என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்காவில் மழை"

    • குவாடலூப் நதியின் நீர்மட்டம் சில நிமிடங்களில் கிடுகிடுவென உயரும் வீடியோ வெளியாகியுள்ளது.
    • 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும்

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதாவது சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. 160க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கனமழையால் குவாடலூப் நதியின் நீர்மட்டம் சில நிமிடங்களில் கிடுகிடுவென உயரும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2 மணிநேரத்தில் 33 அடி வரை நதியின் நீர் மட்டம் உயர்ந்ததாக டெக்சாஸ் அரசு கூறியுள்ளது.

    • சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்துள்ளது.
    • டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதாவது சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இதில் 28 குழந்தைகளும் அடக்கம்.

    மேலும் 41 பேர் மாயமானதாக கூறப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    • பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
    • மீட்புப் பணியில் 400 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அப்பகுதியில் 25 செ.மீ. மழை பெய்தது. சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலூப் நதி நீர்மட்டம் 2 மணி நேரத்தில் பல அடி உயர்ந்தது.

    இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் நடந்த கோடைக்கால முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இருந்தனர். அவர்களில் 23 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணியில் 400 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    9 மீட்புக் குழுக்கள், 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 டிரோன்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எந்த வானிலை முன்னறிவிப்புமின்றி திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

    • தொடர்ந்து பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • கொலராடா, அர்சான் சஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகள் சூறாவளி காற்றுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன.

    டெக்சாஸ்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடுமையான சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. கட்டிடங்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியது. ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது.

    தொடர்ந்து பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கொலராடா, அர்சான் சஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகள் இந்த சூறாவளி காற்றுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன. ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 3 பேர் பலியாகி விட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    ×