திருமண வாக்குறுதி அளித்து வீட்டு பணிப்பெண் பலமுறை பாலியல் வன்கொடுமை... துரந்தர் பட நடிகர் கைது!

நதீம் அமிதாப் பச்சன், அஸ்ரானி, அடில் உசேன் மற்றும் சஞ்சய் மிஸ்ரா போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்துள்ளார்.துரைத்துறையை தாண்டி நாடகத்துறையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
திருமண வாக்குறுதி அளித்து வீட்டு பணிப்பெண் பலமுறை பாலியல் வன்கொடுமை... துரந்தர் பட நடிகர் கைது!
Published on

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் துரந்தர். இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நதீம் கான் என்ற நடிகர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னிடம் வீட்டு வேலை செய்த 41 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை மால்வனி காவல்துறையினர் ஜனவரி 22, அன்று நதீம் கானைக் கைது செய்தனர். அவர் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பில் உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நதீம் கானிடம் 2015 முதல் வேலை செய்து வந்துள்ளார். நதீம் கான் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com