search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் அதிரடிப்படையினர் (கோப்பு படம்)
    X
    ஆப்கானிஸ்தான் அதிரடிப்படையினர் (கோப்பு படம்)

    ஆப்கானிஸ்தான்: ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாக். பயங்கரவாதிகள் உள்பட 23 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 6 அல்கொய்தா அமைப்பினர் உள்பட 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், தலிபான்கள் நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றிக்கொண்டு போட்டி அரசாங்கத்தையும் நடத்தி வருகின்றனர்.

    பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் ஹெல்மெண்ட் மாகாணத்தில் உள்ள மூசா ஹலா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கோப்பு படம்

    இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ஆப்கான் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த அதிரடி வேட்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 17 பேர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் ,மேலும் 6 பேர் பாகிஸ்தானை சேர்ந்த அல்கொய்தா பயங்கரவாதிகள் என அந்நாட்டு தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×