search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு ஈரான் புறப்பட்டார் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்

    ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ஈரான் புறப்பட்டார். ஈரான் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியை ராஜ்நாத்சிங் சந்திக்க உள்ளார்.
    மாஸ்கோ:

    ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கடந்த 2-ம் தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தடைந்தார்.

    இந்த பயணத்தின்போது ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரியுடன் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ராஜ்நாத்சிங் ஈடுபட்டார். அதேபோல் எல்லை விவகாரம் சிக்கலை ஏற்படுத்தி வரும் நிலையில் சீன பாதுகாப்புத்துறை மந்திரியையும் ராஜ்நாத்சிங் சந்தித்தார். 

    சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடனான சந்திப்பின்போது எல்லை விவகாரத்தை சுமூகமாக தீர்த்துகொள்வது தொடர்பாக ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். 

    பின்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகளின் கூட்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜ்நாத் பங்கேற்றார். 

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் நிறைவடைந்ததையடுத்து தனது ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டுள்ள ராஜ்நாத் தற்போது ஈரான் புறப்பட்டு சென்றார். 

    இந்த பயணத்தின்போது ஈரான் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் அமீர் ஹடமீரை ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.


    Next Story
    ×