என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகனம் சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-7 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: சப்தமி நள்ளிரவு 1.07 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 10.44 மணி வரை. பிறகு மூலம்.
யோகம்: மரண, அமிர்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி கோவர்த்தன் கிரி பந்தலடி சென்று திரும்புதல். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், வெள்ளி அனுமன் வாகனத்திலும் தாயார் வெள்ளி கமலத்திலும் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகனம் சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-தாமதம்
சிம்மம்-மாற்றம்
கன்னி-வரவு
துலாம்-பொறுமை
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- பாசம்
மகரம்-விருப்பம்
கும்பம்-நன்மை
மீனம்-ஜெயம்
- சூதாட்ட விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது வழக்குப் பதிவு.
- நடிகர் பிரகாஷ் ராஜ் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்து பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், "ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு பற்றியும், நான் நடித்த விளம்பரம் பற்றியும் சர்ச்சை நிலவுகிறது. அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இப்போது பதில் சொல்ல வேண்டி உள்ளது. அந்த விளம்பரத்தில் நான் நடித்தது உண்மைதான். அது தவறு என்று சில மாதங்களிலேயே தெரிந்து கொண்டேன். ஆனால் அந்த விளம்பரத்திற்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் ஆகி இருந்ததால் இடையில் அவர்களை நிறுத்திவிடும்படி என்னால் கேட்க முடியவில்லை.
2017-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் சமூக வலைதளத்தில் எனது பழைய விளம்பரத்தை பயன்படுத்தினர். இதை எதிர்த்து நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதற்கிடையே தற்போது என் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. போலீசார் எனக்கு எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. நோட்டீஸ் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்," என்று அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில்பட்டு வெடித்தது.
- வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் விக்கி மற்றும் பியா. காதலர்களான இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக சொந்த ஊரான பெங்களூருவுக்கு வந்திருந்தனர்.
பெங்களூருவில் உள்ள திறந்தவெளி தோட்டத்தில் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோ ஷூட்' நடத்தினர். அப்போது வண்ணப்புகை குண்டுகள் வெடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பில் புதுபெண்ணை மணமகன் அலேக்காக தூக்கி கொண்டாடியபோது வண்ணப்புகை குண்டுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதற தொடங்கின.
அப்போது எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில்பட்டு வெடித்தது. இதனால் அவர் வலியில் துடித்து கதறினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடலின் முகுது மற்றும் இடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் அவருடைய தலைமுடியும் எரிந்து கருகி இருந்தது.
இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
- கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
- டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி.
விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்று்ம தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் மேற்பார்வையிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை சோதனை அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி முகாமின் இறுதநாளில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து 11 நாட்கள் வரை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டு ராணுவ பயிற்சி குறித்து பேசிய வட கொரிய செய்தி தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
- ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.
- மின்கம்பிகளை சீரமைக்கும் பணி பல மணி நேரம் நடைபெற்றது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் நேற்று மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாலை 4.30 மணிக்கு நடைபெற இருந்த சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மாலை 6 மணி வரையில் நடைபெறாமல் இருந்தது. வெகுநேரமாக காத்திருந்தும், அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை நடத்த முன்வரவில்லை. இதற்கிடையே அந்த வழித்தடத்தில் சோதனை வாகனம் ஒன்று இயக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ரெயில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. தீப்பொறிகளும் வெடித்து சிதறின. ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.
இதையடுத்து, மின்வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பராமரிப்பு வாகனம் மூலம் சென்று அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மின்கம்பிகளை சீரமைக்கும் பணி பல மணி நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பூந்தமல்லி- போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.
- அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் மகாராஜா.
- ரவுடி ஐக்கோர்ட் மகாராஜாவை தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ரவுடிகளை ஒழித்துக்கட்ட சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாநில உளவு பிரிவு போலீசார் அளிக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கூட்டாக கைகோர்த்து குற்றச் செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் தென்சென்னை பகுதியான ஆதம்பாக்கத்தில் நகை கடை அதிபர் மகன் ஒருவரை கடத்தி கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ரவுடிகளான சுரேஷ், முருகன், பாலமுருகன், வினோத், சச்சின் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் முன் கூட்டியே உஷாராகி குற்றவாளிகளை கைது செய்ததால் சென்னையில் பரபரப்பாக அரங்கேறிய கடத்தல் மற்றும் கொலை சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது. போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கைதான குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இதன் பின்னணியில் தூத்துக்குடியை சேர்ந்த 34 வயதான பிரபல ரவுடியான ஐகோர்ட் மகாராஜா மூளையாக இருந்து செயல்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிப்பதற்கு குறி வைத்தனர்.
