என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஈரான், ஈராக், சிரியா, ஏன் ஆகியன மீது கருப்பு நிறம் தீட்டப்பட்டு இருந்தது.
    • பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இஸ்ரேல் -இந்தியா உறவு வலுப்பெற்றுள்ளது.

    பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதகங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 43,000 திற்கும்அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 96,210 மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த போரை உலக நாடுகளும் ஐநாவும் தடுத்து நிறுத்த முயற்சித்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவதாக இல்லை. கடந்த ஒரு வாரத்தில் அளிப்பதாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவினருடன் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 700 ஐ தாண்டியுள்ளதால் மேலும் ஒரு போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்குழு கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தங்களது செயல்களை நியாயப்படுத்தி உரையாற்றினார். அப்போது தனது கைகளில் இரண்டு வரைபடத்தை ஏந்தி நேதன்யாகு தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத நாடுகளை வகைப்படுத்தியுள்ளார். நேதன்யாகு தனது வலது கையில் ஏந்தியிருந்த உலக வரைபடத்தில் வரைபடத்தில் மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், சிரியா, ஏன் ஆகியன மீது கருப்பு நிறம் தீட்டப்பட்டு இருந்தது. இந்த நாடுகள் சாபத்தை குறிப்பதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் அவரது வலது கையில் ஏந்தியிருந்த உலக வரைபடத்தில் வரைபடத்தில் இந்தியா, எகிப்து, சூடான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பச்சை வண்ணத்தில் இடம்பெற்றிருந்தன.இந்த நாடுகள் தங்களுக்குக் கிடைத்த வரமாக உள்ளதாக நேதன்யாகு குறிப்பிட்டார். நேதன்யாகு இவ்வாறு நாடுகளை வகைப்படுத்த வெவ்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவை வரம் என்று நேதன்யாகு குறிப்பிடுவதற்குப் பிரதமர் மோடியின் அரசின் கீழ் இஸ்ரேல் - இந்தியா நட்புறவும் பொருளாதார உறவும் வலுப்பெற்றுள்ளதே காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    குறிப்பாகப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளின் உறவு அதிகரித்துள்ளது. முன்னதாக ஆரமப காலங்களில் பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையை இந்தியா ஆதரித்து வந்திருந்தாலும், தற்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த எந்த தீர்மானத்தின் மீதும் இந்தியா வாக்களிக்க மறுத்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் ஐநாவில் நேதன்யாகு காட்டிய வரம், சாபம் ஆகிய இரண்டு உலக வரைபடத்திலும் பாலஸ்தீன் என்ற நாடு இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

     

    • பாலஸ்தீன மக்களை போல் ஜம்மு காஷ்மீர் மக்களும் சுதந்திரம், உரிமைக்காக போராடுவதாக பாகிஸ்தான் பிரதமர் பேச்சு.
    • பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தனது அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியது.

    ஐ.நா. பொதுசபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். அவரது 20 நிமிட பேசிய அவர் "பாலஸ்தீன மக்களை போல் ஜம்மு காஷ்மீர் மக்களும் அவர்களுடைய சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிவற்றிற்கான நூற்றாண்டு காலமாக போராடி வருகிறார்கள்" என்றார்.

    இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா சார்பில் பேசிய, ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி பவிகா மங்களநாதன் பயங்கரவாதம், போதைப்பொருள், வர்த்தகம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு உலகளாவிய நற்பெயரைக் கொண்ட ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு நாடு, "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைத் தாக்கும் துணிச்சலைக் கொண்டுள்ளது" என குற்றம்சாட்டினார்.

    ஐ.நா. சபையில் பவிகா மங்களநாதன் பேசும்போது கூறியதாவது:-

    வருந்தத்தக்க வகையில் இந்த சபை இன்று காலை ஒரு கேலிக்கூத்தாகக் காணப்பட்டது. பாகிஸ்தான் பிரதமரின் உரையில் இந்தியாவைப் பற்றி நான் பேசுகிறேன். உலகம் அறிந்தது போல், பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தனது அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியது. அது எங்களது பாராளுமன்றம், நிதித் தலைநகரம், மும்பை, சந்தைகள் மற்றும் புனித யாத்திரை இடங்களை தாக்கியுள்ளது. இதன் பட்டியல் மிகவும் நீளமானது. அப்படிப்பட்ட ஒரு நாடு வன்முறை பற்றி எங்கும் பேசுவது மிக மோசமான பாசாங்குத்தனம்.

