என் மலர்
தலைப்புச்செய்திகள்
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.
- தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
- தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை வெளியிட்டார்.
சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
* மக்கள் பணியில் கவனம் தேவை எனக்குறிப்பிட்டு தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை அவர் வெளியிட்டார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விலை சரிந்து காணப்பட்டது.
கடந்த 16-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரையிலான அந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.330-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 640-ம் குறைந்து இருந்தது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 230-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000
18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840
17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520
15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-02-2026- ஒரு கிராம் ரூ.270
18-02-2026- ஒரு கிராம் ரூ.260
17-02-2026- ஒரு கிராம் ரூ.265
16-02-2026- ஒரு கிராம் ரூ.265
15-02-2026- ஒரு கிராம் ரூ.280
- ஆஸ்திரேலியாவுக்கு சென்றதில் இருந்து நாங்கள் கடும் துன்பங்களை அனுபவித்தோம்.
- பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது.
கராச்சி:
புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு 4 ஆட் டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது.
தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். 'ஆஸ்திரேலியாவுக்கு சென்றதில் இருந்து நாங்கள் கடும் துன்பங்களை அனுபவித்தோம். தங்கும் ஓட்டலுக்கு பாகிஸ்தான் சம்மேளனம் முன்கூட்டியே பணம் செலுத்தாததால் ஒரு மணி நேரம் ரோட்டில் பரிதவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தங்கவைக்கவைக்கப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது.
பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். பிறகு எப்படி போட்டியில் கவனம் செலுத்த முடியும்' என்று கூறிய ஷகீல் பட், பாகிஸ்தான் ஹாக்கி நிர்வாகத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஓராண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஹாக்கிக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக ஷகீல் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் தனது பதவியையும் துறந்துள்ளார். ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்புக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள தாரிக் புக்தி, 'ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தது பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் தான். அங்கு நடந்த நிகழ்வுக ளுக்கு அவர்களே பொறுப்பு. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர்.
- விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டன. கூட்டணி அமைக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்ததாக ஒவ்வொரு கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக குழு அமைக்கும் நடவடிக்கை யிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர் களிடம் இருந்து ஒவ்வொரு கட்சிகள் சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.வில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டு விட்டது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். விருப்பமனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தியுள்ளார்.
த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்தும் விருப்பமனு பெறப்பட்டு உள்ளது. த.வெ.க.வில் போட்டியிட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் பெயரிலும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பெயரிலும் ஏராளமானவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க.வில் இன்று மாலை வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி 2 அணிகள் தரப்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு விட்டது. தே.மு.தி.க. சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. முதல் விருப்பமனு விஜயகாந்த் பெயரில் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரேமலதா பெயரிலும் பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு கட்சிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
தி.மு.க.வும் தேர்தல் பணியில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி முடித்துள்ள தி.மு.க., அடுத்ததாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு வருகிறது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு மூத்த தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில், நாளை மறுநாள் (22-ந்தேதி) முதல் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விருப்பமனு குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இன்று முதல் மார்ச் 2-ந்தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த மனுக்களை கொடுக்கும்போது பொது தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிகளில் போட்டியிட ரூ.15 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகம் இன்று காலையில் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பு பவர்களுக்கு விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன.
முதல் நாளான இன்று விருப்பமனு வாங்குவதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு விருப்பமனுக்களை பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர்களில் ஏராளமானோர் விருப்ப மனு வாங்கினார்கள்.
விருப்ப மனுவில் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. தி.மு.க.வில் வகிக்கும் பொறுப்பு, பொதுப்பணியில் வகித்த மற்றும் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி மன்றம் மற்றும் வேறு அமைப்புகளில் வசிக்கும் பதவி, தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.
விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா,செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே. எஸ். இளங்கோவன், ஆஸ்டின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு 7 விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார். இதேபோல் ஏராளமானோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன. பூர்த்தி செய்த விருப்ப மனுக்கள் அன்று மாலை வரை பெறப்பட உள்ளன. விருப்ப மனுக்கள் பெறப்பட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
- காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டல் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
- பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 'காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்' என கிண்டல் செய்து இருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வைகோவுக்கு பதிலடி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன்.
பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று தெரிவித்துள்ளார்.
- 7-வது அதிபராக கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற ஜோஸ் ஜெரி (வயது 39), தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்.
