என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இன்று உலகத் தாய்மொழிகள் நாள்!
    • நம் தமிழைக் காத்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழே நீ வாழ்ந்திடு!

    இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் "தமிழே" என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

    நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது

    உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அம்பத்தூர் தொழிற்பேட்டை: 1வது பிரதான சாலை, 3வது தெரு, தபால் அலுவலக சாலை தெற்கு கட்ட பிரிவு 1, எம்டிஎச் சாலை, 3வது பிரதான சாலை.

    அம்பத்தூர் சிட்கோ: 5வது தெரு, யாதவா தெரு, ஈபி சாலை, கிராமம் தெரு, 4வது தெரு, 5வது தெரு, செக்டார் 3 வடக்கு கட்டத்தின் 6வது தெரு.

    • தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
    • தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது

    நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.

    இந்திய அணியின் போட்டிகளை பார்க்கும் போது அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.

    • சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப்பணம், பாஸ்டேக் போன்ற முறையில் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்
    • நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலனை.

    புதுடெல்லி:

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப்பணம், பாஸ்டேக் போன்ற முறையில் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது.

    இதன்படி இனிமேல், பயணிகள் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அல்லது யு.பி.ஐ. போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வரும் என தெரிகிறது.

    • ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
    • கூட்டணி கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
    • மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மாசி-9 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி பிற்பகல் 2.12 வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : ரேவதி இரவு 8.15 வரை பிறகு அசுவினி

    யோகம் : மரண/சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

    வளர்பிறை சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். பெரிய தங்கப் பல்லக்கில் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-உவகை

    கடகம்-போட்டி

    சிம்மம்-லாபம்

    கன்னி-பெருமை

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- உண்மை

    மகரம்-தேர்ச்சி

    கும்பம்-கீர்த்தி

    மீனம்-சாதனை

    • இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது.

    லாகூர்:

    புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு நடந்த 4 ஆட்டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது. போட்டி முடிந்து தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தை கடுமையாக சாடினார்.

    'ஆஸ்திரேலியா சென்ற நாங்கள் தங்குவதற்கு ஓட்டலுக்கு முன்பணம் கட்டாததால் சாலையில் சில மணி நேரம் தவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தரப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது. பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டியது இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்கும் நிலை ஏற்பட்டது. பிறகு எப்படி போட்டியில் முழு கவனம் செலுத்த முடியும்' என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் பாகிஸ்கான் ஹாக்கி சம்மேளன நிர்வாகக்கை முழுமையாக கலைக்க வேண்டும் என்று வலிறுத்திய அவர் பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் புகழுக்கு களம் ஏற்படுத்தியதாக கேப்டன் ஷகில் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரும், பிரதமருமான ஷபாஸ் ஷெரீப்புக்கு அனுப்பினார்.

    இந்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார். டைரக்டர் ஜெனரலாக முஸ்ரத்துல்லா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அத்துடன் கேப்டன் ஷகீல் பட் மீதான 2 ஆண்டு தடையை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று இடைக்கால தலைவர் முகைதீன் அகமது வானி குறிப்பிட்டுள்ளார்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சந்தோஷம் தரும் நாள். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

    ரிஷபம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு செய்வர். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

    மிதுனம்

    கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். முயற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    கடகம்

    பிரபலங்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். வரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும்.

    சிம்மம்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பணநெருக்கடி அதிகரிக்கும். கடமையை செய்வதில் இடையூறுகள் ஏற்படும். உறவினர் பகை உண்டு.

    கன்னி

    எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். பொது வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    துலாம்

    அலைபேசி வழித்தகவல்களால் ஆனந்தம் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதியவர்களை நம்பி ஒப்படைத்த காரியம் முடிவடையும்.

    விருச்சிகம்

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.

    தனுசு

    மனக்கசப்புகள் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சி வெற்றி பெறும்.

    மகரம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பகை மாறும்.

    கும்பம்

    குழப்பங்கள் அகலும் நாள். குடும்பப் பிரச்சனைகள் தீரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.

    மீனம்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. குடியிருக்கும் வீட்டால் பிரச்சனைகள் வரலாம்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • அரையிறுதிச் சுற்றில் செக் குடியரசு வீரர் மென்சிக் தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்தர் பில்ஸ், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசை சந்திக்கிறார்.

    • இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
    • இதில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

    இந்தப் போட்டி மைதானத்தில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களிலும் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

    இதுதொடர்பாக, ஜியோஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் இந்தப் போட்டியை 16.3 கோடி பேர் நேரலையில் கண்டு ரசித்துள்ளனர். இது ஐசிசி டி20 வரலாற்றில் ஒரு போட்டிக்குக் கிடைத்த அதிகபட்ச பார்வையாளர்கள் ஆகும்.

    கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்தப் போட்டி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்தப் போட்டியில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் கோகோ காப் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை கோகோ காப் 7-6 (15-13) என்ற செட் கணக்கில் வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை உக்ரைன் வீராங்கனை 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்காவின் கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.

    ×