என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ஈரானில் பள்ளிக்கூடம் மீது போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது: 3 பேர் பலி
Byமாலை மலர்22 Feb 2022 1:43 AM GMT (Updated: 22 Feb 2022 1:43 AM GMT)
கொரோனா காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டு, மாணவர்கள் யாரும் இல்லாதததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெஹ்ரான் :
ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில், தப்ரிஸ் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்-5 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் மட்டும் இருந்தனர்.
கிளம்பிய சிறிது நேரத்தில், தப்ரிஸ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு மேலே பறந்து கொண்டிந்தபோது விமானம் திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதை தொடர்ந்து, விமானம் குடியிருப்பு பகுதியில் விழுவதை தவிர்க்க அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர். எனினும், பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் மீது விமானம் விழுந்தது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும், விபத்து நடந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரும் பலியாகினர்.
கொரோனா காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டு, மாணவர்கள் யாரும் இல்லாதததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில், தப்ரிஸ் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்-5 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் மட்டும் இருந்தனர்.
கிளம்பிய சிறிது நேரத்தில், தப்ரிஸ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு மேலே பறந்து கொண்டிந்தபோது விமானம் திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதை தொடர்ந்து, விமானம் குடியிருப்பு பகுதியில் விழுவதை தவிர்க்க அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர். எனினும், பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் மீது விமானம் விழுந்தது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும், விபத்து நடந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரும் பலியாகினர்.
கொரோனா காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டு, மாணவர்கள் யாரும் இல்லாதததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X