என் மலர்
இந்தியா

நெடுஞ்சாலையின் நடுவே பல்டி அடித்த கார்.. தூக்கி எறியப்பட்ட இருவர்.. பதறவைக்கும் வீடியோ
- கார் கவிழ்ந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தனர்.
- இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நெடுஞ்சாலையிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தின் பதறடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் தொட்டபல்லாபூரில் பகுதியில் தாலுகாவில் உள்ள கட்டிஹோசஹள்ளி சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது.
5 பேருடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற ஒரு கார், நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து 4 முறை சுழன்றது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கார் கவிழ்ந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நெடுஞ்சாலையிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. காரில் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் முகமது யூனிஸ் (20) உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story






