என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

    விசாகப்பட்டினம்:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

    விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனைகள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், பிரதிகா ராவல் 75 ரன்னும் எடுத்தனர்.

    ஹர்லின் தியோல் 38 ரன்னும், ஜெமிமா ரொட்ரிக்ஸ் 33 ரன்னும், ரிச்சா கோஷ் 32 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 5 விக்கெட்டும், சோபி மோலினக்ஸ்3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான அலிசா ஹீலி அதிரடியாக அடி சதமடித்தார். அவர் 107 பந்தில் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எல்லீஸ் பெரி 47 ரன்னும், ஆஷ்லி கார்ட்னர் 45 ரன்னும், போபி லிட்ச்பீல்டு 40 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 49 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டும், தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
    • இதில் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோ வீரர் வாலண்டைன் வசெரோட் உடன் மோதினார்.

    இதில் வசெரோட் முதல் செட்டை இழந்தாலும், 2 மற்றும் 3வது செட்டைக் கைப்பற்றினார்.

    இறுதியில் வசெரோட் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    • நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என இருவேறு வேறு இடங்களில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியின் தீவில் பார் ஒன்று உள்ளது. நெரிசலானா பாரில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.

    இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    • நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்குகிறார்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

    குறிப்பாக, பெரும்பான்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பில், அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்குகிறார்.

    அதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,

    தமிழக பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்றைய தினம் மாலை, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலுடன், தமிழக பாஜக மாநில தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் துவங்கியிருக்கும் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" என்ற மாபெரும் மக்கள் சந்திப்பு பயணத்தின் துவக்க விழாவில் பங்கேற்று உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழகத்தில் திமுக அரசு இறுமாப்போடு அமர்ந்து கொண்டிருக்கிறது. பணத்தை வைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற இறுமாப்பு. ஆனால், திமுகவினர் கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்துகொண்டு கல்லெறிந்து கொண்டு இருக்கிறார்கள். தனது குடும்பத்தின் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்று ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் கூட தெரியும்.

    திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 88 பேர் கள்ளசாராயத்தால் உயிரிழந்துள்ளனர். கரூரில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?

    உண்மை என்னவென்றால், கரூரில் 100 காவலர்கள் கூட பாதுகாப்பிற்காக இல்லை. ஆனால், நேற்று பகுஜன் சமாஜ் கட்சி கொலைவழக்கில் முதல் குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு 6 துணை ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 42 காவல் ஆய்வாளர்கள், 87 துணை ஆய்வாளர்கள் உட்பட 1,100 காவலர்களை அனுப்பியது திமுக அரசு.

    இதிலிருந்தே, திமுக அரசின் அக்கறை எங்கே இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும். இப்படிப்பட்ட திமுக ஆட்சி 2026 தேர்தலில் அகற்றப்படவேண்டும். அதற்காக பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டனும் கடுமையாக உழைக்கவேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார்.

    மலையான நட்சத்திர நடிகரில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாஜக எம்.பி. இவர்தான். இதனால் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய அமைச்சர் பதவியால், சினிமாவில் நடிக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய தனிப்பட்ட வருமானம் முற்றிலும் இல்லாமல் போகியுள்ளது. உண்மையிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். இன்னும் பணம் சம்பாதிப்பது அவசியமானதாக உள்ளது. எனது சினிமா வாழ்க்கையை துறந்துவிட்டு, அமைச்சர் பதவியை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஜனாதிபதியால் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்ட சதானந்தன் மாஸ்டருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து சினிமாவில் நடிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
    • மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. இந்த கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

    மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.

    நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து இதுவரை 41 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெற்றம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • மாவட்டச் செயலாளருக்கு தெரியாமல் கட்சி நிர்வாகி அழைத்து சென்றதாக தெரிகிறது.
    • இதனால் மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது அவரை கட்சி நிர்வாகி ஒருவர் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

    அப்பேது மாவட்ட செயலாளர் தனக்கு தெரியாமல் அழைத்துச் சென்றதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மாவட்ட செயலாளருடன் அந்த நிர்வாகியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    'அரசன்' படத்தின் ப்ரோமோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது- The film crew announced the promo release date for the film 'Arasan'.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

    இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    பின்னர், 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், 'அரசன்' படத்தின் ப்ரோமோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம்17ம் தேதி காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.

