search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AFGvPAK"

    ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டி பரபரப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும்.

    ஐசிசி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் 118 புள்ளிகளுடன் உள்ளனர். இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    • இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

    அதன்படி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். 39 ஓவர்கள் வரை இந்த கூட்டணியை அசைக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய குர்பாஸ் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

    இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் (39.5 ஓவர்) திரட்டி பிரிந்தனர். இப்ராகிம் ஜட்ரன் 80 ரன்னில் கேட்ச் ஆனார். ரமனுல்லா குர்பாஸ் 151 ரன்கள் (151 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர் டோனி 148 ரன் (2005-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.

    ஹம்பன்டோட்டா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மண்ணில் மோதுகிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டோவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும்.

    இதனையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மெகா வெற்றியை ருசித்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் டக் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 4-வது முறையாகவும் கேப்டனாக 2-வது முறையாகவும் டக் அவுட் ஆகியுள்ளார்.

    இதன் மூலம் இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், அசார் அலி மற்றும் யூனிஸ் கான் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

    • நசீம்கான்ஷா 2 சிக்சர்களை அடித்து பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தார்.
    • இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை அணிகள் தகுதி.

    சார்ஜா:

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. சார்ஜாவில் இன்று நடைபெற்ற சூப்பர்-4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்ங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் துவக்க ஜோடி 36 ரன்களில் பிரிந்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ரன்கள் சேர்த்தார். கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் விளாசினார். ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் டக்அவுட்டானார். ரிஸ்வான் 20 ரன் அடித்தார். சதாப்கான் 36 ரன்னும் இப்திகார் அகமது 30 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் 9 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

    ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த நிலையில், கடைசி ஓவரில் நசீம்கான்ஷா அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெறச் செய்தார். 4 பந்துகளில் 14 ரன்களை அவர் அடித்தார். இதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததால், இந்தியாவின் இறுதி போட்டி வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.

    • ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராகிம் ஜத்ரன் சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
    • கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 18 ரன்கள் விளாசினார்.

    சார்ஜா:

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சார்ஜாவில் இன்று நடைபெறும் சூப்பர்-4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்ங்கை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஜோடி 36 ரன்களில் பிரிந்தது. அதன்பின்னர் நிதானமாக விளையாடினர். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.இப்ராகிம் ஜத்ரன் சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ரன்கள் சேர்த்தார். ஹஸ்ரத்துல்லா 21 ரன்கள், ரஹ்மானுல்லா 17 ரன்கள், கரிம் ஜனத் 15 ரன்கள் எடுத்தனர். கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

    ×