என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது
    • அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளது என்றார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் நாட்டின்மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க ராணுவத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.

    அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    இது தொடர்பாக அதிபர் பைடன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளசெய்தியில், இன்று காலை இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலைப் பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உள்பட இந்தத் தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் ஜி7 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.

    • அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது.
    • சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே [சண்டைபோட] விட்டுவிட வேண்டும்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அளித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைத்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மீதான தாக்குதலை முறியடிக்கும்படி அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் பைடன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது.

    இந்நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பேசிய டிரம்ப், இது மிகவும் மோசமானதாக உள்ளது. ஆனால் இது நடந்து தான் ஆக வேண்டும்.

     

    பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல இது உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே [சண்டைபோட] விட்டுவிட வேண்டும். ஆனால் நிச்சயம் இது மோசமான போர். இது எங்கு சென்று முடியும்? அவர்கள் [ஈரான்] 200 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர், இது நிச்சயம் நடக்கக்கூடாத ஒன்று, எனவே மத்திய கிழக்கில் நாம் [அமெரிக்கா] தலையிட்டாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
    • குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

    இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சிலை இன்று அகற்றப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த சிலையை வைத்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. 

    • போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • அதிநவீன டிரோனை ஏவுகணை மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

    அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

    அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான டிரோனை ஹவுதி கிளர்ச்சியளர்கள் சுட்டு வீழ்த்தினர். எம்.கியூ-9 என்ற அதிநவீன டிரோனை ஏவுகணை மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    • அமெரிக்காவில் சூறாவளியால் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை நெருங்கியது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி பலவீனமடைந்து வெள்ளி கிழமை கரையை கடந்தது.

    இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    பல வீடுகள், கட்டிடங்கள் சூறாவளியால் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். அவர்களில் மற்றவர்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினாவும் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்த பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 800 மத்திய அவசரகால மேலாண் கழக அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூறாவளியால் அமெரிக்காவில் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 'ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார்.
    • விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி கடுமையாகியுள்ளது.

    ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மீது தனிமனித ரீதியிலான தாக்குதலை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ளார்.


    இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டார்; கமலா அப்படித்தான் பிறந்தார் என்று விமர்சித்துள்ளார்.

    • வடமேற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ஐ.எஸ், அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

    அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்க ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலில் ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    • அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
    • பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை உருவாக்கியுள்ளார்

    அமெரிக்காவில் ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹான் லீ என்ற 42 வயது பெண், பாஸ்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

    அவர்களை மகிழ்விக்க ஆசியாவில் இருந்து பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை ஏற்படுத்தி இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி மிகப்பெரிய பாலியல் நெட்வொர்க் -ஐ ஹான் லீ உருவாக்கி சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தெரியவந்த தகவலை அடுத்து ஹான் லீ பெடரல் போலீசால் கைது செய்யப்பட்டார். பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கிளைன்ட்களிடம் சென்று வருவதற்காக ஏர்லைன் மற்றும் தங்குமிட வசதிகள், பெண்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள் என மிகவும் அட்வான்ஸ் ஆக இந்த தொழில் நடத்தப்பட்டுள்ளது. இவர்களது வலையில் விழுந்த உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகளிடம் இருந்து ஒரு மணி நேரத்துக்கு $350 to $600 டாலர்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீதிமன்றத்தில் ஹான் லீ மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ஹான் லீ தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் தான் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார். விசாரணையில் முடிவில் ஹான் லீக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 

    • பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும்
    • வன்முறை தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று முந்தினம் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில் நஸ்ரல்லாவின் மரணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நஸ்ரல்லாவின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை இது. பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காக அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனான் பொதுமக்கள் உட்பட அனைவரும் தற்போது நஸ்ரெல்லாவின் மரணத்தால் நீதி வழங்கப்பட்டுள்ளது.

    ஹிஸ்புல்லா, ஹமாஸ்,ஹவுதி மற்றும் ஈரானிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே லெபனானில் நடந்து வரும் வன்முறை தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே இஸ்ரேல் மற்றொரு அரசியல் படுகொலையை நிகழ்த்தியுள்ளதாக ரஷியா விமர்சித்துள்ளது.

    • நேற்று இரவு 10.47 மணிக்கு புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது
    • தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும்

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அவர்களை மீட்பதற்கான விண்கலம் நேற்று [செப்டம்பர் 28] இரவு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 120 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலம் க்ரூ-9 இல் இடம்பெற்ற 4 வீரர்களுடன் நேற்று இரவு 10.47 மணிக்கு புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும். 

