search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashraf Ghani"

    பாகிஸ்தான் பெயரைக்குறிப்பிடாமல், ஆப்கானிஸ்தான் உள் விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடு கூடாது என்பதை 8 நாடுகளும் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் கலந்து கொண்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தை, டெல்லியில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சீனாவையும், பாகிஸ்தானையும் இந்தியா அழைத்தும் அந்த நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த பேச்சுவார்த்தையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல் தொடங்கி வைத்து பேசினார். இந்த கூட்டத்தில் இந்தியா உள்பட 8 நாடுகள் சேர்ந்து கூட்டு பிரகடனம் வெளியிட்டன. அதில், “ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு, பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுவதற்கு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது” என கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பெயரைக்குறிப்பிடாமல், ஆப்கானிஸ்தான் உள் விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடு கூடாது என்பதை 8 நாடுகளும் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலாவுடன் ரஷியா, ஈரான், 5 மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிற தலிபான்களின் நிர்வாகம் அங்கு வந்து விட்டது. தலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததைத்தொடர்ந்து, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு சொத்துகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கிகளும் முடக்கி உள்ளன. சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.

    இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. இந்த நிலையில் புதிய நெருக்கடியாக, அங்கு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதற்கு தலிபான்கள் அதிரடியாக தடை விதித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்” என கூறி உள்ளார். பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான்கள் கூறி உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதிபர் அஷரப் கானியின் பதவிக் காலத்தை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #Afghanpresident #Afghansupremecourt #AshrafGhani #AshrafGhaniterm
    காபுல்:

    தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பபட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நியாயமான வகையில் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், புதிய வாக்களர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

    ஆப்கானிஸ்தான்  நாட்டின் அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 20-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் திடீரென்று ஜூலை 20-ம் தேதிக்கும் பின்னர் செப்டம்பர் 28-ம் தேதிக்கும் அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதால் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து, புதிய அதிபர் பதவியேற்கும் வரை அதிபர் அஷரப் கானியின் பதவிக் காலத்தை நீட்டிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #Afghanpresident #Afghansupremecourt #AshrafGhani  #AshrafGhaniterm 
    ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தலீபான்களை சமரச பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷரப் கனி அழைத்து உள்ளார். #Afghanistan #AshrafGhani
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, தலீபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, “வன்முறையானது, மக்களின் இதயங்களையும், மனங் களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக தலீபான் களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீபான்கள் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டுப் போரில், முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர்.



    இது வரை இல்லாத வகையில் அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை. அதுமட்டுமின்றி, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பொது மக்களுடனும் தலீபான்கள் ‘செல்பி’ படங்கள் எடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆப்கானிஸ்தான் மக் களிடையே இந்த போர் நிறுத்தம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். இந்த சம்பவத்தை தவிர போர் நிறுத்த காலத்தில் அமைதி நிலவியது.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மேலும் 9 நாட்களுக்கு நீட்டித்து அதிபர் அஷரப் கனி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு பற்றி உடனடியாக தலீபான்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு அதிபர் அஷரப் கனி டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, “தலீபான்களுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. தலீபான்கள் முன் வைத்து உள்ள அனைத்து பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து சமரச பேச்சுவார்த்தையின்போது விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறும்போது, “ரம்ஜான் நிகழ்ச்சியில் தலீபான்களும், அரசு அதிகாரிகளும் ஒன்றாக கலந்து கொண்டது, நாம் அனைவரும் சமாதானத்துக்காகத்தான் உள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது” என்றும் கூறினார்.

    போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பாக டுவிட்டரில் அதிபர் அஷரப் கனி ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

    அதில் அவர், “ஆப்கானிஸ்தான் தலீபான்களும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போர் நிறுத்தத்தின்போது, காயம் அடைந்த தலீபான்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்போம். தேவையான மனித நேய உதவிகளையும் செய்வோம். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலீபான்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும், சந்திக்கவும் அனுமதிக்கப் படும்” என கூறி உள்ளார்.

    இரு தரப்பு சமரச முயற்சிகளை அமெரிக்கா வரவேற்று உள்ளது.

    இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குறிப்பிடுகையில், “ஆப்கானிஸ்தான் போருக்கு முடிவு கட்டுகிற வகையில், இரு தரப்பினரும் சமரச உடன்பாடு, அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #Afghanistan #AshrafGhani #Tamilnews
    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ரஷித் கான் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த சொத்து என பாராட்டு தெரிவித்துள்ளார். #RashidKhan #AshrafGhani SunRisersHyderabad
    காபுல்:

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷீத்கான். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். நேற்று நடைபெற்ற இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசியதோடு, அதிரடியாக பேட்டிங்கும் செய்தார்.

    அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 10 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். இதில் 2 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். தொடர்ந்து பந்துவீசிய அவர் 4 ஓவரிகளில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அதோடு இரண்டு கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் மூலம் விக்கெட்கள் விழவும் காரணமாக இருந்தார். இதனால் தான் ஒரு பந்துவீச்சாளர் மட்டுமல்ல, சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை ரஷித் கான் நிரூபித்து விட்டார் என பலரும் கூறி வருகின்றனர்.

    ஐபிஎல் போட்டிகளில் அவர் இதுவரை 21 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். 20 ஓவர் போட்டிகளை பொருத்தவரை ரஷித் கான், உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

    இந்நிலையில், அப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 



    இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-

    நமது கதாநாயகனான ரஷித் கானினால், ஆப்கானிஸ்தான் முழு பெருமை கொள்கிறது. எங்கள் வீரர்களை தங்கள் திறமையை காட்ட ஒரு தளத்தை வழங்கிய எங்கள் இந்திய நண்பர்களுக்கு நன்றியுடன் இருக்கிறேன். ஆப்கானிஸ்தானின் சிறப்பு என்ன என்பதை ரஷித் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் கிரிக்கெட் உலகிற்கு ஒரு சொத்தாகவே இருக்கிறார். நாம் அவரை விட்டு கொடுக்க போவதில்லை.

    இவ்வாறு அஷ்ரப் கானி கூறியுள்ளார்.#AshrafGhani #RashidKhan #Afghanistanspinner SunRisersHyderabad
    ×