என் மலர்
தலைப்புச்செய்திகள்
- முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
- மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.
கோவை:
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
* தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் போது எப்படி நடக்கம் என அமித்ஷா தெளிவாக விளக்கி உள்ளார்.
* விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.
* முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
* ஏற்கனவே பிரதமரும் விளக்கமாக பேசி உள்ளனர்.
* தமிழக முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்?
* முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது ஏன்?
* மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் விஜய்.
* விஜய் நடத்தும் பள்ளியில் மும்மொழி கொள்கை, விஜய் குழந்தைகளுக்கு மும்மொழி.
* த.வெ.க. தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இருமொழியா? விஜய் மேடையில் பொய் சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- கார் கவிழ்ந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தனர்.
- இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நெடுஞ்சாலையிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தின் பதறடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் தொட்டபல்லாபூரில் பகுதியில் தாலுகாவில் உள்ள கட்டிஹோசஹள்ளி சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது.
5 பேருடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற ஒரு கார், நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து 4 முறை சுழன்றது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கார் கவிழ்ந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நெடுஞ்சாலையிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. காரில் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் முகமது யூனிஸ் (20) உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

- இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- இந்தப் படம் வருகிற மார்ச் 7-ம் தேதி ரிலீசாகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கிங்ஸ்டன் படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றன.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி யின் 8-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இன்று நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது இங்கிலாந்தா? ஆப்கானிஸ்தானா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
- கோழிக்கோடில் இயங்கும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இயந்திர பொறியியல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சைஜா ஆண்டவன்.
- இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்
கேரள மாநிலம் கோழிக்கோடில் இயங்கும் மத்திய அரசு கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இயந்திர பொறியியல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சைஜா ஆண்டவன். இவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பாடும் கமெண்ட் ஒன்றை இவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
கடந்த ஜனவரி 30, 2024, காந்தியின் நினைவு தினத்தன்று சைஜா ஆண்டவன் பேஸ்புக்கில், "இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்" என்று ஒரு கருத்தைப் பதிவிட்டார். இதற்காக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வன்முறையைத் தூண்டும் நோக்கதுடன் கருத்து தெரிவித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 153 இன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். தனது கருத்து குறித்து பேசிய சைஜா, காந்திஜியின் கொலையைப் பாராட்டுவதற்காக நான் கருத்து தெரிவிக்கவில்லை. நான் ஒருபோதும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. கோட்சேவின் " நான் ஏன் காந்தியைக் கொன்றேன்" என்ற புத்தகத்தைப் படித்திருந்தேன்.
கோட்சேவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். அவரது புத்தகத்தில் சராசரி மனிதனுக்குத் தெரியாத ஏராளமான தகவல்களும் வெளிப்பாடுகளும் உள்ளன. கோட்சே தனது புத்தகத்தில் நமக்கு அறிவூட்டியுள்ளார் என்றும் தான் எந்த அரசியல் கட்சியையும் சார்தவர் இல்லை என்றும் தான் கல்வியாளர் மட்டுமே என்றும் தனது கருத்தை நியாயப்படுத்தினார்.
இந்நிலையில் பேராசிரியர் சைஜா தற்போது தேசிய தொழில்நுட்பக் கழகத்தின், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
- தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவித்துக் கொண்டு இருக்கிறோம்.
- பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது முதல் வேலை.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள ஓட்டலில் நடந்தது. விழாவில் விஜய்யின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அதன் பிறகு 2-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார். பின்னர் கட்சியின் கொள்கைப் பாடல் ஒலிக்கப்பட்டது.
அதன் பிறகு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விஜய் உள்பட அனைவரும் நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் கொள்கை தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தளபதி பயிலக சிறார் பயனாளர்கள் மேடைக்கு வந்து பேசினார்கள். அவர்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். இதில் பேசிய 2 மாணவிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கட்சியின் நிர்வாகிகள் சார்பாக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி பேசினார். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் தஞ்சை ஆர்.விஜயசரவணன் கவிதை வாசித்தார்.
விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்கள், தோழிகள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரசியல் என்றாலே வேறு லெவல்தான். அரசியலில் மட்டும்தான் வித்தியாசமான ஒன்றை நாம் பார்க்கலாம். யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்றே நமக்கு தெரியாது. யார்-யாரை எப்போது ஆதரிப்பாளர்கள் என்றே நமக்கு தெரியாது. அதை கணிக்கவே முடியாது. அதனால்தான் அரசியலில் நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்து போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அதை கண்டிப்பாக நல்லவர்கள் எல்லோருமே வரவேற்பார்கள். ஆனால் ஒரு சில பேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும்தானே.

