search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

    • பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.

    சென்னை:

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை கிடைத்துள்ளது.

    இதையொட்டி, வங்கிகளுக்கும் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

    இன்று மாதத்தின் 2- ம் சனிக்கிழமை, ஜனவரி 14 பொதுவிடுமுறை, ஜனவரி 15 திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மக்கள் இதற்கேற்றவாறு தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×