search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hearing adjourned"

    காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகை வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. #Article35A #SupremeCourt #AshwiniUpadhyay
    புதுடெல்லி:

    காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக டெல்லியை சேர்ந்த 'வீ சிட்டிசன்' என்ற அரசுசாரா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370இன் கீழ், சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பாகுபாடு காட்டுவதாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதற்கிடையே காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி பா.ஜ.க. தலைவர் அஷ்வின் உபாத்யாய் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. பிரதான வழக்கின் விசாரணை 31-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Article35A #SupremeCourt #AshwiniUpadhyay
    ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. #SC #Article35A
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் நிரந்தர குடிமக்கள் அந்தஸ்தை பெறுவதுடன், வெளிமாநில மக்கள் யாரும் இங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை வரையறுத்து, அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவது தொடர்பாக மாநில சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக்கொள்ள இந்த 35ஏ சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

    பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் நீதிபதி சந்திரசூட் வராததால், விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் முடிவு செய்யும் என்றும், ஒரு நீதிபதி வராததால் வழக்கை ஒத்திவைப்பதாகவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். #SC #Article35A
    ×