    • சர்வதேச சமூகத்திற்கு ஆற்றிய பங்கை விட அதிக ஆதாயத்தை சில நாடுகள் பெற்று வருகின்றன.
    • பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை [ POK] மீட்பதே எங்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

    ஐ.நா. சபையின் 79 வது பொதுச்சபை  கூட்டம் நேற்று அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்றது. இதில் உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் கலந்துகொண்டு பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார்.

    ஐ.நா. கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது, மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை இந்தியா தொடர்ந்து சர்வதேச சமூகத்தை எச்சரித்து வருகிறது. உக்ரைன் மற்றும் காசா பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச சமூகத்திற்கு ஆற்றிய பங்கை விட அதிக ஆதாயத்தை சில நாடுகள் பெற்று வருகின்றன. பல நாடுகள் ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால் பின்தங்கியுள்ளன.

    ஆனால் சில நாடுகள் தெரிந்தே அழிவுப் பாதையை தேர்ந்தெடுகின்றன. உதாரணமாக எங்களின் அண்டை நாடான பாகிஸ்தானைச் சொல்லலாம். இல்லை கடந்த பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பாகிஸ்தானின் ஏற்றுமதியையும் இறக்குமதியையும் பயங்கரவாதத்தை வைத்தே அளவிட முடியும்.

     

     மற்ற நாடுகளுக்குத் தீமை நடக்க வேண்டும் என்று நினைத்த அவர்களின் கர்மாவினால் தான் இப்போது இந்த நிலையில் [பொருளாதார நிலையின்மையினால் ஏற்பட்ட வறுமையில்] பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் என்றும் வெற்றியடையாது. பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை [ POK] மீட்பதே எங்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

    • ஈரான், ஈராக், சிரியா, ஏன் ஆகியன மீது கருப்பு நிறம் தீட்டப்பட்டு இருந்தது.
    • பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இஸ்ரேல் -இந்தியா உறவு வலுப்பெற்றுள்ளது.

    பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதகங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 43,000 திற்கும்அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 96,210 மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த போரை உலக நாடுகளும் ஐநாவும் தடுத்து நிறுத்த முயற்சித்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவதாக இல்லை. கடந்த ஒரு வாரத்தில் அளிப்பதாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவினருடன் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 700 ஐ தாண்டியுள்ளதால் மேலும் ஒரு போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்குழு கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தங்களது செயல்களை நியாயப்படுத்தி உரையாற்றினார். அப்போது தனது கைகளில் இரண்டு வரைபடத்தை ஏந்தி நேதன்யாகு தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத நாடுகளை வகைப்படுத்தியுள்ளார். நேதன்யாகு தனது வலது கையில் ஏந்தியிருந்த உலக வரைபடத்தில் வரைபடத்தில் மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், சிரியா, ஏன் ஆகியன மீது கருப்பு நிறம் தீட்டப்பட்டு இருந்தது. இந்த நாடுகள் சாபத்தை குறிப்பதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் அவரது வலது கையில் ஏந்தியிருந்த உலக வரைபடத்தில் வரைபடத்தில் இந்தியா, எகிப்து, சூடான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பச்சை வண்ணத்தில் இடம்பெற்றிருந்தன.இந்த நாடுகள் தங்களுக்குக் கிடைத்த வரமாக உள்ளதாக நேதன்யாகு குறிப்பிட்டார். நேதன்யாகு இவ்வாறு நாடுகளை வகைப்படுத்த வெவ்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவை வரம் என்று நேதன்யாகு குறிப்பிடுவதற்குப் பிரதமர் மோடியின் அரசின் கீழ் இஸ்ரேல் - இந்தியா நட்புறவும் பொருளாதார உறவும் வலுப்பெற்றுள்ளதே காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    குறிப்பாகப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளின் உறவு அதிகரித்துள்ளது. முன்னதாக ஆரமப காலங்களில் பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையை இந்தியா ஆதரித்து வந்திருந்தாலும், தற்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த எந்த தீர்மானத்தின் மீதும் இந்தியா வாக்களிக்க மறுத்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் ஐநாவில் நேதன்யாகு காட்டிய வரம், சாபம் ஆகிய இரண்டு உலக வரைபடத்திலும் பாலஸ்தீன் என்ற நாடு இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

     

    ×