search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆப்கானிஸ்தானில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பிய மாணவிகள்

    2 மாதங்களுக்கு பின்னர் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள்கைப்பற்றினார்கள்.

    இதையடுத்து பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. 2 மாதங்களுக்கு பின்னர் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் இன்று பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    12 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் இன்று பள்ளிக்கு திரும்பினார்கள்.

    இதையும் படியுங்கள்... 400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி இலக்கை அடைந்த இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

    Next Story
    ×