என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bisons"

    திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

    • வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.
    • பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் கூடும் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. இதில் குறிப்பாக காட்டெருமைகள் மற்றும் கரடிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் நேற்று மாலை காட்டெருமை ஒன்று மக்கள் நடமாடும் பகுதிக்குள் புகுந்தது.

    உடனடியாக அங்கிருந்த மக்கள் காட்டெருமை வருவதை கண்டு விலகி சென்றுவிட்டனர். பின்பு அந்த காட்டெருமை அருகில் இருந்த அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் சென்றது.

    இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கோத்தகிரி பகுதியில் மக்கள் கூடும் முக்கியமான பகுதிகளில் கடந்த சில நாட்களாக 4 காட்டெருமைகள் சேர்ந்த கூட்டம் ஒன்று பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வலம் வருகிறது.

    வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளை போன்று இவைகள் சாலைகளில் சுற்றி திரிவது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று காலை நேரத்தில் 4 காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து நீண்ட நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்து காட்டெருமைகள் கூட்டம் நகர்ந்து சென்ற பின்பு போக்குவரத்து சீரானது. எனவே காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×