    முன்னதாக, 16ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படும் எனவும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

    மேலும், 'அரசன்' படத்தின் ப்ரோமோ அக்.16ம் தேதி பிரத்யேகமாக திரையிடப்படவுள்ள தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். டிக்கெட் கட்டணமாக ரூ.15 செலுத்தி ப்ரோமோவைக் காணலாம் என கூறப்பட்டுள்ளது. 

    திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

    ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை காண்பிக்கும் படம் ட்ரான் ஆரஸ்.

    டெலிஞ்சர் என்கிற நபர் தனக்கு என ஒரு டிஜிட்டல் உலகத்தை உருவாக்குகிறார். அந்த டிஜிட்டல் உலகத்தில் ஆரஸ் என்கிற ஒரு மனிதனையும் உருவாக்குகிறார். அந்த ஆரஸை டிஜிட்டல் உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு கொண்டு வந்து ஆர்மி-க்கு கொடுக்க முயற்சிக்கிறார்.

    ஆனால், நிஜ உலகத்தில் ஆரஸால் 29 நிமிடம் மட்டுமே இருக்க முடியும். அதற்கு பிறகு, ஆரஸ் கரைந்து போய்விடும்.

    டெலிஞ்சருக்கு போட்டி கம்பெனியான என்காம் என்கிற நிறுவனத்தை சேர்ந்த ஈவ், டிஜிட்டல் உலகில் இருப்பதை நிஜ உலகில் நிரந்தரமாக கொண்டு வரும் கோட் கண்டுபிடிக்கிறார்.

    ஈவ்-ன் முயற்சியை தெரிந்துக் கொண்ட டெலிஞ்சர் உடனே என்காமின் சர்வரை ஹேக் செய்து, ஈவ்-ஐ ஆரஸ் உதவியுடன் கடத்துகிறார்.

    ஆனால், ஒரு கட்டத்தில் ஆரஸ்-க்கு கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகள் வர, டெலிஞ்சர் நம்மை அழிவுக்கு பயன்படுத்துகிறார் என்பது தெரிய வருகிறது. பின்னர், ஈவ் பக்கம் திரும்பும் ஆரஸ், நீ என்னை காப்பாற்றினால், நான் உன்னை நிஜ உலகிற்கு நிரந்தரமாக கொண்டு வருகிறேன் என்று டீல் போடுகிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை..

    நடிகர்கள்

    ஜாரெட் லெட்டோ, கிரெட்டா லீ, ஈவன் பீட்டர்ஸ், ஹசன் மிர்னாஜ், ஜோடி டர்னர்-ஸ்மித், ஆர்ட்டுரோ காஸ்ட்ரோ, கேமரூன் மோனாகன், ஜில்லியன் ஆண்டர்சன், மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர்.

    இயக்கம்

    ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை இயக்குனர் ஜோச்சிம் ரோன்னிங் எல்லோருக்கும் புரியும் படி பிரமாண்டத்துடன் எடுத்துள்ளார்.

    அதிலும் ஈவ் சிஸ்டத்தை ஹாக் செய்யும் இடம், அதை எதோ போர் போல் 5 ப்ரோகிராம் மனிதர்கள் சாப்ட்வேர் உள்ள வருவது, அதை எதிர்க்க வரும் ஆண்டி வைரஸ் மனிதர்கள் என கற்பனை குதிரையை பறக்க விட்டுள்ளார் இயக்குனர்.

    இசை

    பின்னணி இசை அபாரம்.

    ஒளிப்பதிவு

    டெக்னிக்கலாக படம் வேற லெவல். படம் முழுக்க காட்சிகள், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்தும் விஸ்வல் ட்ரீட்டாக இருந்தது.

    • அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
    • அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக பெரும்பான்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பில், அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்கான தொடக்க விழா இன்று மதுரை மாவட்டம், அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இதில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும், கூட்டணி கட்சியான அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்தப் பிரசார பயணம் தொடக்க விழாவில், பாஜக பிரசார பாடல் வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி திமுக மற்றும் காங்கிரஸை விமர்சிக்கும் பேச்சும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் பேச்சும் இடம் பெற்றிருந்தன.

    • தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் சேர்த்தார்.

    மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் லாகூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஷபிக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் களம் இறங்கினார். இவர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஷான் மசூத் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பாபர் அசாம் (23), சாத் ஷகீல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6ஆவது விக்கெட்டுக்கு ரிஸ்வான் உடன் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் 300 ரன்களை கடந்தது.

    இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது. ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மன் ஆகா 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சீனுரான் முத்துசாமி 2 விக்கெட் வீழத்தினார். ரபடா, சுப்புராயன், ஹார்மன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    ×