search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    எனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டிரம்ப்

    தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று டிரம்பை பதவி நீக்குவதற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் இந்த நடைபெற்றது.

    இந்த வாக்கெடுப்பில் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். இதன் மூலம் இரண்டாவது முறையாக பதவிநீக்க நடைமுறைகளை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்கொள்கிறார்.

    தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.

    விசாரணையில் வன்முறை தூண்டியதற்கான குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், தன் மீது தகுதி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில்,

    நான் நம்பிக்கை வைக்கும் அனைத்திற்கும் நமது இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் எதிராக வன்முறை என்பது உள்ளது. எனது உண்மையான ஆதரவாளர்கள் அரசியல் வன்முறைகளை
    ஊக்குவிக்கமாட்டார்கள்.

    எனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள். எனது உண்மையான ஆதரவாளர்கள் சக அமெரிக்க
    மக்களை ஒருபோதும் அச்சுறுத்தமாட்டார்கள்.

    இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நீங்கள் நமது இயக்கத்தின் செயல்பாடுகளை ஆதரவளிப்பதில்லை மட்டுமல்லாமல் நமது இயக்கத்தின் மீதும் நமது நாட்டின் மீதும் நீங்கள் தாக்குதல நடத்துவதாக் அர்த்தம்.

    என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×