என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் கடும் குளிருக்கு 7 மாத குழந்தை உயிரிழப்பு
Byமாலை மலர்8 Jan 2020 11:30 PM GMT (Updated: 8 Jan 2020 11:30 PM GMT)
பெற்றோரின் கவனக்குறைவால் 5 மணி நேரத்துக்கும் மேலாக தனிமையில் விடப்பட்ட குழந்தை அங்கு நிலவும் கடும் குளிரால் பரிதாபமாக இறந்தது.
மாஸ்கோ:
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 7 மாத ஆண் குழந்தை நல்ல காற்றை சுவாசித்து தூங்கவேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ள பால்கனியில் அமரவைத்தனர்.
அப்போது அந்த பகுதியில் கடும் குளிர் நிலவியது. 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கே இருந்தது. குளிரில் அந்த குழந்தை அயர்ந்து தூங்கிவிட்டது. இதனால் பெற்றோர் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு தங்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர்.
5 மணி நேரத்துக்கும் மேலாக தனிமையில் விடப்பட்ட அந்த குழந்தை கடும் குளிரால் பரிதாபமாக இறந்தது. ஹைப்போதர்மியாவால் குழந்தை உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. ஹைப்போதர்மியா என்பது கடும் குளிரினால் உடலின் வெப்பநிலை மிகவும் குறையும்போது ஏற்படுகிறது.
இதுகுறித்து அந்த பிராந்தியத்தின் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இங்கு நிலவும் கடும் குளிரினால் யாரையும் தனியே விடுவது ஆபத்து. குறைந்த பட்ச வெப்பநிலையால், குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள், அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்படவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே குழந்தையை பால்கனியில் தனிமையில் விட்டு சென்ற பெற்றோர் மீது போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 7 மாத ஆண் குழந்தை நல்ல காற்றை சுவாசித்து தூங்கவேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ள பால்கனியில் அமரவைத்தனர்.
அப்போது அந்த பகுதியில் கடும் குளிர் நிலவியது. 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கே இருந்தது. குளிரில் அந்த குழந்தை அயர்ந்து தூங்கிவிட்டது. இதனால் பெற்றோர் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு தங்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர்.
5 மணி நேரத்துக்கும் மேலாக தனிமையில் விடப்பட்ட அந்த குழந்தை கடும் குளிரால் பரிதாபமாக இறந்தது. ஹைப்போதர்மியாவால் குழந்தை உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. ஹைப்போதர்மியா என்பது கடும் குளிரினால் உடலின் வெப்பநிலை மிகவும் குறையும்போது ஏற்படுகிறது.
இதுகுறித்து அந்த பிராந்தியத்தின் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இங்கு நிலவும் கடும் குளிரினால் யாரையும் தனியே விடுவது ஆபத்து. குறைந்த பட்ச வெப்பநிலையால், குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள், அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்படவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே குழந்தையை பால்கனியில் தனிமையில் விட்டு சென்ற பெற்றோர் மீது போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X