என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் தயாரான ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
Byமாலை மலர்18 Jan 2021 7:44 AM GMT (Updated: 18 Jan 2021 10:34 AM GMT)
சீனாவில் தயாரான ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீஜிங்:
கொரோனா வைரசின் பிறப்பிடமாக சீனாவின் வுகான் நகரம் கருதப்படுகிறது. உலகையே நடுங்க வைக்கும் இந்த வைரஸ் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தியான்ஜின் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு ஐஸ்கிரீம் தயாரிப்புக்கான பால் பவுடர் போன்ற மூலப் பொருட்கள் நியூசிலாந்து, உக்ரைன் ஆகிய நடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
1,812 பெட்டி ஐஸ்கிரீம் தயாரித்து வெளியே அனுப்பி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றிய 662 தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஐஸ்கிரீம் பெட்டிகள் எங்கெங்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. வாங்கி சென்றவர்கள், சாப்பிட்டவர்கள் யார்-யார் என்பதை தேடி வருகிறார்கள். இது சீனாவில் மீண்டும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X