என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு
Byமாலை மலர்14 Jun 2019 5:52 AM GMT (Updated: 14 Jun 2019 7:03 AM GMT)
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 11 பேர் பலியாகினர்.
ஜலாலாபாத்:
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் நேற்று தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். ஜலாலாபாத் நகரில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தற்கொலைப் படையினர் போலீஸ் சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 6 பேர் காவல்துறையினர் என்றும், ஒரு குழந்தை உட்பட 5 பொதுமக்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மே மாதம் மட்டும் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஜலாலாபாத் பகுதியில் நடைபெற்றன. இதே போல் கடந்த மார்ச் மாதம் விமானநிலையம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X