என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது.
- கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு உயர்தர மற்றும் மலிவு விலையில் பொதுவான கால்நடை மருந்துகளை வினியோகிக்கும் வகையில் ரூ.3,880 கோடி மதிப்புள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நல்ல தரமான மற்றும் மலிவு விலையில் பொது கால்நடை மருத்துவத்தை வழங்குவதற்கும், பசு ஆஷாதி திட்டத்தின் கீழ் மருந்துகளை விற்பனை செய்வதற்கான ஊக்கத்தொகையை வழங்குவதற்கும் ரூ.75 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
மேலும் பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்கள் பொது நோய் தொற்று இல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்படும்.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிந்த்காட்டில் இருந்து ஹேம்குண்ட் சாஹிப் வரை 12.4 கிலோமீட்டர் தொலைவு 'ரோப் கார்' அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ரூ.2,730.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இதுபோல் உத்தரகாண்ட் மாநிலம் சோன்மார்க் முதல் கேதார்நாத் வரை 12.9 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.4 ஆயிரத்து 81 கோடி செலவில் 'ரோப் கார்' திட்டத்தைச் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. இந்த கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.
இவ்வாறு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
- இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று).
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-22 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி பிற்பகல் 3.55 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.37 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று). மதுரை ஸ்ரீ கூடலழகர் கஜேந்திரமோட்சம், விருத்தாசலம், திருவெண்காடு, திருவொற்றியூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. கோவை ஸ்ரீ கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் உற்சவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத் துறை முருகப் பெருமான் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-உற்சாகம்
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-இன்சொல்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-செலவு
தனுசு- புகழ்
மகரம்-வரவு
கும்பம்-ஆர்வம்
மீனம்-பக்தி
- இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.
- இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், காசாவில் ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"இந்த விஷயத்தில் இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பாருங்கள், அமெரிக்க மக்களின் நலனுக்காக உலகெங்கிலும் உள்ள மக்களுடன் உரையாடலும் பேச்சு வார்த்தையும் சரியானது என்று ஜனாதிபதி நம்பும் ஒன்று," என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹமாஸ் அதிகாரிகள் குழு நேற்று (மார்ச் 5) அமெரிக்க தூதருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினர்.
"ஹமாஸுக்கும் பல்வேறு அமெரிக்க தரப்பு அதிகாரிகள் இடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமீபத்திய பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க தூதருடன், அமெரிக்க குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய கைதிகள், உயிருள்ளவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
- துபாய் மைதானம் எங்களுக்கே அதிக அனுகூலம் என விவாதிக்கப்படுகிறது.
- ஒரு நாள் கூட நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது.
துபாய்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது கூடுதல் சாதகமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். துபாய் ஆடுகளத்தன்மையை அறிந்து தான் இந்திய அணிக்கு 5 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்களா? என்ற கேள்விக்கு கம்பீர் கூறுகையில்,
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எங்களுக்கும், மற்ற அணிகளுக்கும் இது பொதுவான மைதானம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது இது எங்களுக்குரிய உள்ளூர் மைதானம் அல்ல. கடைசியாக இங்கு எப்போது விளையாடினோம் என்பது கூட ஞாபகம் இல்லை.
பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்திய துணை கண்டத்தில் எங்கு விளையாடினாலும் அணியில் இரண்டு முழுமையான சுழற்பந்து வீச்சாளர்களைத் தான் தேர்வு செய்து இருப்போம். மற்ற 3 பேரும் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்கள். நாங்கள் விளையாடிய முதல் இரு ஆட்டங்களை பார்த்தால் ஒரு பிரதான சுழற்பந்து வீச்சாளருடன் தான் களம் கண்டோம். கடைசி லீக்கிலும், அரைஇறுதியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் (மற்ற இருவர் சுழல் ஆல்-ரவுண்டர்) இடம் பெற்றனர்.
துபாய் மைதானம் எங்களுக்கே அதிக அனுகூலம் என விவாதிக்கப்படுகிறது. அப்படி என்ன சாதகமான அம்சத்தை பார்த்தீர்கள். ஒரு நாள் கூட நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐ.சி.சி. அகாடமியில் பயிற்சி மேற்கொள்கிறோம். இவ்விரு இடங்களுக்கு இடையே உள்ள சீதோஷ்ண நிலை முற்றிலும் வித்தியாசமானது. மேலும் பயிற்சி ஆடுகளத்துக்கும், துபாய் ஆடுகளத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனவே மற்றவர்கள் சொல்வது போல் துபாயில் ஆடுவதால் எந்த விதமான சாதகமும் இல்லை.
விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. 140 கோடி இந்தியர்களுக்கும், இந்திய அணிக்கும் நேர்மையாக இருக்க வேண்டியது எனது பணி. அதைத் தான் நான் செய்கிறேன். மற்றவர்கள் என்ன பேசினாலும் அது குறித்து கவலைப்படமாட்டேன்.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும். நாங்கள் எல்லா வகையிலும் அற்புதமான ஒரு ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அணியின் செயல்பாட்டில் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டேன். இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கிறது. 9-ந்தேதி அன்று நேர்த்தியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்' என்றார்.
- போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது.
- பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர். போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில், தங்களிடம் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பிரக்ஞானந்தா 6வது சுற்றிலும் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
- பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.
புதுடெல்லி:
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதன் 6வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாம் ஷன்லாந்த் மோதினர்.
கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 43-வது நகர்த்தலில் டிரா செய்தார்.
இதேபோல், வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 32-வது நகர்த்தலில் வியட்னாமின் லீம் லீவுடன் டிரா கண்டார்.
இதையடுத்து, 6-வது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.
- இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார்.
- இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி உடன் ஆலோசனை நடத்துகிறார்.
லண்டன்:
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை தொடங்கின.
இதற்கிடையே, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி டேவிட் லாமி உள்பட பலருடன் ஆலோசனை நடத்துகிறார்.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தூதரகங்களையும் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
நாம் இந்தியாவை தீவிரமாக உலகமயமாக்கி வருவதால், ரூபாயின் சர்வதேசமயமாக்கலை நாங்கள் தெளிவாக ஊக்குவிக்கிறோம். அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்கின்றனர், மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் விரிவடைந்துள்ளன. இதனால், ரூபாயின் பயன்பாடும் அதிகரிக்கும்.
பல சமயங்களில் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே பணமில்லா பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை நாங்கள் நிறுவியுள்ளோம் மற்றும் வர்த்தகத் தீர்வுகளை ஆதரித்துள்ளோம்.
இந்தியாவின் உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக ரூபாய் பரிவர்த்தனைகளின் நிலையான வெளிப்புறமயமாக்கலை இது பிரதிபலிக்கிறது.
டாலரின் பங்கு குறித்து நாங்கள் யதார்த்தமாக இருக்கிறோம். டாலருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. டாலரை குறைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என தெரிவித்தார்.
- முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
- இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது நியூசிலாந்து.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றன.
துபாயில் நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதத்தால் 362 ரன்களைக் குவித்தது.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் போராடி சதமடித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் டகாஹஷி உடன் மோதினார்.
இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவான் வீரர் வாங் உடன் மோதினார். இதில் பிரனாய் 21-11, 20-22, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
- ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று யாத்திரை நிறைவடையும் என தெரிவித்தார்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பாகல்காமில் இருந்து 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 வரை நடைபெற்ற புனித யாத்திரையில் 5.10 லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
ஆளுநர் மாளிகையில் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது என அரசு செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3-ம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு வழித்தடங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும்.
அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பல்டால், பாகல்காம், நுன்வான் மற்றும் பந்த சவுக் ஸ்ரீநகரிலும் இந்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.
- சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபையில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா எச்சில் கறைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
மேலும், இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தாமாக முன் வந்து செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்து சபாநாயகர் சதீஷ் மஹானா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய சபாநாயகர், சட்டசபை வளாகத்திற்குள் ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது வேறு எந்த தனிநபர்கள் உட்பட எவரும் குட்கா அல்லது பான் மசாலா உட்கொள்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- 2வது அரையிறுதி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இடையே லாகூரில் நடைபெற்றது.
- இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையே, 2வது அரையிறுதி போட்டி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சனின் அபாரமான சதத்தின் உதவியால் 362 ரன்களை குவித்தது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 102 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என 3 வடிவங்களையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் 19,000 ரன்கள் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ரன்களை எட்டும் முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் கேன் வில்லியம்சன் பெற்றார் .
இவருக்கு அடுத்த இடத்தில் ராஸ் டெய்லர் (510 இன்னிங்ஸ்கள்) 18,199 ரன்கள் எடுத்துள்ளார்.