என்னடா இவன் திடீரென்று ஒருவன் என்ட்ரி கொடுத்து விட்டானே. இதுவரை நாம் சொன்ன பொய்யை எல்லாம் நம்பிக் கொண்டு மக்கள் நமக்கு ஓட்டு போட்டுக் கொண்டு இருந்தார்களே. ஆனால் இப்போது இவன் சொல்வதையெல்லாம் பார்த்தால் மக்கள் மனசுக்கு ரொம்ப நெருக்கமாக வேறு இருக்குதே. அதுவே நமக்கு பெரிய நெருக்கடியாகவும் இருக்குதே. இவனை என்ன செய்யலாம். எப்படி இவனை குளோஸ் பண்ணலாம் என்று ஒரு குழப்பம் வரும். அந்த குழப்பத்தில் கத்துவதா? கதறுவதா? என்று என்ன பண்ணுவது என்று தெரியாமல் வருகிறவன் போகிறவன் எல்லாம் கட்சி ஆரம்பிறக்கிறான் என்று சொல்லி பேச ஆரம்பிப்பார்கள்.
இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுகிறார்கள். இல்லையா? அந்த மாதிரி.
இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட ஒரு பயம் இல்லாமல், பதட்டம் இல்லாமல் வருகிற எதிர்ப்புகள் எல்லாவற்றையும் சும்மா இடது கையில் 'டீல்' செய்து கொண்டு தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை கடந்து இப்போது 2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
இந்த ஒரு கால கட்டம்தான் மிகவும் முக்கியமான கால கட்டம். ஏனென்றால் ஒரு அரசியல் கட்சிக்கு பெரிய பலமே அந்த கட்டமைப்புதான். அதுதான் அந்த கட்சியின் வேர் மாதிரி, அடிப்படை பலமே அதுதான். ஒரு ஆலமரம் போல கட்சி வளர வேண்டும் என்றால் வேர்களும், விழுதுகளும் வலிமையாக இருக்க வேண்டும் அல்லவா? அப்படி நமது அமைப்பை பலப்படுத்தும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் நம் மீது ஒரு புகார். அது என்ன புகார் என்று எனக்கும் புரியவில்லை.
நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லோருமே இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். இருந்தால் என்ன? அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னாடி நின்றதும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த போது அவரது பின்னாடி நின்றதும் வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967-ம் ஆண்டிலும், 1977-ம் ஆண்டிலும் நடந்த தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.
அதே போல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும்.
இப்போது அதே போல் நமது மீது இன்னொரு புகார். அது என்னவென்றால் நமது கட்சி நிர்வாகிகள் எல்லோருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களாம். அதேதான் இங்கேயும் கேட்கிறேன். ஏன் வரக்கூடாதா? சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிசு பெரிசா சாதித்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்ம கட்சி எளிய மக்களுக்கான கட்சி தானே அப்படி இருக்கும் போது நமது கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களாத்தான் இருப்பார்கள். நமது கட்சி பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது.
முன்பெல்லாம் அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். இப்போது உல்டா... மாறி விட்டது. பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையாராக மாறி விடுகிறார்கள்.
மக்களுடைய நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ, வளர்ச்சிகளை பற்றியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணம் பணம் பணம். எந்தெந்த வழிகளில் எல்லாம் கொண்டு வரலாம் என்று நினைக்கிற பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது முதல் வேலை.
இவ்வாறு விஜய் பேசினார்.
இந்த விழாவில் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கொள்கை பரப்பு இணை செயலாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினார்.
விழா நடைபெறும் பகுதியில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்ற 3 ஆயிரம் பேருக்கும் அறுசுவை மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்திருந்தார்.
ஆண்டு விழாவையொட்டி கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. விஜய் வீடு அமைந்துள்ள நீலாங்கரை முதல் விழா நடைபெறும் சொகுசு விடுதி வரை விஜய்யை வரவேற்று பதாகைகளும் வைக்கப்பட்டு இருந்தன.
- பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
- தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வேங்கிக்கால்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியை திணிக்க முயல்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் திட்டத்தில் ஒன்றானது. ஒரே நாடு ஒரே மொழி என்பதை அடையும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.
தனி நபர்கள் இந்தியை கற்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியா முழுவதும் ஒரே மொழியை பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தான் எதிர்க்கிறோம். கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதியை தருவோம் என்பது ஏற்புடையதல்ல.
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை கண்டிக்கிறது. மார்ச் 5-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை அமைந்தால் தமிழ்நாடு 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கிறது.
நடிகர் விஜய் தேர்தலை சந்தித்தால் தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, அங்கீகரிக்கிறார்களா என்பது தெரியவரும். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில் அ.தி.மு.க.வையோ, தி.மு.க.வையோ பலவீனப்படுத்த முடியும் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். சினிமா புகழை மட்டும் வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்டி விட முடியும் என்று சொல்லிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தமிழக இளைய தலைமுறையினரை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
திருச்சி:
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மற்றும் கட்சியின் சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் மேடையேறியுள்ளார் நடிகர் விஜய். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார்.
யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்.
தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திரௌபதி 2 படத்திலும் ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார்.
- இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்திற்கான பூஜை சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இவர் ஏற்கனவே இயக்கி வெளியான திரௌபதி படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க இருப்பதாக மோகன் ஜி அறிவித்துள்ளார்.
இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ்நாட்டின் கிராமப்புறங்களை சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் நம்மிடம் உள்ளனர்.
- தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய பாதகமாகும்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு வாதிடுகிறது.
முதலில் மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம் என்று கூறிவிட்டு, அந்தந்த மொழிக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்தி மொழி ஆசிரியர்களை மட்டுமே நியமித்து மாணவர்கள் இந்தி கற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள் என்று விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் மும்பையில் பணிபுரியும் சோஹோ பொறியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்ரீதர் வேம்பு, "இந்தியாவில் சோஹோ வேகமாக வளர்ந்து வருகிறது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களை சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் எங்களிடம் உள்ளனர்.
நமது வணிகத்தின் பெரும்பகுதி டெல்லி, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி கற்காதது எங்களுக்கு ஒரு பெரிய பாதகமாகும். இந்தி கற்றுக்கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் நான் இந்தி கற்றுக்கொண்டேன். இப்போது இந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது, தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
- நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
- எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை.
த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், மக்கள் நலன் நாட்டின் நலன் எதைப்பற்றியும் கவலைப்படாமல், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அகற்ற வேண்டும் என்று விஜய் பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
* விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது.
* பூத் ஏஜெண்டுகளை பலப்படுத்த வேண்டும்.
* த.வெ.க. தமிழகத்தில் முதன்மை சக்தி என்பது நிரூபணமாகும்.
* சாதாரண குடும்பத்திலிருந்து வந்தோர் அரசியலுக்கு வரக்கூடாதா?
* மும்மொழி கொள்கை என்ற புதிய பிரச்சனை கிளப்புகின்றனர்.
* கல்வி நிதியை மாநில அரசுக்கு தரமாட்டோம் என கூறுகின்றனர். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை போடுகின்றனர்.
* நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிதிய பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.
* என்ன பிரச்சனை என்று தெரியாமல் சண்டையிடுவது போல் சண்டையிட்டு ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர்.
இவங்க இரண்டு பேரும் அடித்துக் கொள்வது போன்று அடித்துக்கொள்வார்களாம். இதை நாங்க நம்பணுமாம்
What bro, its very wrong bro என தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை கிண்டலடித்த விஜய், தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியை திணித்தால் எப்படி? என கேள்வி எழுப்பினார்.
மேலும், மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக்க திணிப்பதா?
மாநில மொழி மீது வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி Bro?
எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை.
பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு மும்மொழிக்கொள்கையை எதிர்ப்போம் என்றார்.
தொடர்ந்து Confident ஆக இருங்கள் வெற்றி நமதே என கூறி விஜய் உரையை முடித்துக்கொண்டார்.
- அரசியலில் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது.
- அரசியலில் மட்டும் தான் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய் My Friend, My Brother என பேசத் தொடங்கிய விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி உரையை தொடங்கிய விஜய்,
* தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வரலாறு படைக்கும்.
* அரசியல் என்றால் வேற வெலல் தான். அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றாக நாம் பார்க்கலாம்.
* அரசியலில் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது.
* அரசியலில் மட்டும் தான் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
* மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போன ஒருவன் அரசியலுக்கு வந்தால், ஒரு சிலபேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும்.
* இதுவரை நாம் சொன்ன பொய்யையெல்லாம் நம்பி மக்கள் ஓட்டுபோட்டனரே, இவனை எப்படி நாம் Close பண்ணலாம் என நினைப்பர்.
* குழப்பத்தில் கத்துவதா? கதறுவதா என தெரியாமல் விமர்சனம் செய்கிறார்கள்.
* வருகின்ற எதிர்ப்பை எல்லாம் Left Handல் டீல் செய்து த.வெ.க. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
* கட்சியை பலப்படுத்தும் பணியை செய்து வருகிறோம்.
* வேரையும் விழுதுகளையும் பலப்படுத்தும் வேலையை தான் நாம் செய்து வருகிறோம்.
* அண்ணா கட்சி ஆரம்பித்த போது பின்னால் நின்றவர்கள் இளைஞர்கள்.
* நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி, பண்ணையார்களுக்கான கட்சி அல்ல.
* தவெக பண்ணையாளர்களுக்கான கட்சி அல்ல. சாதாரண மக்களுக்கான கட்சி. அதனால் இங்கு சாதாரண மக்கள் இருப்பர்.
* பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே முதல் வேலை.
இவ்வாறு விஜய் பேசினார்.






