என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஜோ பைடன், தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் கையெழுத்திட்ட மொத்த நிர்வாக உத்தரவுகளின் எண்ணிக்கை வெறும் 162 மட்டுமே.
    • இந்த குறுகிய காலத்தில் டிரம்பிற்கு எதிராக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    உலகையே உலுக்கிய சர்ச்சைக்குரிய முடிவுகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகின்றன.

    டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல அதிரடி மாற்றங்களை உலகம் கண்டது. பல விஷயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறி நீதிமன்றம் சென்றன. இந்த குறுகிய காலத்தில் டிரம்பிற்கு எதிராக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வெறும் 100 நாட்களில், டிரம்ப் 140 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றில் 36 ஒப்பந்தங்கள் முதல் வாரத்திலேயே கையெழுத்திடப்பட்டன. அதே நேரத்தில் முந்தைய ஆட்சியாளர் ஜோ பைடன், தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் கையெழுத்திட்ட மொத்த நிர்வாக உத்தரவுகளின் எண்ணிக்கை வெறும் 162 மட்டுமே.

    ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றார். முதல் சில நாட்களில், மெக்சிகோ எல்லையில் 2,500 தேசிய காவல்படை உறுப்பினர்களுடன் 1,500 வீரர்கள் நிறுத்தப்பட்டனர். கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாய் இணைக்கப்படும் என்றும் கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பரம் என்ற பெயரில் பழிவாங்கும் வரிகளை விதிப்பதன் மூலம் டிரம்ப் சர்வதேச வர்த்தகப் போரை தொடங்கினார். எதிர்த்து நின்ற சீனா மீது 245 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் மீதான வரி 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீதான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் உட்பட மக்கள் இராணுவ விமானத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்திய குடிமக்கள் உட்பட அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 1,39,000 பேரை இதுவரை நாடு கடத்தியுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் ஒரு அமெரிக்க நீதிமன்றம் அந்த உத்தரவை அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி நிறுத்தி வைத்துள்ளது.

    தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. ஐஆர்எஸ் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட 60,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் டிரம்ப் நிர்வாகம் குறைந்தது 145,000 வேலைகளை நீக்கியுள்ளது.

    பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், காசா கைப்பற்றப்பட்டு ஒரு ஆடம்பரக் குடியிருப்பாக மாற்றப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க மதிப்புகளுக்கு எதிரானவை என்று முத்திரை குத்தப்பட்டன. போராடுபவர்களின் விசாக்களை ரத்து செய்து நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த 2021 இல் டிரம்ப் வெற்றி பெறாததால் வெள்ளை மாளிகையை தாக்கிய அவரது ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

    உலக சுகாதார அமைப்பு, காலநிலை ஒப்பந்தம் ஆகியவ்ற்றில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்தங்கிய நாடுகளுக்கான UNWRA நிதி நிறுத்தப்பட்டது. நாட்டில் இப்போது இரண்டு வகையான மக்கள் மட்டுமே இருப்பார்கள் என கூறி திருநங்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக டிரம்ப் கூறுகிறார். 100வது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மிச்சிகன் மாகாணத்தில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    • இந்திய வாமாசாவளியை சேர்ந்த அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்
    • க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார்.

     ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 இல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பல உலக தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய வாமாசாவளியை சேர்ந்த அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்

    காஷ் பட்டேல் கூறியதாவது,

    காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எப்.பி.ஐ இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்திய அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவோம். பயங்கரவாதத்தின் தீமைகளால் உலகம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை இந்த தாக்குதல் நினைவூட்டுகிறது என்றார்.

    ஏற்கனவே இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    • பஹல்காம் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்தது.
    • எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை என்றது.

    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.

    இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமானவர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை.

    ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்பட சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள பிற கடமைகள், பயங்கரவாதச் செயல்களால் ஏற்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அனைத்து நாடுகளும் அனைத்து வழிகளிலும் எதிர்த்துப் போராட வேண்டும்.

    நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • நியூ ஜெர்சி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
    • காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது.

    கடும் புகை மூட்டம் காரணமாக அவ்வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் இருந்து 5,000-க்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதையடுத்து அங்கு மாநில அளவிலான அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • ஜூலை 8 ஆம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது.

    இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா மாறக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

    அமெரிக்காவிலிருந்து இந்திய ஏற்றுமதிகள் மீதான 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 ஆம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் ஸ்காட் பெசன்ட் பேசியதாவது, "இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவை எட்ட உள்ளன.

    இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றியமைப்பதில்லை. எனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிக எளிதான விஷயமாகவே உள்ளது. வரி விதிப்பு விஷயத்தில் பிற நாடுகளும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும் என்று அதிபா் டிரம்ப் என்று விரும்புகிறாா்" என்று தெரிவித்தார். 

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
    • பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது இயல்பாகி விட்டது.

    காஷ்மீரில் உள்ள சுற்றுலா பகுதிகளான ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடக்கின்றன.

    ஆகவே, அமெரிக்கர்கள் யாரும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்ல வேண்டாம். (கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகரான லேவுக்கு செல்ல விலக்கு அளிக்கப்படுகிறது).

    மேலும், துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்புள்ளதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

    • கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது.
    • இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம்.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, தற்போது உக்ரைனுடன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கர வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

    சமீபத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் கீவ் மீதான தாக்குதலை தொடர்ந்து புதினை டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம். புதின், நிறுத்துங்கள்..! வாரத்திற்கு 5 ஆயிரம் வீரர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிக்கலாம்..!

    இவ்வாறு டிரம்ப் தனது TRUTH சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார்.
    • பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ஃபவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    26 பேரின் உயிரைக் குடித்த காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் இந்தி வாணி கபூர் நடிக்கும் 'அபிர் குலால்' படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

    இந்தப் படம்  மே 9, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 'அபிர் குலால்' இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமிட்டு எடுக்கப்பட்ட படம்.

    இந்தப் படத்தில் ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார். இது தவிர, சோனி ரஸ்தான், ஃபரிதா ஜலால், லிசா ஹேடன் மற்றும் ராகுல் வோஹ்ரா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் அவரின் 'அபிர் குலால்' படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்துள்ளன.

    மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கமும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ஃபவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    • அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக டாட்ஜ் என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
    • அதன் செயல் தலைவராக டெஸ்லா நிறுவன அதிபரான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.

    அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

    அரசு ஊழியர்கள் பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே, டிரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கின. நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 சதவீதம் வரை டெஸ்லாவின் லாபம் குறைந்தது.

    இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதைக் குறைத்து கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார்.

    அடுத்த மாதத்துக்குள் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறி விடுவேன் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

    • டெல்டா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விமானத்தில் இருந்த 300 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது
    • நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம்

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது,  இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர்.

    மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது.

    ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.

    நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறது.
    • அவரது நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.

    அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின

    இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.

    அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    ×