என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொரோனா தீர்மானத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை - சீனா குற்றச்சாட்டு
Byமாலை மலர்11 May 2020 6:36 AM GMT (Updated: 11 May 2020 6:36 AM GMT)
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டையாக இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
நியூயார்க்:
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற உலக நாடுகள்
விரும்புகின்றன. ஆனால், அதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டையாக இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சீன தூதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த தீர்மானத்தை பிரான்ஸ், துனியா ஆகிய நாடுகள் வடிவமைத்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் அதை ஆதரிக்கின்றன. சீனாவும் ஆதரிக்கிறது.அமெரிக்கா முதலில் ஆதரித்தது.
ஆனால், பிறகு பின்வாங்கி விட்டது. முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால், இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற முடியவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒற்றுமையை
குழிதோண்டி புதைத்து வருகிறது. இன்றைய நிலைக்கு அமெரிக்காவே முழு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X