search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#கைது"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் (55), அவரது மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர்.


    மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி (32), மாரிமுத்து (26), செல்வி (34), நாகம்மாள் (57) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி மடவார் வளாகம் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ.புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராயர் (வயது 80) இவர் தனது மகன்களான ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் ஆகிய 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அன்பழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். இந்நிலையில் மற்ற 2 மகன்களும் தன்னை பராமரிக்கவில்லை என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி தியாகதுருகம் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். சம்பவத்தன்று ராயர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்களை அவரது மகன் லோகநாதன் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ராயர் கொடுத்த புகாரின் தந்தையை முறையாக பராமரிக்காத ராமமூர்த்தி மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தந்தை வீட்டில் இருந்து பணம் மற்றும் பாத்திரங்களை திருடிய லோகநாதனை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • 52 பைகளில் சுமார் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பில்லனகுப்பம் அடுத்த ராகிமானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வேனை சோதனை செய்தனர்.

    அதில், 50 கிலோ எடை அளவிலான 52 பைகளில் சுமார் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனை அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார், வேன் டிரைவரான கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விக்ரம்குமார் என்பவரை கைது செய்த னர்.

    விசாரணையில் அரிசியை காவேரிப்பட்டணம், பில்லனகுப்பம், ராகிமானப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. மேலும், இந்த அரிசியை வீடு வீடாக சென்று வாங்கி வந்த சுண்டேகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்கிற டேம் ராஜா, அரிசி மற்றும் வேன் உரிமையாளரான ராகிமானப்பள்ளியை சேர்ந்த அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓசூரில் மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • போலீசார் நடவடிக்கை.

    அஞ்செட்டி அருகே உள்ள கோரிபாளையத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் ஓசூர் பேடரப்பள்ளி காமராஜர் நகர் பகுதியில் தங்கி ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 28-ந் தேதி நிறுவன வளாகத்தில் வைத்திருந்த இவரது மடிக்கணினி மற்றும் 2 செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றார்.

    அது குறித்து விஜய் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசரணை நடத்தியில், அதை திருடியது ஓசூர் பேடரப்பள்ளி ராஜாஜி நகரை சேர்ந்த சந்தோஷ் (30) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மடிக்கணினி மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.
    • கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தர்மன் என்கிற தர்மராஜ் (27). இவரை வழிப்பறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை போலீசார் தர்மராஜை கைது செய்தனர். இதே போல் அமானி கொண்டலாம்பட்டி பழனியப்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற காட்டுக்கார சரவணன் (40).

    இவரையும் கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர். இன்று அதிகாலை சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1141 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்
    • 1081 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதாவை கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). கூலித் தொழிலாளி. நேற்று அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் உள்ள சந்து கடை நடத்தும் ராதா(55) என்பவரின் வீட்டிற்கு சென்று மது வாங்கி உள்ளார்.

    அப்போது மூடியை திறந்தவுடன் ஒரு விதமான நாற்றம் அடித்ததால் இதுகுறித்து ராதாவிடம், செல்வம் கேட்டுள்ளார். நன்றாக போதை ஏறும் குடி என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் தலைசுற்றி, மயக்கம் அடைந்து வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் தலைமையிலான போலீசார் மாரியம்பட்டி கிராமத்திற்கு சென்று ராதாவின் வீட்டை சோதனையிட்டனர்.

    சோதனையில் அரசு மதுபான கடையிலிருந்து 1081 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதாவை கைது செய்தனர். அதேபோன்று பாலக்கோடு அருகே உள்ள வெளங்காடு பகுதியில் மது பாட்டில் விற்கபடுவதாக வந்த தகவலின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வைத்து ஒரு நபர் மது பாட்டில் விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பொன்முடி (51) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் வைத்திருந்த மதுபாட்டில்கள் 31 மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அதேபோன்று ஓகேனக்கல் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மது விற்ற அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் மாதேஷ் (27) என்பவர் மது விற்று கொண்டிருந்தார் .அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.150 கோடி மதிப்புள்ள நில ஆவணங்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் நில ஆவணங்கள் திருட்டு நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு தேவநேரியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இங்கிருந்த காவலாளியை தாக்கி மர்மநபர்கள் ரூ.150 கோடி மதிப்புள்ள நில ஆவணங்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழைய வண்ணாரப்பேட்டை சேரன், மீஞ்சூர் வசந்தபிரியன், நீலாங்கரை கார்த்திகேயன், வெட்டு வாங்கேணி செந்தில் ஆகியோரை கைது செய்தனர். ஏற்கனவே மாமல்லபுரம் முகமது பாருக் அலி, சம்பத்குமார் ஆகிய இருவரும் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்து இருந்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இந்த நில ஆவணங்கள் திருட்டு நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
    • பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    அரூர்:

    தருமபுரியில் இருந்து கோவைக்கு வெடிெபாருட்கள் ஏற்றி செல்வதாக சேலம் மாவட்டம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று கருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதனை ஓட்டி வந்த டிரைவர் இளையராஜா (33) என்பவர் 2 ஆயிரத்து 953 கிலோ வெடி பொருட்கள் இருந்தது. வெடி பொருட்களை தருமபுரியில் இருந்து கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இதில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் கார்த்திக் (35) என்பவரும், அரூர் அருகே ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆகிய 2 பேரும் கொடுத்த தகவலின்படி மினிலாரியில் 2 ஆயிரத்து 953 கிலோ வெடிபொருட்களை பென்னாகரத்தில் இருந்து ஏற்றி கொண்டு கோவைக்கு சென்றதாக கைதான இளையராஜா போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள கார்த்திக்கை பிடிக்க வந்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குமாரும் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தலைமறைவாக உள்ள 2 பேரையும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வெடிபொருட்கள் ஏற்றி சென்றதாக கூறப்படும் பென்னாகரத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் தி.மு.க. கிளை செயலாளர் மாரீஸ்குமார். (வயது 30).

    இவர் கடந்த 27-ந் தேதி மோட்டார் சைக்களில் சென்றபோது ஓட்டப்பிடாரம் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதில் காயம் அடைந்த மாரீஸ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டது தொடர்பாக அவருக்கும், ஓட்டப்பிடாரம் தி.மு.க.சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரான கண்ணன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மணல்குண்டுவை சேர்ந்த வெயிலுகந்தகோபால் ஆகிய இருவரும் சேர்ந்து மாரீஸ் குமாரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.

    தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.

    இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.

    தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print