search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் சாலைகளில் உலா வரும் காட்டெருமைகள்
    X

    கோத்தகிரியில் சாலைகளில் உலா வரும் காட்டெருமைகள்

    • வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கோத்தகிரி பகுதியில் மக்கள் கூடும் முக்கியமான பகுதிகளில் கடந்த சில நாட்களாக 4 காட்டெருமைகள் சேர்ந்த கூட்டம் ஒன்று பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வலம் வருகிறது.

    வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளை போன்று இவைகள் சாலைகளில் சுற்றி திரிவது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று காலை நேரத்தில் 4 காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் என யாரும் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து நீண்ட நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்து காட்டெருமைகள் கூட்டம் நகர்ந்து சென்ற பின்பு போக்குவரத்து சீரானது. எனவே காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×