search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BAP"

    • கோடைமழை பரவலாக பெய்கிறது.
    • அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது

    உடுமலை :

    வால்பாறையில் ஆண்டு தோறும் பெய்யும் மழை நீரை சேமித்து, குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக கோடைமழை பரவலாக பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகளும், சுற்றுலாபயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சோலையாறு அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.அணையில் நீர்மட்டம் சரிந்து இருந்த போது, பரம்பிக்குளம் அணைக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது நீர்வரத்து ஏற்பட்டதும், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    • சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
    • வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது.

    உடுமலை : 

    பி.ஏ.பி., திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு உள்ளிட்ட 8 தொகுப்பு அணைகளில் இருந்து பாசனம், குடிநீர் மற்றும் கேரள மாநிலத்துக்கு நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது. 72 அடி உயரம் உள்ள பரம்பிக்குளம் அணையில் 18.67 அடி நீர் இருப்பு உள்ளது. வரத்து 35 கனஅடியாக உள்ளது.மொத்தம் 120 அடி உயரம் உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக சரிந்துள்ளது. வினாடிக்கு 136 கனஅடி நீர் வரத்து உள்ளது.நீர்மட்டம் வேகமாக சரிவதால் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா என பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., அணைகளில் உள்ள நீர் இருப்பை கொண்டு, கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க முடியும். திருமூர்த்தி பாசனத்துக்கு நீர் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது. காடம்பாறையில் இருந்து ஆழியாறு அணைக்கு நீர் எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    • இந்நிலங்களுக்கு 4 மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.
    • 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில், நீர்நிர்வாகத்தை மாற்ற வேண்டும்.

     உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டம் 2 மாவட்ட விவசாயிகளின் வரப்பிரசாதமாக உள்ளது. இதற்காக சோலையார், பரம்பிக்குளம் ஆகிய தொகுப்பு அணைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.சர்க்கார்பதி துணை மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து இத்தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலங்களுக்கு 4 மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.வருகிற டிசம்பர் 24ந்தேதி வரை 120 நாட்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.வழக்கமாக 21 நாட்கள் திறப்பு, 7 நாட்கள் நிறுத்தம் என்ற அடிப்படையில் சுற்றுக்களுக்கு நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இரண்டாம் மண்டலம் முதல் சுற்று செப்டம்பர் 15-ந்தேதி நிறைவடைந்த நிலையில் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு திருப்தி மற்றும் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், இரண்டாம் சுற்றுக்கு இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் ஒரு வாரம் இடைவெளி விட்டு 3-ம் சுற்றுக்கு நீர் வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    2 சுற்றுக்களுக்கு தொடர்ந்து நீர் வழங்கப்பட்ட நிலையில் தொகுப்பு அணைகளில் பராமரிப்பு பணி மற்றும் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் 3-ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி வழங்கப்படுகிறது.

    தற்போது திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. பூசாரிபட்டி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கால்வாய்களுக்கு நீர் வழங்கப்பட்டு, இன்று இரவு நிறைவு செய்யப்படுகிறது. பின்னர் ஒரு வாரம் இடைவெளி விட்டு 3-ம் சுற்றுக்கு நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதுப்பாளையம் கிளை கால்வாயில், பாசன பரப்பை மூன்றாக பிரித்து 3 மண்டலங்களில் தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் அனுப்பியுள்ள மனுவில், இக்கிளைக்கால்வாயில், 2ம் மண்டலத்தில் 7,200 ஏக்கர்,4ம் மண்டலத்தில் 7,360 ஏக்கர் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி., பாசன திட்ட நிலங்கள் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த மண்டலங்களை மூன்றாக மாற்ற வேண்டும்.

    3 மண்டலத்திலும், புதுப்பாளையம் கிளைக்கால்வாயில், 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில், நீர்நிர்வாகத்தை மாற்ற வேண்டும். ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் ஆயிரம் ஏக்கர் என்பதை 400 ஏக்கராக மாற்ற வேண்டும்.மேலும், 400 ஏக்கருக்கு மேல் உள்ள ஒவ்வொரு பகிர்மான கால்வாயிலும், இப்பாசனத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டின் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள் இம்ரான் கான் கட்சி மற்றும் பலூசிஸ்தான் அவாமி கட்சியில் இணைந்தனர். #PakistanPMLN
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டின் மிகப்பெரிய நீதி அமைப்பான தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28-7-2017 அன்று அவர் பதவியை விட்டு விலகினார். அவருக்கு எதிராக மூன்று ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றன. ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள் மற்றும் அதே கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாகாண சட்டசபையை உறுப்பினர்கள் இருவர் இன்று இம்ரான் கான் கட்சி மற்றும் பலூசிஸ்தான் அவாமி கட்சியில் இணைந்தனர். #PakistanPMLN

    ×