search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Article 35A"

    ஆர்ட்டிகிள் 35 ஏ சட்ட பிரிவை பாதுகாக்க வில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என தேசிய மாநாடு கட்சித்தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். #Article35A #FarooqAbdullah
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் 5-ம் தேதி வரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் பிரிவு 35 ஏ குறித்தான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால் சட்டம் - ஒழுங்கி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என மாநில கவர்னர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதால், வழக்கு விசாரணை அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

    இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது, “ஆர்டிக்கிள் 35 ஏ சட்ட பிரிவை நீதிமன்றத்தில் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்” என குறிப்பிட்டார்.

    ஏற்கனவே, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் உள்ளாட்சி தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
    காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகை வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. #Article35A #SupremeCourt #AshwiniUpadhyay
    புதுடெல்லி:

    காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக டெல்லியை சேர்ந்த 'வீ சிட்டிசன்' என்ற அரசுசாரா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370இன் கீழ், சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பாகுபாடு காட்டுவதாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதற்கிடையே காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி பா.ஜ.க. தலைவர் அஷ்வின் உபாத்யாய் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. பிரதான வழக்கின் விசாரணை 31-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Article35A #SupremeCourt #AshwiniUpadhyay
    ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. #SC #Article35A
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் நிரந்தர குடிமக்கள் அந்தஸ்தை பெறுவதுடன், வெளிமாநில மக்கள் யாரும் இங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை வரையறுத்து, அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவது தொடர்பாக மாநில சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக்கொள்ள இந்த 35ஏ சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

    பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் நீதிபதி சந்திரசூட் வராததால், விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் முடிவு செய்யும் என்றும், ஒரு நீதிபதி வராததால் வழக்கை ஒத்திவைப்பதாகவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். #SC #Article35A
    காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டத்திற்கு எதிரான பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #SC #Article35A
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் நிரந்தர குடிமக்கள் அந்தஸ்தை பெறுவதுடன், வெளிமாநில மக்கள் யாரும் இங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை வரையறுத்து, அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவது தொடர்பாக மாநில சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக்கொள்ள இந்த 35ஏ சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

    பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இன்றும் போராட்டம் தொடர்கிறது.

    இதனால் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் பகவதிநகர் முகாமில் இருந்து யாத்ரீகர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இன்றைய விசாரணையின்போது 35ஏ சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்குவது தொடர்பாக உத்தரவு ஏதேனும் பிறப்பித்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட பிரிவினைவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன. #SC #Article35A
    ×