என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#கைது"

    • அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
    • சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

    கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவளது தந்தை மற்றும் உறவினர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவர போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தோழியை சந்தித்த போது கடந்த 4 ஆண்டுகளாக தந்தை மற்றும் உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விசாரணையில் சிறுமியின் தாய், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தையின் சகோதரி வீட்டில், சிறுமி தங்கினார். அங்கு தான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

    அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது தெரிய வந்ததை தொடர்ந்து தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • உடுமலை அமராவதி போலீசார் விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வாலிபர்கள் 2பேரை மரத்தில் கட்டி வைத்து சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து உடுமலை அமராவதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கார்த்திக்குமார், கருப்புசாமி ஆகியோர் மானுப்பட்டி பகுதியில் மோட்டார் வயர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 2 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • சந்தோஷ் ரெட்டி உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • கூட்டாளிகளான வினோத் மற்றும் கிரண் ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ் ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் சுமார் ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் சந்தோஷ் ரெட்டியை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புகாரின் பேரில் சந்தோஷ் ரெட்டி உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    ஈவிபி குழுமத்தின் சந்தோஷ் ரெட்டி கைதான நிலையில், அவரது கூட்டாளிகளான வினோத் மற்றும் கிரண் ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூரில் 34.75 ஏக்கர் நிலம், ஸ்டூடியோக்கள் உள்ளிட்டவைகளை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், கட்டடங்கள் அனைத்தும் சட்டப்பூர்வ அனுமதி பெற்றவை என போலி வாக்குறுதி அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார்.
    • இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகில் உள்ள குல்லப்புரம் மேட்டுக்காலனியை சேர்ந்த சங்கிலி மகன் ஜான்பாண்டியன் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் காதலை கைவிட்டார்.

    அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டதால் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் ஜான்பாண்டியன் தரப்பினரை வரவழைத்து இனிமேல் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜான்பாண்டியன் தப்பி ஓடினார்.

    இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், ஏட்டு சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜான்பாண்டியனை கைது செய்தனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
    • முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி முத்துநகர், மீனம்பாறை ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருவதாக வீரபாண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த ஷேரீப், ஷோகாக், லீட்டன், ரகீர் ஆகியோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது முத்துநகர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி இருந்து கடந்த 2 ஆண்டுகளாக பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் போலி ஆதார் கார்டுகள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் அனைவரும் முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நள்ளிரவு கள்ளக்காதலனான தனது மருமகன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்தார்.
    • இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்த தண்டாவை சேர்ந்தவர் ராமாவத் ரவி (வயது 34). இவர் சல்குனூரில் உள்ள அரசு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி. தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    லட்சுமிக்கு அவரது கணவரின் சகோதரி மகன் கணேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிட வேண்டும் என லட்சுமியை பலமுறை கண்டித்தனர்.

    இருப்பினும் லட்சுமியின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக லட்சுமி தனது மருமகன் கணேஷ் உடன் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

    இது சம்பந்தமாக கடந்த 26-ந்தேதி காலை கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ரவி வேலைக்கு சென்று விட்டார். லட்சுமி மிரியாலகுடாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் லட்சுமி கணவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை கவனித்த ரவியின் தந்தை லட்சுமண நாயக் இது வழக்கமாக ஏற்படும் தகராறு என தூங்கிவிட்டார்.

    லட்சுமி நள்ளிரவு கள்ளக்காதலனான தனது மருமகன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து ரவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி சென்றனர்.