- சீன தொழிலதிபர் ஜிகுவா யாங் என்பவரை, அதிபர் ஜோஸ் ஜெரி ரகசியமாகச் சந்தித்த வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
லிமா:
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி அடுத்தடுத்து அதிபர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் 7-வது அதிபராக கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற ஜோஸ் ஜெரி (வயது 39), தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். சீன தொழிலதிபர் ஜிகுவா யாங் என்பவரை, அதிபர் ஜோஸ் ஜெரி ரகசியமாகச் சந்தித்த வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இச்சந்திப்பின் போது முகமூடி அணிந்து கொண்டு அவர் ரகசியமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், அவருக்கு எதிராக 75 வாக்குகள் விழுந்ததை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். வெறும் 4 மாதங்களே பதவியில் இருந்த ஜோஸ் ஜெரி, தனது தவறுக்கு மன்னிப்பு கோரிய போதிலும் நாடாளுமன்றம் அதனை ஏற்கவில்லை. தற்போது புதிய இடைக்கால அதிபராக ஓய்வுபெற்ற நீதிபதி ஜோஸ் மரியா பால்காசர் (83) நியமிக்கப்பட்டுள்ளார்.
- இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சென்னை:
இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுக்குள்(வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும். அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்துக்குள் பனி முற்றிலுமாக விலகிவிடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவு திட்டமாகும்.
- சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமாகும்.
இதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதற்காக பல்வேறுகட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சண்டிகாரில் செயல்பட்டு வரும் டெரிமினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரெயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் என்ற பகுதியில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது.
- தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு எழுதியுள்ளார்.
- வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார்.
மும்பை:
ஆண் கல்வியறிவு பெற்றால் ஒரு தனிநபர் பயன் பெறுவார், ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒரு தலைமுறையே பயன்பெறும் என்பது பெண் கல்வியின் மகத்துவத்தை போற்றும் பொன்மொழியாகும்.
அந்தவகையில் கல்வியை பிரதானமாக கருதிய பெண் ஒருவர், தனக்கு பிரசவம் நடந்த 2 நாட்களிலேயே கைக்குழந்தையுடன் தேர்வு அறைக்கு வந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மற்ற பெண்களுக்கு ஆகச்சிறந்த முன்உதாரணமாக திகழ்ந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் நாந்தெட்டை சேர்ந்தவர் சீத்தல்(வயது21). வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி இருந்தார். கல்வியின் முக்கியத் துவத்தை அறிந்து பின்னர் கல்வியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் மணமாலை சூடினார். திருமணத்துக்கு பிறகும் கல்வியை கைவிட அவரது மனது சம்மதிக்கவில்லை. அங்குள்ள ஸ்ரீபாசவேஷ்வர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இல்லற வாழ்க்கை காரணமாக 10 நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. பொதுத்தேர்வு சமயத்தில் குழந்தை பிறந்தாலும், அது பரீட்சை எழுத அவருக்கு தடையாக அமையவில்லை. அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல் பொதுத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்தார்.
தனக்கு குழந்தை பிறந்த 2 நாட்களில், அதாவது கடந்த 10-ந்தேதி நடந்த ஆங்கில தேர்வை அவர் தனது சகோதரியுடன் வந்து எழுதி அனைவரை யும் வியக்க வைத்தார். நேற்றுமுன்தினம் அரசியல் அறிவியல் தேர்வை எழுதினார்.
பச்சிளம் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேவையான வசதிகளை தேர்வு மைய அதிகாரிகள் செய்தனர். தேர்வு மையத்தில் குழந்தையை தூங்க வைப்பதற்கான தொட்டில் உள்ளிட்ட உதவிகளை செய்து கொடுத்தனர். கல்வியை தனது இரு கண்களாக கருதிய பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் வந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சம்பவம் மராட்டியத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சுபமுகூர்த்த தினம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளிவாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-8 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை பிற்பகல் 3.53 வரை பிறரு சதுர்த்தி
நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.19 வரை பிறகு ரேவதி
யோகம் : சித்த/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளிவாகன சேவை
சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் இராஜாங்க சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளிவாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-சுபம்
மிதுனம்-வரவு
கடகம்-சுகம்
சிம்மம்-பாராட்டு
கன்னி-உயர்வு
துலாம்- கடமை
விருச்சிகம்-தெளிவு
தனுசு- முயற்சி
மகரம்-ஆக்கம்
கும்பம்-உழைப்பு
மீனம்-பக்தி






