search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Babies"

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜீனத் வஹீத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
    • பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டியைச் சேர்ந்தவர் முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் (வயது 27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ராவல்பிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரே நேரத்தில் 2 பெண் குழந்தைகள் உள்பட அழகான 6 குழந்தைகள் பிறந்தனர்.

    பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் பாதுகாப்பு கருதி தற்போது அந்த குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    • இயற்கை உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
    • உடுமலை பகுதியில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

    உடுமலை :

    உடுமலை வ. உ. சி. வீதியில் செயல்பட்டு வருகிறது ஆராதனா கபே. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாள்தோறும் இயற்கை உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த கடையின் உரிமையாளர் செல்வகுமார் அவரது மனைவி ஸ்ரீ சத்யா இருவரும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

    ஸ்ரீ சத்யா அனாதை பிணங்களை அடக்கம் செய்வதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வருகிறார். மேலும் அனாதை பிணங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் வருகிறார். மேலும் உடுமலை பகுதியில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறார். கொரோனா காலங்களில் இலவச முக கவசம், சானிடைசர் போன்றவற்றை தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கி சேவை புரிந்துள்ளார்.

    வாடிக்கையாளர்களின் உடல் நலனை பேணிக்காக்கும் வகையில் இவர்கள் நடத்தி வரும் மினி ரெஸ்டாரண்டில் மாட்டுப்பால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தபட்ட பின்னரே கடைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை விற்பனை செய்வதில்லை என்ற குறிக்கோளுடன் தன்னலம் பாராமல் செய்துவருகின்றனர். இவர்களின் சேவையில் மற்றொரு மைல் கல்லாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை துவக்கி இன்றுவரை செயல்படுத்தி வருகிறார்கள். ஸ்ரீசத்யாவின் சேவையை தாய்மார்கள் பாராட்டி வருகின்றனர்.  

    ×