search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banks holiday"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.

    சென்னை:

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை கிடைத்துள்ளது.

    இதையொட்டி, வங்கிகளுக்கும் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

    இன்று மாதத்தின் 2- ம் சனிக்கிழமை, ஜனவரி 14 பொதுவிடுமுறை, ஜனவரி 15 திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மக்கள் இதற்கேற்றவாறு தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வெள்ளிக்கிழமையை தவிர நாளை (26-ந்தேதி) முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது.
    • வங்கிகள் 5 நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    சென்னை:

    அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30-ந்தேதி, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    இதனால் 30-ந்தேதி (திங்கட்கிழமை), 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் வங்கிகள் இயங்காது. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். எனவே நாளையும், வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை. இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் வங்கிகள் இயங்கும்.

    எனவே வெள்ளிக்கிழமையை தவிர நாளை (26-ந்தேதி) முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

    வங்கிகள் 5 நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதே நேரத்தில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மும்பையில் துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கம் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து சமரச கூட்டம் வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறையால் 5 நாட்கள் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #BankStrike #BankHolidays
    சென்னை:

    ஊதிய உயர்வு ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் நாளை, (டிசம்பர் 21) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாரத்தின் 4-வது சனிக்கிழமை (22-ந்தேதி) வங்கி விடுமுறையாகும். மறுநாள் 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையாகும்.

    24-ந்தேதி மட்டும் வங்கி செயல்படும். மறுநாள் 25-ந்தேதி (செவ்வாய்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறையாகும். 26-ந்தேதி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஆதலால் 26-ந்தேதி (புதன்கிழமை) வங்கிகள் செயல்படாது என்பதால் அன்றும் வங்கி சேவை பாதிக்கக்கூடும்.


    நாளை 21-தேதி முதல் 26-ந்தேதி வரை இடையில் 24-ந்தேதி ஒருநாள் தவிர 5 நாட்களும் பணம் டெபாசிட், காசோலை பரிவர்த்தனை, பணம் எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவை பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் செய்ய முடியாமல் கடும் பாதிப்பை சந்திக்க கூடும்

    ஆனால் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களும் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு, 3 நாட்கள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் இன்று மாலைக்குள் ஏ.டி.எம்.களில் பணம் முழுமையாக நிரப்பப்படுகின்றன.

    24-ந்தேதி ஒருநாள் வங்கிகள் செயல்படுவதால் அன்று அனைத்து சேவைகளும் முழுமையாக கிடைக்கும். ஏ.டி.எம். மையங்களில் மீண்டும் பணத்தை நிரப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். #BankStrike #BankHolidays
    ×