    மோசடியான தேர்தல்களின் வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு, ஜனநாயகத்தில் அரசியல் தேர்வுகளைப் பற்றி பேசுவது இன்னும் அசாதாரணமானது.

    உண்மையான உண்மை என்னவென்றால், பாகிஸ்தானுக்கு எங்களது பிரதேசம் மீது பேராசை. உண்மையில், இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறது.

    இவ்வாறு பவிகா மக்களநாதன் பதிலடி கொடுத்தார்.

    • நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 79-வது கூட்டம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது என்றார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது. அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

    5 நிரந்திர உறுப்பினர்களான ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை எந்தவொரு முக்கிய தீர்மானத்தையும் வீட்டோ செய்ய அதிகாரம் கொண்டவை.

    இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆதரவு தெரிவித்து இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நிரந்தர உறுப்பினராக இந்தியாவை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆதரித்தார்.

    நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 79-வது கூட்டத்தின் பொது விவாதத்தில் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், "அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத் தயாராக இருக்கும், அதிக பிரதிநிதித்துவ அமைப்பாக ஐ.நா. மாற வேண்டும். பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாகக் காண விரும்புகிறோம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதிக இடங்கள் இருக்க வேண்டும்.

    நம்மிடம் ஒரு பாதுகாப்பு கவுன்சில் தடைசெய்யப்பட்டிருக்கும் வரை, ஒவ்வொரு தரப்பினரின் நலன்களுக்கும் ஏற்ப, நாம் முன்னோக்கிச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று கூறுவேன். எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் பயனுள்ளதாக்குவோம், முதலில் அவற்றை அதிக பிரதிநிதிகளாக்குவோம். அதனால்தான் பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது என்றார். 

    • துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
    • இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்து வருகிறது.

    குறிப்பாக பள்ளிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்ப வங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

    இந்தநிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் கையெ ழுத்திடுவேன். பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தடுப்பதற்கான பயிற்சிகளுக்கு உதவ எனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

    பின்னர் ஜோபைடன் கூறும்போது, அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்சினை பற்றி நாம் வெளிப்படையாக பேச வேண்டும்.

    அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது மிகவும் வேதனையானது என்றார்.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு தாக்குதலை தடுப்பதற்கான புதிய சட்டத்தில் ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார்.

    • அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
    • பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது

    உலக பணக்காரருக்கும் தொழிலதிபருமான 53 வயதாகும் எலான் மஸ்க்கும்  47 வயதாகும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் அவர்கள் இருவரின் புகைப்படங்கள் பரவி வருகிறது. நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில்  பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பாராட்டி பேசியுள்ளார்.

     

    வெளிப்புறத்தை விட உள்ளுக்குக்குள் அதிக அழகாக இருக்கும் ஒருவருக்கு, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி. மெலோனி உண்மையான நேர்மையான ஒருவர் என்று மஸ்க் அந்த விழாவில் மெலோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

    பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று அவர் மெலோனியை புகழும் வீடியோவையும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும்  பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

     

    • கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
    • ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

    நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சிகள் நடந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் மேடையில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். காதில் குண்டு உரசிச்ச சென்ற நிலையில் நூலிழையில் டிரம்ப் உயிர் தப்பினார். மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.

     

     

    இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி புளோரிடாவில் தனது சொந்தமான கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த டிரம்ப்பை மீது ரயான் வெஸ்லி ரூத் என்ற 58 வயது நபர் ஏகே 47 துப்பாக்கியால் சுட முயன்றார். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடியவே தப்பியோடிய அவரை போலீஸ் துரத்திப் பிடித்தது. தொடர்ந்து டிரம்ப் குறிவைக்கப்பட்டு வரும் நிலையில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு சதி காரணமா என்ற கேள்விகள் எழுந்தவரும் நிலையில் தனது உயிருக்கு ஈரான் நாட்டினால் அதிக அச்சுறுத்தல் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

     

    தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் கூறியதாவது, எனது உயிருக்கு ஈரானால் அச்சுறுத்தல் உள்ளது. மொத்த அமெரிக்க ராணுவமும் விழுப்புடன் காத்திருக்கிறது. ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆனால் மீண்டும் அவர்கள் என்னை கொல்ல முயற்சிக்கக்கூடும். இது யாருக்கும் நல்லதல்ல. இதற்கு முன் இருந்ததை விட என்னைச் சுற்று அதிக பாதுகாவலர்கள் ஆயுதத்துடன் எந்நேரமும் காவலுக்கு இருக்க வேண்டிய சூழல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டதும், அதற்கு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா ஈரானுக்கு அழுத்தம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

    • ஜனநாயகக் கட்சியின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
    • இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ-ப்ரீஸ்ட் டிரைவ் அருகே உள்ள கமலா ஹாரிசின் பிரச்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் மீது நள்ளிரவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்.
    • 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கடந்த 10-ம் தேதி இரு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருவரும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை முடிவு செய்ய அவ்வப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

    ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்தார்.

    இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் டிரம்பைவிட 38 புள்ளிகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    ஆசிய அமெரிக்க வாக்காளர்களிடையே டிரம்பை விட கமலா ஹாரிஸ் 38 சதவீத புள்ளிகளால் முன்னிலை வகிக்கிறார்.

    ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர். 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். வேறொரு வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் அல்லது முடிவு செய்யப்படாதவர்கள் 6 சதவீதம்.

    ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட 2024 ஆசிய அமெரிக்க வாக்காளர் கணக்கெடுப்பில், ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 46 சதவீதம் பேர் ஜோ பைடனை ஆதரித்தனர். 31 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர். அதே நேரத்தில் 23 சதவீதம் பேர் வேறு ஒருவருக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளோம் அல்லது முடிவு செய்யவில்லை என கூறினர்.

    அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து வெளியேறி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆன பிறகு நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பு இதுவாகும்.

    • நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரஷியா கருதியது
    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா வந்திருந்தார்

    குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்கா நோக்கிப் படையெடுத்தனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி அமெரிக்க சென்று நாடு திரும்பியுள்ளார். அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்கா வந்திருந்தார். பிரதமர் மோடியையும் ஜெலன்ஸ்கி சந்தித்தார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் ரஷியா போர் தொடர்ந்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவை சமாளித்து வருகிறது. மேலும் ரஷிய பகுதிகளில் நுழைந்தும் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் போர் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்க்டன் மாகாணத்தில் வைத்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போரில் அமைதிக்கு மிக அருகில் நெருங்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே போரை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

    மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதிய ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம்  உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்காவும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

    • இந்தியாவின் ஆதரவை மீண்டும் தெரிவித்தேன்.
    • ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒன்றாக வேலை செய்கிறோம்.

    நியூயார்க்:

    பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு கடந்த 22-ந்தேதி சென்றார். பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார்.

    பின்னர் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். மேலும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன்பின் நியூயார்க் சென்றடைந்த மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். மசாசு செட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்பாடு செய்த வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்று பேசினார்.


    இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையில் நடந்த எதிர்க்கால உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பிற நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது உக்ரைன்-ரஷியா இடையே நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் மோடிக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, "நியூயார்க்கில் உக்ரைன் அதிபரை சந்தித்தேன். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைனுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் முடிவுகளை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைனில் உள்ள மோதலை விரைவில் தீர்க்கவும், அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை மீட்டெடுக்கவும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் தெரிவித்தேன் என்றார்.


    இந்த சந்திப்பு குறித்து ஜெலென்ஸ்கி கூறும்போது, எங்கள் உறவுகளை தீவிரமாக வளர்த்து வருகிறோம். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒன்றாக வேலை செய்கிறோம்.

    எங்கள் பேச்சுவார்த்தையின் முக்கிய கவனம் சர்வதேச தளங்களில், குறிப்பாக ஐ.நா மற்றும் ஜி 20-ல் எங்கள் தொடர்புகளை மேம்படுத்துவது, அத்துடன் அமைதியை செயல்படுத்துவது ஆகும் என்றார்.

    கடந்த 3 மாதங்களில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது 3-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டார்.

    • ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்தது.
    • இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் கூறியுள்ளது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு லெபானானில் ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. தெற்கு லெபனானில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

    இதையடுத்து லெபனானில் 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்தது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மூடப்படுகின்றன.

    இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதிக்கு மேலும் படைகளை அனுப்ப உள்ளோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பென்டகன் அதிகாரி பாட் ரைடர் கூறுகையில், மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தாலும், மிகுந்த எச்சரிக்கை காரணமாகவும், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் நமது படைகளை அதிகரிக்க சிறிய எண்ணிக்கையிலான கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அதுதொடர்பான விவரங்களை வெளியிடவில்லை என தெரிவித்தார்.

    • நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • பிரதமர் மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.

    நியூயார்க்:

    பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். 3-வது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார்.

    அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி சென்றடைந்தார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றினார்.

    அதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், தனது பயணத்தின் போது பிரதமர் மோடி சில முக்கிய இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டார்.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்தது என பதிவிட்டுள்ளார்.

    ×