என் மலர்
நீங்கள் தேடியது "விமான விபத்து"
- மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.
- ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது.
மும்பை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று, மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.
அப்போது ஐதராபத்தில் இருந்து இண்டிகோ விமானம் பயணிகளுடன் ஓடுபாதையில் வந்திறங்கியது. இதன் போது இரு விமானிகளும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன.
இதில் இரண்டு விமானங்களின் இறக்கை முனைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்தைத் தொடர்ந்து பயணம் ரத்து செய்யப்பட்டு, விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளை அவர்களது இடங்களுக்கு அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
விமானங்கள் ஓடுபாதையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
- திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்தனர்.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்தார்.
- கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்?
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது அவரின் தனிவிமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த அவரது பாதுகாவலர், 2 விமானிகள், விமான பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.
நடப்பு உள்ளாட்சி தேர்தலில் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ், பல இடங்களில் எதிரணியில் உள்ள சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. எனவே பிரசாரங்களில் அஜித் பவார் தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியை எதிர்த்தே பேசி வந்தார். பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக அஜித் பவார் பேசி வந்தார்.
இந்த நிலையில் அஜித் பவாரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. விபத்து நடந்த அன்றே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார்.
உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத் கூறுகையில், "பாஜகவின் ஊழல்கள் குறித்த ஒரு ரகசிய கோப்பு தன்னிடம் இருப்பதாக ஜனவரி 15 அன்று அஜித் பவார் தெரிவித்திருந்தார். அதை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார். அவர் பேசிய 10 நாட்களுக்குள் இந்த விபத்து நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும், இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
விபத்தில் சிக்கிய அந்த விமானத்திற்கு முறையான பராமரிப்பு சான்றிதழ் இல்லை. கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்? என இதுபோன்ற பல குழப்பங்கள் நிலவுவதாக சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அமோல் மித்காரியும் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், "அஜித் பவாரின் உடல் அடக்கம் கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் அவரது மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அனைவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவசரம் இருந்தது. மகாராஷ்டிராவின் 80 சதவீத மக்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே நம்புகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
சரத் பவார் இதனை ஒரு விபத்து என்று கூறினாலும், மற்ற எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய அரசியல் சதியாகவே பார்க்கின்றன. இது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
- அந்தச் சுவிட்ச் தானாகவே 'Cut-off' நிலைக்குச் சென்றதால், எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம் இருந்தது.
- ஏர் இந்தியா தனது அனைத்து போயிங் 787 விமானங்களையும் பரிசோதனை செய்திருந்தது.
லண்டனிலிருந்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் இன்று மாலை பெங்களூரில் தரைறயிறங்கியது.
பின்னர் அடுத்த பயணத்திற்கு விமானம் சிறித நேரம் கழித்து புறப்பட தயாரானது. ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக, எரிபொருள் சுவிட்ச் தானாகவே 'Run' நிலையில் இருந்து 'Cutoff' நிலைக்கு மாறியிருக்கிறது.
அந்தச் சுவிட்ச் தானாகவே 'Cut-off' நிலைக்குச் சென்றதால், எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம் இருந்தது.
கோளாறு கண்டறியப்பட்டவுடன் பயணம் ரத்து செய்யப்பட்டு விமானம் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு ஏர் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து விடுதி ஒன்றின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
அந்த விபத்திற்கும் இந்த எரிபொருள் சுவிட்ச் கோளாறுதான் முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டது.
அகமதாபாத் விபத்திற்குப் பிறகு ஏர் இந்தியா தனது அனைத்து போயிங் 787 விமானங்களையும் பரிசோதனை செய்திருந்தது.
இருப்பினும், தற்போது மீண்டும் அதே போன்ற கோளாறு ஒரு விமானத்தில் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விமானி மும்பையின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
- சுமித் கபூரின் கையில் இருந்த பிரேஸ்லெட் மூலமாகவே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாராமதிக்கு அவர் சென்றுகொண்டிருந்த 'லியர் ஜெட் 45' விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதை அருகே விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில் அஜித் பவார், அவரின் பாதுகாவலர், விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி மற்றும் துணை பெண் விமானி, பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த விமானி சுமித் கபூரின் மரணம் குறித்த ஒரு சோகமான தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மையில், விபத்துக்குள்ளான அந்த 'லியர் ஜெட் 45' விமானத்தை அன்று கேப்டன் சுமித் கபூர் ஓட்ட வேண்டியதே கிடையாது.
அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விமானி மும்பையின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியும் அந்த விமானி வராததால், சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சுமித் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஹாங்காங்கில் இருந்து சில நாட்களுக்கு முன்பே இந்தியா திரும்பியிருந்த அவர், நிறுவனத்தின் உத்தரவை ஏற்று அஜித் பவாரை பாராமதிக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார்.
விபத்து நடந்த இடத்தில் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்து போயிருந்தன. சுமித் கபூரின் கையில் இருந்த பிரேஸ்லெட் மூலமாகவே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
வானிலை மோசமாக இருந்ததால் விமானியின் கணிப்பு தவறாக இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டாலும், சுமித்தின் நண்பர்கள் அதை மறுக்கின்றனர்.
