என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரிசோதனை முடியும் முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
Byமாலை மலர்21 Oct 2020 6:57 PM GMT (Updated: 21 Oct 2020 6:57 PM GMT)
சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீஜிங்:
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடிக்கொண்டிருக்கின்றன.
கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்பூசிகளை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, சீனா என பல முன்னணி நாடுகளும் உருவாக்கி, அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைகளில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா வைரசை உலக நாடுகளுக்கெல்லாம் வழங்கியுள்ள சீனாவில், அதற்கு எதிராக 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இந்த நிலையில், இறுதிக்கட்ட சோதனையை முடிக்கும் முன்பாகவே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை அந்தநாட்டின் அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.
இதையொட்டி அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தியான் பாகுவோ நிருபர்களிடம் கூறுகையில், “60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட முடிவுகள், தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை காட்டுகின்றன” என குறிப்பிட்டார்.
சீனாவில் தடுப்பூசியின் மருத்துவ சோதனைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னரே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு விட்டன என்பது உலக அரங்கை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இருப்பினும் தடுப்பூசிகளின் சோதனை பயன்பாடு, மருத்துவ பரிசோதனை தரவுகளின் ஒரு பகுதியாக இருக்காது என்று கூறி உள்ளார்.
மருத்துவ பரிசோதனையை முடிக்காத நிலையில் தடுப்பூசிகளை போடுவது என்பது உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகளும், நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
சீன அரசு நிறுவனமான சைனோபார்ம், 2 தடுப்பூசிகளை கொண்டுள்ளது. தனது தடுப்பூசி பயன்பாடு குறித்து இந்த நிறுவனம் கூறுகையில், “பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட எங்கள் ஊழியர்கள் 3 ஆயிரம் பேரும், அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்” என தெரிவித்தது.
சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 61 கோடி தடுப்பூசி ‘டோஸ்’கள் தயாரிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை சீன தடுப்பூசி உருவாக்க பணிக்குழுவின் தலைவர் ஜெங் ஜாங்வெய் உறுதி செய்தார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடிக்கொண்டிருக்கின்றன.
கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்பூசிகளை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, சீனா என பல முன்னணி நாடுகளும் உருவாக்கி, அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைகளில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா வைரசை உலக நாடுகளுக்கெல்லாம் வழங்கியுள்ள சீனாவில், அதற்கு எதிராக 4 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இந்த நிலையில், இறுதிக்கட்ட சோதனையை முடிக்கும் முன்பாகவே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை அந்தநாட்டின் அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.
இதையொட்டி அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தியான் பாகுவோ நிருபர்களிடம் கூறுகையில், “60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட முடிவுகள், தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை காட்டுகின்றன” என குறிப்பிட்டார்.
சீனாவில் தடுப்பூசியின் மருத்துவ சோதனைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னரே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு விட்டன என்பது உலக அரங்கை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இருப்பினும் தடுப்பூசிகளின் சோதனை பயன்பாடு, மருத்துவ பரிசோதனை தரவுகளின் ஒரு பகுதியாக இருக்காது என்று கூறி உள்ளார்.
மருத்துவ பரிசோதனையை முடிக்காத நிலையில் தடுப்பூசிகளை போடுவது என்பது உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகளும், நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
சீன அரசு நிறுவனமான சைனோபார்ம், 2 தடுப்பூசிகளை கொண்டுள்ளது. தனது தடுப்பூசி பயன்பாடு குறித்து இந்த நிறுவனம் கூறுகையில், “பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட எங்கள் ஊழியர்கள் 3 ஆயிரம் பேரும், அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்” என தெரிவித்தது.
சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 61 கோடி தடுப்பூசி ‘டோஸ்’கள் தயாரிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை சீன தடுப்பூசி உருவாக்க பணிக்குழுவின் தலைவர் ஜெங் ஜாங்வெய் உறுதி செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X