search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் தாக்குதல்"

    • தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில்
    • நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வன்முறைகள் குறைந்த போதிலும், ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. தலிபான் ஆதரவு அதிகாரிகளை குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.

    இந்நிலையில், பால்க் மாகாணத்தின் ஆளுநர் அலுவலகத்தில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதி புகுந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த கொடூர தாக்குதலில் ஆளுநர் முகமது தாவூத் முஜமில் கொல்லப்பட்டார். அவருடன் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர்.

    தலிபான் ஆட்சிக்கு வந்தபிறகு கொல்லப்பட்ட மூத்த தலிபான் அதிகாரி முகமது தாவூத் முஜமில் ஆவார். இவர் இதற்கு முன்பு கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக பதவியில் இருந்தபோது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரை வழிநடத்தினார். கடந்த அக்டோபர் மாதம் அவர் பால்க் மாகாணத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நபிஜாதா அச்சமற்ற சாம்பியன் என்று முன்னாள் எம்.பி. மரியம் சோலைமான்கில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
    • இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறியவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கியிருப்பதாக காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    நபிஜாதா அச்சமற்ற சாம்பியன் என்று முன்னாள் எம்.பி. மரியம் சோலைமான்கில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "நபிஜாதா உண்மையான வழிகாட்டியாக திகழ்ந்தவர். வலிமையான, வெளிப்படையாகப் பேசுபவர். ஆபத்து சூழ்ந்தபோதும், நம்பியவர்களுக்காக நின்றவர். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர் தனது மக்களுக்காக இங்கேயே தங்கியிருந்து போராடுவதை தேர்ந்தெடுத்தார்" என மரியம் கூறியிருக்கிறார்.

    கிழக்கு மாகாணமான நங்கர்ஹரில் வசித்து வந்த நபிஜாதா (வயது 32), கடந்த 2018ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வாஷிங்டன்:

    அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை பல ஆண்டுகளாக அமெரிக்க படை தேடி வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பவரை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி தான் வசித்த வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் பால்கனி அருகே வரும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

    அல்-ஜவாஹிரி மீது மட்டும் தாக்குதல் நடத்த வேண்டும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்த அமெரிக்கா, துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்தியது.

    இந்த ஏவுகணை எம்.க்யூ-9 ரீப்பர் டிரோனில் (ஆளில்லா விமானம்) பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதிநவீன கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஆளில்லா விமானம். இலக்கின் மேலே பறந்து செல்லும்.

    லேசர் கருவி பொருத்தப்பட்ட ஆர் 9 எக்ஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்படும். இலக்கின் மீது மோதுவதற்கு முன்பு ஏவுகணையின் பக்க வாட்டில் இருந்தது 6 பிளேடுகள் வெளியாகும். அதன்பின் இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது மோதும் ஏவுகணை அவரது உடலை துண்டு துண்டாக்கி விடும். ஏவுகணை வெடிக்காது.

    இதன்மூலம் இலக்கு மட்டும் அழிக்கப்படும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நவீன ஏவுகணையை தான் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்தியது. தாக்குதலின்போது அல்-ஜவாஹிரி வீட்டில் அவரது உறவினர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    அல்-ஜவாஹிரி மட்டும் கொல்லப்பட்டார். முதலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பின் ஆர்-9-எக்ஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அல்-ஜவாஹிரியை கொல்ல இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு முன்பு ஆர்-9-எக்ஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

    சிரியாவில் அல்-கொய்தா கமாண்டர் அபு அல்-கைர் அல்-மஸ்ரி காரில் சென்றபோது அந்த விமானம் மீது ஆர்-9-எக்ஸ் ஏவுகணையால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக புகைப்படங்களில் காரின் மேல்புறத்தில் ஓட்டை இருந்தது. காரின் முன் மற்றும் பின்புறத்தில் எந்த சேதமும் ஏற்பட வில்லை.

    அல்-ஜவாஹிரி இந்த ஆண்டு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக காபூலில் உள்ள வீட்டுக்கு இடம்பெயர்ந்ததை அமெரிக்க உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அது அல்-ஜவாஹிரி தானா என்பதை உறுதிப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டனர். அல்-ஜவாஹிரி தனது வீட்டு பால்கனிக்கு வரும் போது அவரது முகத்தை புகைப்படம் எடுத்து ஸ்கேன் செய்து அது அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

    பின்னர் தாக்குதலுக்கான திட்டம் மே மாதம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி வீட்டின் கட்டமைப்பு, அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.
    • ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது.

    அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.

    இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த பங்களிப்பும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்.

    இதனால் ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி ஆளில்லா விமானம் இயக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் டிரோன் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்றதாகவும், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-ஜவாஹிரி, பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துள்ளார். அவர் வசித்த பகுதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ளது.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதற்காக நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிதியை பெற முயற்சித்து வருகிறது.

    இதற்கிடையே அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதாகவும், இதன் மூலம் அமெரிக்காவிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம் என்ற காரணத்தால் பாகிஸ்தான் அதற்கு சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் குறித்து பாகிஸ்தான் தகவல்கள் அளித்து இருக்கிறது. இதுகுறித்து சில நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவிடம் நட்புறவை பெறவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவைகளிடம் இருந்து நிதி உதவி பெறவும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது என்றனர்.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
    • அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அல் கொய்தா இயக்க தலைவன் கொல்லப்பட்டான்.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அங்கு பதுங்கி இருந்த அல்-கொய்தா இயக்கத்தின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டான்.

    அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவன் அய்மான் அல்-ஜவாரி என்பதும், அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவனை தேடி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அல்-கொய்தா இயக்கத்தின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இன்று அறிவித்தார்.

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும், பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

    தாலிபான் அமைப்பினரை பணியவைத்து அவர்களை அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்கும் நோக்கில் பயங்கரவாதிகளின் மீதான வான்வழி தாக்குதலை அமெரிக்கா அதிகரித்துள்ளது. மேலும், ஆப்கன் விமானப்படைக்கும் உதவி வருகிறது.  

    இந்நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள சர்தாரா எனும் இடத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஆனால், இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்க படையினரா? அல்லது ஆப்கானிஸ்தான் படையினரா? என உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ரத்மனிஷ் தெரிவித்தார். 

    இதற்காக, தாக்குதல் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொள்வதற்காக காபூலில் இருந்து விசாரணை குழு அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 
    ×