அவருக்குப் பல ஆயிரம் மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இருப்பதால், அவர் தவறு செய்ய வாய்ப்பில்லை என்றும், ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நடந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சுமித் கபூரின் மகன் மற்றும் மருமகனும் விமானிகளாகப் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விமானத்தில் 2 விமான ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் எம்.பி., என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கொலம்பியாவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானத்தில் எம்.பி. உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெனிசுலா எல்லையையொட்டிய பகுதியில் கொலம்பியா அரசுக்கு சொந்தமான சதேனா நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த விமானம் விபத்துக்குள்ளானது. குகட்ட நகரில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 2 விமான ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் எம்.பி., என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் விமானம் கீழே விழுந்துவெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், விமானம் தரையில் மோதிய அடுத்த நொடியே மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பு எழுவதும், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்வதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
- அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
- மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், அஜித் பவார் மரண விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம்.
இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்றார்.
- கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் தனது சகோதரருடன் பயணம் செய்த நடிகை சவுந்தர்யா விபத்தில் உயிரிழந்தார்.
- இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
* 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி, சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் உள்ள மவுண்ட் பிளாங்கில் ஏர் இந்தியா விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் முன்னோடி அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா உயிரிழந்தார்.
* 1973-ம் ஆண்டு மே 31-ந் தேதி, டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் எம்.பி. சுரேந்திர மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார்.
* 1980-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி, டெல்லியில் விமான சாகசத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கோர விபத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனும், ராஜீவ்காந்தியின் சகோதரருமான சஞ்சய் காந்தி உயிரிழந்தார்.
* 2001-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மோசமான வானிலை காரணமாகத் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் ரெயில்வே மந்திரி மாதவ்ராவ் சிந்தியா உயிரிழந்தார்.
* 2002-ம் ஆண்டு மார்ச் 3-ந் தேதி, ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பெல் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில், பாராளுமன்றத்தின் 12-வது சபாநாயகராக இருந்த ஜி.எம்.சி.பாலயோகி மரணமடைந்தார்.
* 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் தனது சகோதரருடன் பயணம் செய்த நடிகை சவுந்தர்யா விபத்தில் உயிரிழந்தார்.
* 2005-ம் ஆண்டு மார்ச் மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அரியானா முன்னாள் மின்துறை மந்திரி ஓ.பி.ஜிண்டால் மற்றும் முன்னாள் வேளாண் மந்திரி சுரேந்தர் சிங் ஆகியோர் பலியாகினர்.
* 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி, ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, நல்லமலா வனப்பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
* 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முன்னாள் முதல்-மந்திரி டோர்ஜி காண்டு இறந்தார்.
* 2021-ம் ஆண்டு, டிசம்பர் 8-ந் தேதி, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் இருந்து சென்றபோது நீலகிரியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
* 2025-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உயிரிழந்தார்.
* 2026-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் விமானம் வெடித்துச் சிதறியதில் மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
- அஜித் பவாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட பலர் இறந்த செய்தி மிகவும் துயரமானது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஜித் பவாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட பலர் இறந்த செய்தி மிகவும் துயரமானது. அஜித் பவாரின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு, குறிப்பாக கூட்டுறவுத் துறையில், பவார் ஆற்றிய சிறப்புப் பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் உயிர் இழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த வலியைத் தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும் என்று கூறியுள்ளார்.
- அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன் விமானத்தில் இருந்த மேலும் 5 பேரும் பலியானார்கள்.
இந்த உருக்கமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளார். துணை முதல்-மந்திரிகளாக அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் சிறிய வகை விமானங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அஜித்பவாரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.
அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று பாராமதி தொகுதியில் 4 இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து லியர் ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் (வி.டி-எஸ்.எஸ்.கே.) பாராமதிக்கு புறப்பட்டார். அவருடன் 2 பாதுகாப்பு அதிகாரிகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 5 பேர் சென்றனர்.
இன்று காலை 8.48 மணியளவில் அந்த சிறிய ரக விமானத்தை விமானி பாராமதி விமான நிலையத்தில் 11-வது ஓடுபாதையில் தரை இறக்க முயற்சித்தார். அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி தரையில் மோதி 2 ஆக உடைந்து நொறுங்கியது. விமானம் மோதிய வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
உடனடியாக தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைத்து அஜித்பவார் உள்பட 6 பேரையும் மீட்டு அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜித் பவார் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதே போல் அஜித்பவாருடன் சென்ற 5 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
- விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
- இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன் விமானத்தில் இருந்த மேலும் 5 பேரும் பலியானார்கள்.
இந்த நிலையில், அஜித் பவார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் பலர் ஒரு துயரமான விமான விபத்தில் இறந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
சோகத்தின் அளவை ஜீரணிக்க கடினமாக உள்ளது. சரத் பவார் மற்றும் இந்த கொடூரமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.






