என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துபாய்: வாக்குவாதத்தில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற இந்தியர் கைது
Byமாலை மலர்11 Sep 2019 11:01 AM GMT (Updated: 11 Sep 2019 11:01 AM GMT)
துபாயில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து ஒரு இந்தியர் அவரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய்:
கேரள மாநிலத்தை சேர்ந்த வித்யா சந்திரன் (39) என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் வசித்துவந்தார். இதற்கிடையில், வித்யாவின் கணவர் தனது நிதி நெருக்கடியை சமாளிக்க பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
குடும்ப கடன் அதிக அளவில் இருந்ததால் கணவன் மனைவி இடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாக வித்யா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, இருவருக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே சிறிது காலம் பிரச்சனைகள் எதுவும் நிகழாமல் இருந்தது.
இதைதொடர்ந்து, குடும்ப கடன் சுமை காரணமாக தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கேரளாவில் உள்ள தனது பெற்றோரின் கவனிப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வதற்காக தனது கணவருடன் இணைந்து வித்யா சந்திரன் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு துபாயில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், துபாயின் அல் கோஸ் என்ற பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் கடந்த 9-ம் தேதி (திங்கள்கிழமை) வித்யா சந்திரனுக்கும் அவரது கணவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வித்யா சந்திரனை சரமாரியாக குத்தினார். இந்த கொடூர தாக்குதலில் வித்யா சம்பவ இடத்திலேயை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வித்யாவை கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த வித்யா சந்திரசேகரின் சகோதரர் வினயச்சந்திரன் இது குறித்து கூறுகையில், ''எனது அக்கா ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக துபாயில் இருந்த நேற்றே கேரளா வந்திருக்கவேண்டும். அவர் தனது குழந்தைகளை பார்க்கவும் மிகுந்த ஆவலாக இருந்தார். ஆனால் தற்போது எனது சகோதரி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை எங்கள் குடும்பத்தால் நம்ப முடியவில்லை'' என மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X