என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- சாதாரண பெண்ணான ரேகா பத்ரா அங்கே தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
- தேர்தல் கமிஷன் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தும் என நீங்கள் உறுதியளித்து இருக்கிறீர்கள்.
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், ஷாஜகான் ஷேக்.
இவரும், இவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அங்குள்ள பெண்களின் நிலங்களை ஆக்கிரமித்ததாகவும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அந்த பெண்கள் பல நாட்கள் அங்கு தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் சந்தேஷ்காலியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரான ரேகா பத்ராவை, சந்தேஷ்காலியை உள்ளடக்கிய பசிரத் தொகுதியின் வேட்பாளராக பா.ஜனதா களமிறக்கி இருக்கிறது. சாதாரண பெண்ணான ரேகா பத்ராவும் அங்கே தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அவரை பிரதமர் மோடி நேற்று திடீரென தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் தேர்தல் பிரசாரத்துக்கான தயார் நிலை, மக்களிடம் பா.ஜனதாவுக்கு இருக்கும் செல்வாக்கு உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்தார்.
அப்போது ரேகா பத்ரா பிரதமர் மோடியிடம் கூறியதாவது:-
இங்குள்ள சூழல் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஓட்டு போடாமல் இருந்து வந்தேன். ஆனால் தேர்தல் கமிஷன் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தும் என நீங்கள் உறுதியளித்து இருக்கிறீர்கள்.
நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் சிறப்பாக உணர்கிறேன். எங்களுடன் இருக்கும் ராமபிரான்தான் நீங்கள்.
நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முதலில் என்னை எதிர்த்தனர். ஆனால் தற்போது எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனக்கு யாருடனும் பகை இல்லை.
நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். எனது கணவர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார். இனிமேல் யாரும் வேலைக்காக இவ்வளவு தூரம் செல்லாமல் இருக்கும் வகையில் ஏதாவது செய்வேன். அவர்களுக்கு இங்கேயே வேலை கிடைக்கும்.
இவ்வாறு ரேகா பத்ரா கூறினார்.
அப்போது மோடி அவரிடம், 'சந்தேஷ்காலியில் நீங்கள் போராடினீர்கள். நீங்கள்தான் சக்தியின் வடிவம்' என பாராட்டினார். மேலும் அவர், 'மக்கள் மத்தியில் பணியாற்றுங்கள். திரிணாமுல் காங்கிரஸ் அரசு மக்களுக்கு எதிராக எப்படி பிரச்சனைகளை உருவாக்குகிறது என்ற செய்தியை அவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த அவர்கள் அனுமதிக்காமல், ஊழலில் ஈடுபடுவதையும், திட்டங்களின் பெயர்களை மாற்றுவதையும் மக்களிடம் சொல்லுங்கள்' என்றும் அறிவுறுத்தினார்.
- கோயம்பேட்டில் தள்ளுவண்டி கடையில் வடை சாப்பிட்டு வடைக்கான காசை செல்போனில் அனுப்பினார்.
- தள்ளுவண்டி கடையில் டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பது பிரதமர் மோடியின் சாதனை என்று கூறினார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோயம்பேட்டில் தள்ளுவண்டி கடையில் வடை சாப்பிட்டு வடைக்கான காசை செல்போனில் அனுப்பினார். தள்ளுவண்டி கடை வரை டிஜிட்டல் பேமெண்ட் வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரித்தார்.
இதற்கு முன்னதாக பெரிய பெரிய உணவகங்களில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் இருக்கும். தற்போது சிறிய தள்ளுவண்டி கடைக்கு கூட டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பதாகவும் இதுவே பிரதமர் மோடியின் சாதனை எனவும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் பெண்ணிடம் நீங்கள் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் பெற்றுக்கொள்வது சிறந்த முறை என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
- சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி துவங்கியது.
நல்ல நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 405 பேர் தமிழகம் முழுக்க வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை தமிழகம் முழுக்க சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 100-க்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 27) கடைசி நாள் ஆகும். கடைசி நாள் என்பதால் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை என பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கலாம்.
இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் செய்வதற்கான நேரம் என்பதால், மனு தாக்கல் செய்ய விரும்புவோர் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்வதற்கான டோக்கன் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இன்றுடன் மனு தாக்கல் நிறைவு பெறும் நிலையில், நாளை (மார்ச் 28) வேட்பு மனு பரிசீலனை நடைபெற இருக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 30 ஆம் தேதியே கடைசி நாள் ஆகும்.
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.
காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.
- சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார்
- எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது
கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அண்ணாமலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார். தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம்-வில் படித்தவர்.
சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கு வயது 11. சிங்கை ராமச்சந்திரன் கல்லூரியில் 2002-ம் ஆண்டு சேருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். இறந்து போன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கித் தர முடியும்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர் சிங்கை ராமச்சந்திரன். அதுவுமா எம்.எல்.ஏ கோட்டா? என கேள்வி எழுப்பியுள்ளனர்
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்,எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது.
நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்கிறார்.
அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார். எனக்கு அப்பா இல்லை நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன்.
அண்ணாமலை இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம்.
காரை விற்று கடனை அடைத்தோம், பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கு அண்ணாமலை மறைந்த என் தந்தை குறித்து பேசியதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
- தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடத்தி வரும் சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் என்றால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்கிற கணக்கிலேயே ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் "பக்கெட்" சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், அந்த மனுவில் "தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும். அல்லது, இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்.
இரட்டை இலை சின்னம் முடங்கும் பட்சத்தில் ராமநாதபுரத்தில், தனக்கு பக்கெட் சின்னத்தை வழங்க வேண்டும்" என தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
- ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்
- இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார்
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று ஓ பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- திருவண்ணாமலையில் ரூ. 38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
- இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் தினமும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திருவண்ணாமலையில் ரூ. 38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 56 கோடி ரூபாய் செலவில் சாத்தனூர் அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் தினமும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும். திருவண்ணாமலை-திருப்பத்தூருக்கு ரெயில் சேவை வழங்கப்படும்.
புதியதாக அமைய உள்ள சுங்கச்சாவடி ரத்து செய்யப்படும். கடந்த 2014-ம் ஆண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயாக இருந்தது. இன்று சிலிண்டர் விலை 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தற்போது 100 ரூபாய் குறைப்பு என்ற நாடகத்தை மோடி அரசு நடத்தி உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் மீது 500 ரூபாய் விலையை ஏற்றி விடுவார்.
அவர்களின் நாடகத்தை மக்கள் நம்பாதீர்கள், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். 75 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசலும் வழங்கப்படும்.
ஜூன் 3-ந் தேதி முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள், ஜூன் 4-ந் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்.
கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக 40-க்கு 40 என்ற மகத்தான வெற்றி இலக்கை அடைய அனைவரும் அயராது உழைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன்
- அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது
பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என்று குழப்பமான பதிலை கூறினார்.
இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிரிக்க தொடங்கினர்.
மேலும், கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சவுமியா அன்புமணியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பேத்திக்கு திருமணம் நடைபெற்றது என்று அண்ணாமலை மாற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
- தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.
2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.
இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.
2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இதை தொடர்ந்து இந்த முறையும் தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.முக. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,
திமுக பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி செல்போனில் அரசியல் தேவையில்லை என்றும், மக்களை நேரில் சந்தியுங்கள் என்றும், செல்போனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என்றும், பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
- உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
- தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
சாத்தூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தூர் அரசினர் தொழிழ் பயிற்சி மைய உதவி பயிற்சி அலுவலர் சஞ்சய்காந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் உள்ள ஊஞ்சம்பட்டி விளக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிச்சைமணி (வயது 25) என்பதும், இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் ஏஜெண்டாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையைடுத்து இவரிடம் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதே போன்று கோபாலபுரம் பகுதியில் வெம்பக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரலிங்கம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணுசங்கர் (35) என்பவரிடமிருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் உரிய ஆவணம் இன்றி இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
- அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர்.
- மேலும், அகமதாபாத் ஐஐஎம்-வில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர்.
கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அண்ணாமலை கோவை தொகுதி வேட்பாளராக அறிவித்ததும், அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலைக்காக காத்திருக்கிறேன். எந்தமொழியிலும் பதில் அளிக்க தயார் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் எல்லா அடையாளம் கொடுத்த கோவைக்கு, சேவை செய்ய பா.ஜனதா வாய்ப்பு அளித்துள்ளது என அண்ணாலை தெரிவித்தார்.
அண்ணாலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார். தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம்-வில் படித்தவர்.
சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கு வயது 11. சிங்கை ராமச்சந்திரன் கல்லூரியில் 2002-ம் ஆண்டு சேருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். இறந்து போன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கித் தர முடியும்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர் சிங்கை ராமச்சந்திரன். அதுவுமா எம்.எல்.ஏ கோட்டா? என கேள்வி எழுப்பியுள்ளனர்
நீங்களாவது கேக்கலாம்ல. கம்முன்னு வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க... என வானதி ஸ்ரீனிவாசன் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை அடிக்கடி தான் மட்டும்தான் கஷ்டப்பட்டு படித்து வருவதாக பேசி வருகிறார். மேலும் மைக் பிடித்து பேசும்போது இல்லாதையெல்லாம் பேசி வருகிறார் என விமர்சனம் வைக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே வானதி ஸ்ரீனிவாசன் மகனும் பிஎஸ்ஜி கல்லூரியில்தான் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






