search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archaeologists"

    • சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி, கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

    நெற்றிப்பட்டயம்

    இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் நடந்து வருகிறது.

    சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜாடியில் அலங்காரமாக சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி, கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர். சிவகளையில் தொல்லியல் இயக்குனர் பிரபாகரன், இணை இயக்குனர் விக்டர் ஞானராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் அவர்கள் ஆதிச்சநல்லூரில் தங்கம் கிடைத்த குழி, தங்க நெற்றி பட்டயம் மற்றும் வெண்கல பொருள்கள் கிடைத்த குழியை பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர் யத்தீஸ் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதன் பின் ஆர்வத்தோடு கல்லூரி மாணவர்கள் ஆய்வாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஏ.பி.சி. மகாலெட்சுமி கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் சுப்புலெட்சுமி, உதவி பேராசிரியர் புஷ்பக வல்லி, வரலாற்று துறை தலைவர் சங்கீதா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கந்தசுப்பு, வரலாற்றுதுறை ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் மற்றும் ஆய்வாளர் யத்தீஸ்குமார் மற்றும் தொல்லியல் குழுவினரை பாராட்டியுள்ளார்.

    தொல்லியல் ஆர்வலர்கள் சார்பிலும் ஆய்வாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை தாங்கினார். முனைவர் கந்தசுப்பு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மதிப்புறு மனிதர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தென்காசி மாவட்ட முதல் மாவட்ட மாநாடு மதியழகன், சீதாலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட முதல் மாநாடு மற்றும் கலை இலக்கிய இரவு 2 நாட்கள் நடைபெற்றது. மருத்துவர் சுப்பராஜ் தலைமை தாங்கினார்.

    விருதுகள்

    நகராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரிஇசக்கியப்பன், எழுத்தாளர் நாறும்பூநாதன், கோமதிஅம்பாள் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனிச்செல்வம், சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன், வள்ளிநாயகம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    இதைத்தொடர்ந்து மதிப்புறு மனிதர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவர் அம்சவேணிசுப்பராஜ், டீக் கடை முருகன், பஞ்சர் சுப்பையா ஆகியோருக்கு மதிப்புறு மனிதர் விருதுகளை திரைக்கலைஞர் ரோகிணி வழங்கினார்.பின்னர் தொட்டுவிடும் தூரத்தில் வானவில் என்ற கவிதை நூலை அவர் வெளியிட தொழிலதிபர்கள் ஆ.வள்ளிராஜன், திவ்யா.எம்.ரெங்கன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    மாவட்ட மாநாடு

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தென்காசி மாவட்ட முதல் மாவட்ட மாநாடு மதியழகன், சீதாலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    நகர தலைவர் தண்டபாணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.நெல்லை மாவட்ட செயலர் வண்ணமுத்து மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.செயலர் அறிக்கையை மாவட்ட செயலர் பக்ருதீன்அலிஅகம்மது, கலை இலக்கிய அறிக்கையை செந்தில்வேல், பண்பாட்டு அறிக்கையை பிச்சுமணி ஆகியோர் வாசித்தனர்.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்துணைப் பொதுச் செயலரும், எழுத்தாளருமான உதயங்கர் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்திப் பின்னர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-

    தமிழக பண்பாட்டு வரலாற்றில் கலை இலக்கிய இரவு என்ற கலைநிகழ்வு புதிய கொடையாக உள்ளது.எனவே கலை இலக்கிய இரவை விடிய, விடிய நடத்த தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் நம்முடைய பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான வில்லிசை, பறையிசை, நாட்டார் இசை, கரகாட்டம் போன்ற கற்பிப் பிதற்காக கலை ஆசிரியர் பணி யிடங்களை உருவாக்க வேண்டும், வாசு தேவநல்லூர் இருகே திருமலாபுரத்தில் முதுமக்கள் தாழி போன்ற பண்டைய கால பொருள்கள் கிடைக்கப் பெற்றன.அந்த இடத்தில் தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்த வேண்டும், தென்காசி மாவட்டத்தில் இசை பயிற்சிப் பள்ளி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன. ஆத்தி விநயாகம் நன்றி கூறினார்.

    ×