என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விமான விபத்து"
- என்ஜின்களில் ஒன்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
- டேக் ஆஃப் ஆன சமயத்தில் விபத்தில் சிக்கியது.
15 பேருடன் புறப்பட்ட ரஷிய ராணுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் டேக் ஆஃப் ஆன போது விபத்தில் சிக்கியது. இல்யூஷின் 76 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ என்ற பகுதியில் சென்ற போது, என்ஜினில் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
"IL-76 ராணுவ போக்குவரத்து விமானம் இவானோவோ பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் எட்டு பேரும், ஏழு பயணிகளும் இருந்தனர்," என்று ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக விமானம் விபத்தில் சிக்கியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான சம்பவ இடத்திற்கு ராணுவ குழு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விபத்தில் சிக்கிய பயணிகள் மற்றும் பணியாளர்களின் நிலை என்னவென்று இதுவரை எந்த தகவலும் இல்லை.
- சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.
- விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 777 ஜெட்லைனர் ஜப்பானுக்குப் புறப்பட்டது.
விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் திடீரென விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று கீழே விழுந்தது. இதில், விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் கார் பார்க்கிங்கிற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
போயிங் 777 விமானத்தில், தரையிறங்கும் ஸ்ட்ரட்கள் ஒவ்வொன்றிலும் ஆறு சக்கரங்களைக் கொண்டுள்ளது. இதில், சக்கரம் காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
- பம்பார்டியர் சேலஞ்சர் ரக சிறு விமானத்தில் 5 பேர் பயணித்தனர்
- இன்டர்ஸ்டேட்-75 நெடுஞ்சாலையில் பைன் ரிட்ஜ் சாலையில் விமானம் விழுந்தது
அமெரிக்காவின் ஓகையோ (Ohio) மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து பம்பார்டியர் சேலஞ்சர் 600 ரக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டு, புளோரிடாவின் நேபிள்ஸ் (Naples) விமான நிலையத்தில் தரையிறங்கி, மீண்டும் அங்கிருந்து ஃபோர்ட் லாடர்டேல் எக்ஸிக்யூடிவ் விமான நிலையத்திற்கு செல்வதாக இருந்தது.
இந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர்.
புளோரிடா விமான நிலையத்தை நெருங்கும் போது இரு எஞ்சின்களும் செயலிழந்ததாக விமானி தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கும்படி அறிவுறுத்தி, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நேபிள்ஸ் நகர இன்டர்ஸ்டேட்-75 (Interstate-75) நெடுஞ்சாலையில், பைன் ரிட்ஜ் சாலை பகுதியில் விழுந்தது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பிக்-அப் டிரக் வாகனத்தின் மேல் இடித்து, நெடுஞ்சாலையை தொட்டு, சுமார் 30 அடி தூரம் அங்குமிங்கும் ஓடி, பெரிய கான்க்ரீட் சுவற்றின் மீது மோதியது.
இதை தொடர்ந்து அந்த விமானம் தீப்பிடித்து எறிந்தது. இந்த விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
விமானம் மோதியதில் டிரக்கின் மேற்பகுதி உடைந்தது. மோதிய அதிர்ச்சியில் அந்த டிரக் நிலைதடுமாறி ஓடி, சாலையில் கவிழ்ந்தது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அதன் ஓட்டுனர் உயிர் தப்பினார்.
விமானம் விழுவதை கண்டு உதவ முன் வந்த பொதுமக்கள், அது தீப்பிடித்ததை கண்டு அங்கிருந்து ஓடிச் சென்றனர்.
இதை தொடர்ந்து, சாலையின் இருபுறமும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய வான்வழி போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றன.
- தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.
- மத்திய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்வார்கள் என தகவல்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொபைல் ஹோம் பார்க்கில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்தவர்களும், வீட்டில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒற்றை எஞ்சின் கொண்ட பீச்கிராஃப்ட் பொனான்சா வி35 விமானத்தின் பைலட், விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரம் முன்பு எஞ்ஜின் செயலிழந்தது என்று அறிவித்ததாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.
