என் மலர்
இந்தியா

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக், யு.பி.ஐ. கட்டணம் மட்டுமே ஏற்கப்படும் - ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது
- சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப்பணம், பாஸ்டேக் போன்ற முறையில் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்
- நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலனை.
புதுடெல்லி:
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப்பணம், பாஸ்டேக் போன்ற முறையில் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதன்படி இனிமேல், பயணிகள் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அல்லது யு.பி.ஐ. போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வரும் என தெரிகிறது.
Next Story






