search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைவெளி"

    • இந்நிலங்களுக்கு 4 மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.
    • 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில், நீர்நிர்வாகத்தை மாற்ற வேண்டும்.

     உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டம் 2 மாவட்ட விவசாயிகளின் வரப்பிரசாதமாக உள்ளது. இதற்காக சோலையார், பரம்பிக்குளம் ஆகிய தொகுப்பு அணைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.சர்க்கார்பதி துணை மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து இத்தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலங்களுக்கு 4 மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.வருகிற டிசம்பர் 24ந்தேதி வரை 120 நாட்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.வழக்கமாக 21 நாட்கள் திறப்பு, 7 நாட்கள் நிறுத்தம் என்ற அடிப்படையில் சுற்றுக்களுக்கு நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இரண்டாம் மண்டலம் முதல் சுற்று செப்டம்பர் 15-ந்தேதி நிறைவடைந்த நிலையில் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு திருப்தி மற்றும் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், இரண்டாம் சுற்றுக்கு இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் ஒரு வாரம் இடைவெளி விட்டு 3-ம் சுற்றுக்கு நீர் வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    2 சுற்றுக்களுக்கு தொடர்ந்து நீர் வழங்கப்பட்ட நிலையில் தொகுப்பு அணைகளில் பராமரிப்பு பணி மற்றும் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் 3-ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி வழங்கப்படுகிறது.

    தற்போது திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. பூசாரிபட்டி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கால்வாய்களுக்கு நீர் வழங்கப்பட்டு, இன்று இரவு நிறைவு செய்யப்படுகிறது. பின்னர் ஒரு வாரம் இடைவெளி விட்டு 3-ம் சுற்றுக்கு நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதுப்பாளையம் கிளை கால்வாயில், பாசன பரப்பை மூன்றாக பிரித்து 3 மண்டலங்களில் தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் அனுப்பியுள்ள மனுவில், இக்கிளைக்கால்வாயில், 2ம் மண்டலத்தில் 7,200 ஏக்கர்,4ம் மண்டலத்தில் 7,360 ஏக்கர் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி., பாசன திட்ட நிலங்கள் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த மண்டலங்களை மூன்றாக மாற்ற வேண்டும்.

    3 மண்டலத்திலும், புதுப்பாளையம் கிளைக்கால்வாயில், 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில், நீர்நிர்வாகத்தை மாற்ற வேண்டும். ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் ஆயிரம் ஏக்கர் என்பதை 400 ஏக்கராக மாற்ற வேண்டும்.மேலும், 400 ஏக்கருக்கு மேல் உள்ள ஒவ்வொரு பகிர்மான கால்வாயிலும், இப்பாசனத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×