாளை, (டிசம்பர் 21) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாரத்தின் 4-வது சனிக்கிழமை (22-ந்தேதி) வங்கி விடுமுறையாகும். மறுநாள் 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையாகும்.

    24-ந்தேதி மட்டும் வங்கி செயல்படும். மறுநாள் 25-ந்தேதி (செவ்வாய்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறையாகும். 26-ந்தேதி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஆதலால் 26-ந்தேதி (புதன்கிழமை) வங்கிகள் செயல்படாது என்பதால் அன்றும் வங்கி சேவை பாதிக்கக்கூடும்.


    நாளை 21-தேதி முதல் 26-ந்தேதி வரை இடையில் 24-ந்தேதி ஒருநாள் தவிர 5 நாட்களும் பணம் டெபாசிட், காசோலை பரிவர்த்தனை, பணம் எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவை பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் செய்ய முடியாமல் கடும் பாதிப்பை சந்திக்க கூடும்

    ஆனால் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு, 3 நாட்கள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் இன்று மாலைக்குள் ஏ.டி.எம்.களில் பணம் முழுமையாக நிரப்பப்படுகின்றன.

    24-ந்தேதி ஒருநாள் வங்கிகள் செயல்படுவதால் அன்று அனைத்து சேவைகளும் முழுமையாக கிடைக்கும். ஏ.டி.எம். மையங்களில் மீண்டும் பணத்தை நிரப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். #BankStrike #BankHolidays
    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. #BankStrike
    விழுப்புரம்:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 2 நாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். ஊதிய உயர்வு தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்தப்படி இன்று முதல் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் 145 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளதால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பணபரிவர்த்தனை செய்ய முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திறந்திருந்த ஒரு சில வங்கிகளிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் வங்கி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ரூ.150 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் 185 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. 1650 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வேலை நிறுத்தத்தால் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. மாத கடைசி என்பதால் சம்பளம் பணம் வங்கியில் போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.200 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வங்கி ஊழியர்கள் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் நேற்று இரவு முதலே ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்து வருகின்றனர். போராட்டம் முடிந்த பின்னர் தான் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படும் என்பதால் ஏ.டி.எம்.களில் பணம் இன்றே காலியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியது.

    விழுப்புரத்தில் இன்று காலை வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கே.கே.சாலையில் உள்ள ஸ்டேட்பாங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். #BankStrike
    வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னையில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான 12 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை தேங்கியுள்ளது. #BankStrike
    சென்னை:

    வங்கி ஊழியர்களுக்கு 2017 நவம்பர் மாதத்திற்கு பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

    ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் கடந்த 6-ந்தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

    இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. ஊதிய உயர்வு திருப்திகரமாக இல்லாததால் திட்டமிட்டப்படி 2 நாள் வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினார்கள்.

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    தமிழகத்திலும் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் வங்கிகள் தவிர அனைத்து வங்கி ஊழியர்களும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர்.

    10,500 வங்கி கிளைகளில் பணியாற்றக்கூடிய 45 ஆயிரம் ஊழியர்கள் இதில் பங்கேற்றதால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, போடவோ முடியவில்லை. டெபாசிட் செய்யவும் இயலவில்லை.

    காசோலை பரிவர்த்தனை, பணமாற்றம், அந்நிய செலாவணி மாற்றம் உள்ளிட்ட அனைத்து வங்கி நடவடிக்கைகளும் முடங்கின. அரசு கருவூல பணிகள், ஏற்றுமதி, இறக்குமதி பணபரிமாற்றம், கடனை திருப்பி செலுத்துதல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான 12 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை தேங்கியுள்ளது.


    ஏ.டி.எம். மையங்களில் நிரப்பி வைக்கப்பட்ட பணம் காலியானதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    சென்னையில் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வங்கிகள் மூடப்பட்டன. வங்கிகளின் மண்டல அலுவலகம், தலைமை அலுவலகங்களில் மட்டும் அதிகாரிகள் பணிக்கு வந்தனர்.

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாளை வரை நீடிப்பதால் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பணம் உள்ள சில ஏ.டி.எம்.களில் கூட இன்று மாலைக்குள் தீர்ந்து விட வாய்ப்பு உள்ளது.

    வங்கிகளுக்கு நேரில் சென்று பெரும் தொகை எடுக்க முடியாதவர்கள் அவசர தேவைகளை சமாளிக்க ஏ.டி.எம்.களை மட்டுமே நாட வேண்டியுள்ளது. இதனால் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    வங்கிகள் மூடப்பட்டதால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், சிறு தொழில் செய்யக் கூடியவர்கள், கம்பெனியை சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி முன்பு இன்று காலையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    போராட்டம் குறித்து வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காமல் பிடிவாதம் செய்து வருகிறது. பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வில் மட்டும் பிடிவாதம் செய்வது ஏன்?

    பல ஆயிரம் கோடி வராத கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுகிறார்கள். எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இனி அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BankStrike
    ×