வீட்டின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீக்கு இரையானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.
இதுகுறித்து கிளியர்வாட்டர் தீயணைப்புத் தலைவர் ஸ்காட் எஹ்லர்ஸ்," விபத்துக்குள்ளான விமானம் ஒரே கட்டமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டது," என்றார்.
இந்த விபத்தில், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. என்றாலும் விமானம் விழுந்த வீட்டிலும், விபத்தில் சிக்கிய விமானத்திலும் பலர் இருந்ததாக தெரியவந்துள்ளது.
மத்திய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
- மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஸா பாலோ:
பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு அந்த விமானம் வந்து கொண்டிருந்தது.
பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரைவில் விழுந்து நொறுங்கியது. புல் மற்றும் மரங்களால் சூழப்பட்ட பகுதியில் அந்த விமானம் விழுந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகி விட்டனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது வரை இறந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களும் சேகரிக்கபட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- மியான்மர் ராணுவத்தினர் மிசோரமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- அவர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்.
இந்தியா- மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான விலையத்தில் மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானியுடன் 14 பேர் இருந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
மியான்மரில் ராணுவத்தினருக்கும், இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இனக்குழுவினருக்கு பயந்து ராணுவ வீரர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்தபோது விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கரீபியன் தீவுகளுக்கு குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
- குட்டி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் விபத்து நடந்துள்ளது.
ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மனியில் பிறந்தவர். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கரீபியன் கடல் பகுதியில் நடந்துள்ளது.
தி குட் ஜெர்மன் (The Good German) என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 2008-ல் ஆக்ஷன்-காமெடி படமான ஸ்பீடு ரேஸர் (Speed Racer) படத்தில் நடத்தியிருந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள், கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு நான்கு உடல்களை மீட்டுள்ளனர்.
ஆலிவர், அவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12) மற்றும் விமான என நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானம் பெகுய்யா என்ன சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் டி.வி. தொடரில் நடித்தது பிரபலமானார். அதன்பின் ஆலிவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
- அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது.
- ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரணை.
எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.
தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்..
ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
- புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது.
- விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ரியோ பிரான்சோ:
பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2- வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியானார்கள்.
- விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது
- விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.
இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உள்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் பயிற்சி விமானிகள் 2 பேரும் உயிரிந்தனர். விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
- ஹர்பால் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் தலைநகர் ஹராரேவில் இருந்து முரோவா நகருக்கு செஸ்னா 206 ரக விமானத்தில் புறப்பட்டார்.
- விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர் ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான ஜெம் ஹோல்டிங்சின் நிறுவனர் ஆவார்.
முரோவா:
ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா. இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபரான இவர், தங்கம், நிலக்கரி, நிக்கல், தாமிரம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் ரியோசிம் என்ற சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர். ஹர்பால் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் தலைநகர் ஹராரேவில் இருந்து முரோவா நகருக்கு செஸ்னா 206 ரக விமானத்தில் புறப்பட்டார்.
முரோவா நகர் அருகே சென்று கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக நடுவானிலேயே விமானம் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர் ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் பங்கு நிறுவனமான ஜெம் ஹோல்டிங்சின் நிறுவனர் ஆவார். இவருடன் மரணமடைந்த அவரது மகனுக்கு 22 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் ரெனோவில் விமான பந்தய போட்டி நடந்தது.
- இறுதிப்போட்டியில் பங்கேற்ற 2 விமானங்கள் தரையிறங்கியபோது மோதி விபத்து ஏற்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இதன் இறுதிப்போட்டியில் விமானங்கள் கலந்து கொண்டன.
அப்போது தரை இறங்கும்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் அந்த விமானங்கள் நொறுங்கின. இந்த விபத்தில் அதில் பயணித்த 2 விமானிகள் பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று 2 விமானிகளின் உடல்களை மீட்டனர். இறந்தவர்கள் பெயர் விவரங்கள், விபத்துக்கான காரணம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்