search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் தொடர்"

    ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டி பரபரப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும்.

    ஐசிசி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் 118 புள்ளிகளுடன் உள்ளனர். இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    • கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது.
    • பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹம்பன்டோட்டா:

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி டாப்-3 வீரர்களான பஹர் ஜமான் (30 ரன்), இமாம் உல்-ஹக் (91 ரன்), கேப்டன் பாபர் அசாம் (53 ரன்) கணிசமான பங்களிப்பை வழங்கினர்.

    அவர்களுக்கு பிறகு மிடில் வரிசை வீரர்கள் தடுமாறிய போதும் ஷதப் கான் நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்ட போது நசீம் ஷா பேட்டிங் செய்தார். எதிர் முனையில் ஷதப்கான் இருந்தார். முதல் பந்தை வீச வந்த பரூக்கி மன்கட் முறையில் அவரை அவுட் செய்தார். இதனால் விரக்தியில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். 

    இறுதியில் பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 24 வைடு உள்பட எக்ஸ்டிரா வகையில் 30 ரன்களை வாரி வழங்கியது ஆப்கானிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது.

    ஷதப்கானை ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி ரன் அவுட் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.

    • இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

    அதன்படி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். 39 ஓவர்கள் வரை இந்த கூட்டணியை அசைக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய குர்பாஸ் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

    இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் (39.5 ஓவர்) திரட்டி பிரிந்தனர். இப்ராகிம் ஜட்ரன் 80 ரன்னில் கேட்ச் ஆனார். ரமனுல்லா குர்பாஸ் 151 ரன்கள் (151 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர் டோனி 148 ரன் (2005-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.

    ஹம்பன்டோட்டா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மண்ணில் மோதுகிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டோவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும்.

    இதனையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மெகா வெற்றியை ருசித்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் டக் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 4-வது முறையாகவும் கேப்டனாக 2-வது முறையாகவும் டக் அவுட் ஆகியுள்ளார்.

    இதன் மூலம் இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், அசார் அலி மற்றும் யூனிஸ் கான் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

    ×