    காலையில் ரவியின் தந்தை லட்சுமண நாயக் எழுந்து பார்த்தபோது மகன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து லட்சுமண நாயக் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லட்சுமி தனது மருமகன் கணேஷுடன் மிரியாலகுடா போலீசில் சரணடைந்தார். இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • நதீம் அமிதாப் பச்சன், அஸ்ரானி, அடில் உசேன் மற்றும் சஞ்சய் மிஸ்ரா போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்துள்ளார்.
    • துரைத்துறையை தாண்டி நாடகத்துறையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் துரந்தர். இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நதீம் கான் என்ற நடிகர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தன்னிடம் வீட்டு வேலை செய்த 41 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை மால்வனி காவல்துறையினர் ஜனவரி 22, அன்று நதீம் கானைக் கைது செய்தனர். அவர் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பில் உள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் நதீம் கானிடம் 2015 முதல் வேலை செய்து வந்துள்ளார். நதீம் கான் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

    • அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார்.
    • ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் போய வசுந்தரா (வயது 34). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு டாக்டரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதல், திருமணம் வரை செல்லாமல், இடையிலேயே முறிந்தது.

    அந்த டாக்டர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணும் ஒரு டாக்டர்தான். கர்னூலில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால், தனது முன்னாள் காதலரை வேறு ஒரு பெண் திருமணம் செய்ததை போய வசுந்தராவால் ஜீரணிக்க முடியவில்லை. பொறாமை அடைந்த அவர், முன்னாள் காதலரை பழிவாங்கவும், தம்பதிகளை பிரிக்கவும் திட்டமிட்டார்.

    அதற்காக முன்னாள் காதலரின் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்த திட்டமிட்டார். அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார். ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதாக பொய் சொல்லி, அதை பெற்றார்.

    அந்த ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    சம்பவத்தன்று, போய வசுந்தராவின் முன்னாள் காதலரின் மனைவி, கல்லூரியில் பணி முடிந்து, மதிய உணவுக்காக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, தனக்கு தெரிந்த நர்ஸ் காங்கே ஜோதி (40) என்பவரின் 2 மகன்களை மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று, பெண் டாக்டரின் ஸ்கூட்டர் மீது மோதச் செய்தார்.

    அவர் நினைத்ததுபோல், பெண் டாக்டர் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவருக்கு உதவுவதுபோல் போய வசுந்தரா நெருங்கினார். ஒரு ஆட்டோவை வரவழைத்தார்.

    ஆட்டோவில் பெண் டாக்டரை ஏற்றியபோது அவருக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தினார். பெண் டாக்டர் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் போய வசுந்தரா அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுபற்றி அவரின் முன்னாள் காதலரான டாக்டர், கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    போய வசுந்தரா, நர்ஸ் காங்கே ஜோதி, அவரின் 2 மகன்கள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
    • தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

    'கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்யும் விடியா திமுக அரசுக்கு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.

    தற்போது இந்நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசா வளர்ப்பு கூலியாக கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

    தேங்காய் நார்மஞ்சி விலை உயர்வு மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, ஆள் கூலி உயர்வு என பல்வேறு செலவுகள் அதிகரித்ததற்கு ஏற்ப நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்காததால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ. 20-ஐ அடிப்படை கூலியாக வழங்க வேண்டும்; மின் கட்டண சலுகை, தரமான தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 2

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முன்னெடுப்பில், தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

    1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நிறுவனங்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து, 7.1.2026 அன்று சென்னை கால்நடை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தி வந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளையும், தமிழக விவசாய பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 10 பேரை 14.1.2026 அன்று விடியா திமுக அரசின் காவல்துறை கைது செய்து, சிறையில் வைத்துள்ளதாக வந்த செய்தி கடும் கண்டனத்திற்குரியது.

    கைது செய்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதுடன், கறிக்கோழி பண்ணை விவசாய சங்கத்தினரையும், நிறுவனங்களையும் உடனடியாக அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி.

    கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

    • காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
    • காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் சிறுமி, பாகூர் பகுதியில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் பாகூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி வந்து காதலன் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இவ்வழக்கில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காதலன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகின்றனர். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 மாணவர்களும் பள்ளி படிப்பை இடையிலேயே கைவிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.

    அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.

    அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

     

    கைதானவர்கள்

    இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.

    ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.

    பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.

    அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதிய அரசு அமையும்வரை வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றார் டிரம்ப் .
    • ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.

    வாஷிங்டன்:

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதற்கிடையே, வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாவும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் வெனிசுலா அதிபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×