search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    • உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயரை காண்பிக்க வேண்டும்- உ.பி. போலீசார்.
    • பெயரை வெளியிட வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது- உச்சநீதிமன்றம்.

    கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயர், உணவகங்களில் பணிபுரியும் நபர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை வெளியிட வேண்டும் (காண்பிக்க வேண்டும்) என உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    முசாபர்நகர் போலீசாரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22-ந்தேதி பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் உத்தரவை எதிர்த்து போடப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்க நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று பெயர்ப்பலகை தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ரிஷிகேஷி ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி அடங்கிய பெஞ்ச் "ஜூலை 22-ம் தேதி மீதான உத்தரவின் மீது எந்த விளக்கமும் அளிக்க எந்த காரணமும் இல்லை. என்ன தேவையோ அதை நாங்கள் ஜூலை 22-ம் தேதி உத்தரவில் தெரிவித்துவிட்டோம். பெயரை வெளியிட வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது" எனத் தெரிவித்தது.

    அத்துடன் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள், தங்களுடைய உத்தரவுகளுக்கு எதிரான மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அதேபோல் மனுதாரர்கள் தங்களுடைய பதிலை அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    அரசின் இந்த உத்தரவு அமைதியை உறுதிசெயவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே ஆகும். தவறுதலாகக் கூட கன்வர் யாத்ரீகர்களின் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காவதும், முந்தைய காலங்களில் நடந்த சில அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என உத்தர பிரதேச மாநிலம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
    • உணவகங்களில் அசைவம் சமைக்கக்கூடாது என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது.

    பெயர் பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்ட அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைத்தது.

    உ.பி., உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் தங்களது உத்தரவை நியாயப்படுத்தி பேசியுள்ளது.

    இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், அரசின் இந்த உத்தரவு அமைதியை உறுதிசெயவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே ஆகும். தவறுதலாகக் கூட கன்வர் யாத்ரீகர்களின் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காவதும், முந்தைய காலங்களில் நடந்த சில அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கன்வர் பயணம் மேற்கொள்ளும் பல யாத்திரீகள், கடைகள் மற்றும் உணவாகங்களின் பெயர்கள் தங்களைக் குழப்புவதாக அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். அந்த புகார்களுக்கு உரிய நடவைடிக்கை எடுக்கும் பொருட்டே இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததாக தனது வாதத்தை முன்வைத்தார்.

    மேலும் உணவகங்களில் அசைவம் சமைக்கக்கூடாது என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பெயரை கடை முன்னாள் எழுத வேண்டும் என்று மட்டுமே கூறியிருந்தோம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

    • நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
    • இதுபோன்ற கேள்வி அமலாக்கத்துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள கூடாது.

    பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது, செந்தில் பாலஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்ட் டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது என்றும் எளிமையான கேள்விக்கு, எளிமையான பதில் தேவை என்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், சோதனையில் கைப்பற்றிய பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இருந்ததா ? எனவும், கைப்பற்றிய பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இல்லை என்பதே செந்தில் பாலாஜி தரப்பின் வாதமாக உள்ளதே எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுபோன்ற கேள்வி அமலாக்கத்துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள கூடாது. 15 நிமிடங்களாக உரிய பதில் இல்லையே எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அப்போது, சோதனையில் கைப்பற்றாத சீகேட் ஹார்ட் டிஸ்க்கை ஏற்கனவே தமிழ்நாடு லஞ்சம் ஓழிப்புத்துறை வசம் இருந்ததாக அமலாக்கத்துறை வாதம் செய்தது.

    கடந்த 2020, பிப்ரவரி 2ம் தேதி சோதனையிட்டபோது, இந்த விவகாரத்தை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் செந்தில் பாலாஜி எழுப்பவில்லை எனவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

    இதற்கிடையே, செந்தில் பாலாஜி ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் கிழப்பது ? என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறினார்.

    இந்நிலையில், நாளை உரிய பதிலுடன் வர அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

    • அணு தொடர்பான 29-வது கேள்விக்கு இரண்டு பதிலுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது.
    • தவறான பதிலுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டதால் தனது தரவரிசை பாதிக்கப்படுவதாக ஒருவர் மனு.

    நீட் தேர்வு மற்றும் முடிவு தொடர்பான முறைகேடு தொடர்பாக தேர்வு எழுதிய பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் ஒருவர் அணு தொடர்பான 29-வது கேள்விக்கு ஆப்சன் 4 மற்றும் ஆப்சன் 2 ஆகிய இரண்டையும் தேர்வு செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் காரணமாக தான் இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

    என்சிஇஆர்டி-யின் (NCERT) புதிய புத்தகத்தை பின்பற்றவும் என தேசிய தேர்வு முகமை குறிப்பிட்டிருந்தது. அதன்படி ஆப்சன் 4 சரியான விடை. பழைய புத்தகத்தின்படி ஆப்சன் 2 சரியான விடையாகும். ஆனால் இரண்டிற்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆப்சன் 2 என பதில் அளித்தவர்களுக்கு 4.2 லட்சம் பேர் கருணை மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் 44 பேர் முழு மதிப்பெண் பெற்றவர்கள் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். மனு தாக்கல் செய்திருந்தவர் 711 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    உச்சநீதிமன்றம் ஒரு கேள்விக்கு இரண்டு பதில் சரியாகாது. சரியான பதில் எது என்பதை தெரிவிக்க டெல்லி ஐஐடி இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்தது. 3 பேர் கொண்ட குழு உச்சநீதிமன்றம் ஆப்சன் 4-தான் சரியான பதில் என அறிக்கை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றம் ஆப்சன் 4-தான் 29-வது கேள்விக்கு சரியான பதில் என உத்தரவிட்டுள்ளது.

