என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
’வங்காளதேசத்திற்கு எப்பொழுதும் முன்னுரிமை கொடுக்கப்படும்’ - இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பேச்சு
Byமாலை மலர்19 Aug 2020 4:10 PM GMT (Updated: 19 Aug 2020 4:13 PM GMT)
கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை இந்தியா உருவாக்கும்போது அதில் வங்காளதேசத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கா தெரிவித்துள்ளார்.
டாக்கா:
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கா 2 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று வங்காளதேசம் வந்தார். இந்த பயணத்தின்போது வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை வெளியுறவுத்துறை செயளாலர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன.
பயணத்தின் இறுதி நாளான இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கா உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் உருவாக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை பெற வங்காளதேசத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுமான என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஹர்ஷ்வர்தன்,’எங்களை (இந்தியா) பெறுத்தவரை வங்காளதேசத்திற்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X