என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு
Byமாலை மலர்15 Jan 2021 8:28 PM GMT (Updated: 15 Jan 2021 8:28 PM GMT)
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ், தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திருப்பப்பெறுவேன் என அறிவித்திருந்தார். அந்த வகையில், பல முறை இரு நாடுகளில் இருந்தும் அமெரிக்கப்படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் பதவி காலம் 19-ம் தேதியுடன் முடிவடைந்து 20-ம் தேதி ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அதற்கு முன்னதாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெருமளவு படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் பல ஆண்டுகளாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரம் பேர் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ், தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திருப்பப்பெறுவேன் என அறிவித்திருந்தார். அந்த வகையில், பல முறை இரு நாடுகளில் இருந்தும் அமெரிக்கப்படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் பதவி காலம் 19-ம் தேதியுடன் முடிவடைந்து 20-ம் தேதி ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அதற்கு முன்னதாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெருமளவு படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், இரு நாடுகளில் இருந்தும் கணிசமான அளவு படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 500 வீரர்கள் மட்டுமே நிலைநிறுத்தப்படுகின்றனர்.
அதேபோல் ஈராக்கிலும் தற்போது பணியில் உள்ள வீரர்களில் பெருமாளானோர் திருப்பப்பெறப்பட்டுள்ளனர். ஈராக்கிலும் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல ஆண்டுகளாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரம் பேர் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் 2 ஆயிரத்து 500 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் 2 ஆயிரத்து 500 வீரர்களும் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X