    இதனால் ஆப்சன் 2-ஐ தேர்வு செய்த 4 மதிப்பெண் பெற்ற 4.2 லட்சம் பேர் அந்த மதிப்பெண்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

    • அரியானா மாநிலத்தில் 6 பேர் 720 மதிப்பெண் பெற்றிருந்தனர்.
    • அந்த மையத்தில் அதிகபட்ச மதிப்பெண் 682 என இன்று வெளியிட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வு முடிவில் அரியானாவில் உள்ள ஹர்தயாள் பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுதிய 494 மாணவர்களில் 6 பேர் 720-க்கு 720 மதிப்பெண்களும், இரண்டு பேர் 718 மற்றும் 719 மதிப்பெண்களும் பெற்றனர். நீட் தேர்வில் 719 மதிப்பெண்கள் பெற முடியாது. மேலும் 6 பேர் 720 மதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதன்பின் கருணை மதிப்பெண் 1563 பேருக்கு வழங்கப்பட்டது என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனால் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் பல மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிமன்றம் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்தது. விருப்பம் உள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை மையம் வாரியாக வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய தேர்வு முகமை இன்று முடிவுகளை வெளியிட்டது.

    இதில் ஏற்கனவே 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற ஹர்தயாள் பள்ளிக் பள்ளியில் தேர்வு எழுதிய 494 மாணவர்களில் ஒரேயொரு மாணவர்தான் 682 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும, 13 மாணவர்கள் 600 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 800 மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வை எழுதினார்கள். முழு மதிப்பெண் பெற்ற அவர்கள் மீண்டும் தேர்ச்சி பெற்றார்களா? என்பது தெரியவில்லை. அவர்களுக்கு எவ்வளவு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என்பதும் தெரியவில்லை.

    பீகார் மாநிலம் ஹஜாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பொது பள்ளியில் 701 பேர் தேர்வு எழுதினர். இதில் அதிகபட்ச மதிப்பெண் 700-க்கு குறைவாகும். ஏழு மாணவர்கள் 650-க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 23 மாணவர்கள் 600-க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 46 பேர் 550-க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த பள்ளியின் முதல்வர் பேப்பர் லீக் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    குஜராத்தின் கோத்ராவில் உள்ள ஜலராம் சர்வதேச பள்ளியில் 1,838 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதிலும் 700-க்கு அதிகமான மதிப்பெண் யாரும் பெறவில்லை. ஐந்து மாணவர்கள் 650 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் 600-க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 31 மாணவர்கள் 55-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ராஜஸ்தானில் உள்ள சிகர் மாவட்டத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுதிய மாநிலங்களில் 149 மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 2037 மாணவர்கள் 650-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். மொத்தமாக 4297 மாணவர்கள் 600-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாவை பொறியியல் கல்லூரியில் 1017 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் இரண்டு மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 52 மாணவர்கள் 650-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
    • நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.

    இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது.

    நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்தது.

    ஆனால், தேசிய தேர்வு முகவை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் நீட் தேர்வு முடிவை வருகிற 20-ந்தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும். மாணவர்கள் பெயர்களை மறைத்து மதிப்பெண்களை வெளியிட வேண்டும் அப்போதுதான் நடந்ததை அறிய முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் அடையாளத்தை மறைத்து முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
    • 20-ந்தேதி மதியம் 12 மணிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

    எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.

    இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது.

    நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்தது.

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகவை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் நீட் தேர்வு முடிவை வருகிற 20-ந்தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும். மாணவர்கள் பெயர்களை மறைத்து மதிப்பெண்களை வெளியிட வேண்டும் அப்போதுதான் நடந்ததை அறிய முடியும் என நீதிபகள் தெரிவித்தனர்.

    அப்போது உத்தரவை மாற்ற வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

    • இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெளியிட்டது.
    • உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர் மகாதேவன் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டர். இவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    கடந்த 16 ஆம் தேதி என் கோடீஸ்வர் சிங் மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற கொலிஜியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    அதில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர் மகாதேவன், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என் கோடீஸ்வர சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வதாக அறிவித்தது.

    இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர் மகாதவேன் மற்றும் என் கோடீஸ்வர் சிங் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றனர். இதன் காரணமாக உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடகள் முழுமை பெற்றுள்ளன. 

    • கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    • சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக என்.கோடீஸ்வரர் சிங், ஆர்.மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ஜம்மு ஐகோர்ட் தலைமை நீதிபதி கோடீஸ்வரர், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாகினர்.

    காலியாக இருந்த 2 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

     

    பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லிம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
    • இஸ்லாமின் ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் AIMPLB உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம்வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.

    கடந்த ஜூலை 10 ஆம் தேதி அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், அதை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.

    ஜீவநாமசம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவிதித்திருந்தது. மிகவும் முக்கியமான தீர்ப்பாக இந்த தீர்ப்பு பார்க்கப்பட்டது.

     

    இந்நிலையில் விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கு பராமரிப்பு செலவுக்கான ஜீவனாம்சம் வழங்குவது என்பது இஸ்லாமின் ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்  AIMPLB உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக வாரியம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     

     

    • உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி.
    • 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பாக அவரது மனைவி பாயல் அப்துல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

    நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் அவர்களது திருமணம் முறிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    திருமணங்களை கலைக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை அவர் கோரினார்.

    உமர் மற்றும் பாயல் அப்துல்லா செப்டம்பர் 1, 1994 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் 2009 முதல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இரு மகன்களின் பாதுகாப்பில் உள்ளனர்.

    முன்னதாக, மேலும் அவரது மனைவிக்கு மாதம் 1.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் தலா 60,000 ரூபாய் வழங்கவும் தேசிய மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
    • ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்தார்.

    டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 

    ×