தூத்துக்குடி வடபாசம் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ஐகோர்ட் மகாராஜா மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆட்களை கடத்தி கொலை செய்வது, பணம் கேட்டு மிரட்டுவது ஆகிய குற்றச்செயல்களில் ஐகோர்ட் மகாராஜா அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே சென்னையில் நகை கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்யவும் திட்டம் தீட்டியதை கண்டுபிடித்த சென்னை போலீசார் ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
இதையடுத்து அவரை பிடிப்பதற்காக தூத்துக்குடிக்கு நேற்று இரவு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஐகோர்ட் மகாராஜா நெல்லையில் மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
பின்னர் இரவோடு இரவாக அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
நகை கடை அதிபரை கடத்துவதற்கு திட்டமிட்ட ரவுடிகள் அதற்காக மோட்டார்சைக்கிளில் சுற்றி கண்காணித்துள்ளனர். அந்த மோட்டார்சைக்கிள் எங்கே? என்று ஐகோர்ட் மகாராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு பதில் அளித்த ஐகோர்ட் மகாராஜா கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
கடத்தல் முயற்சி வழக்கில் சொத்து ஆவணமான அதனை கைப்பற்றுவதற்காக போலீசார் ரோந்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தற்காப்புக்காக தனது துப்பாக்கியை எடுத்து ஐகோர்ட் மகாராஜா மீது துப்பாக்கி சூடு நடத்தினார். ஒரு ரவுண்டு சுட்டதில் ஐகோர்ட் மகாராஜாவின் வலது காலில் முழங்காலுக்கு கீழே குண்டு பாய்ந்தது. இதில் அலறி துடித்தபடியே அவர் சுருண்டு விழுந்தார். குண்டு காயம் பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. உடனடியாக போலீசார் ஐகோர்ட் மகராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நேற்று நள்ளிரவு 2.28 மணி அளவில் நடைபெற்றுள்ளது. துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பமுயன்றதாக கூறப்படும் ரவுடி ஐகோர்ட் மகாராஜா போலீஸ் ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளார்.
இதையடுத்து பொது சொத்துக்கு சேதம் விளை விதித்ததாகவும் ஐகோர்ட் மகாராஜா மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டள்ளது. கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தான் தென் மாவட்டத்தில் இருந்து வந்து ஆள் கடத்தலில் ஈடுபட முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இது மற்ற ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இந்த வாரத்தில் நெல்லை, சிதம்பரம், ஈரோடு என ஏற்கனவே 5 ரவுடிகள மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கப்பட்டுள்ள நிலையில் 6-வதாக சென்னையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ரவுடிகளுக்கு எதிரான இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இலவசமாக பள்ளிகளை நடத்த வேண்டும் என வலதுசாரிகள் விரும்புகிறது.
- ஆவணங்களை உயர்த்திப் பிடித்தப்பட சிரித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார். இது அமெரிக்க வலதுசாரிகளின் பல்லாண்டு கால இலக்காக இருந்து வந்தது. இந்த உத்தரவின் மூலம் கல்வித்துறை அதிகாரம் முழுவதும் மாகாணங்களுக்கு வழங்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் அமைக்கப்பட்ட மேசைகளில் சுற்றி அமரவைக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் டொனால்டு டிரம்ப் மத்திய கல்வித்துறையை கலைக்கக் கோரிய உத்தரவில் கையெழுத்திட்டார். பிறகு தான் கையெழுத்திட்ட ஆவணங்களை உயர்த்திப் பிடித்தப்படி சிரித்தார்.

"இந்த உத்தரவு, கல்வித்துறையை நிரந்தரமாக நீக்கத் தொடங்கும். நாங்கள் அதை மூடப் போகிறோம். விரைவில் இந்த நடவடிக்கை தொடங்கும். இது எங்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. நாங்கள் கல்வித்துறையை மாகாணங்களிடமே ஒப்படைக்கப் போகிறோம்," என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
1979ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய கல்வித் துறையை, காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் மூட முடியாது. ஆனால் அதிபர் டிரம்ப் உத்தரவு கல்வித்துறையில் நிதி மற்றும் ஊழியர்களைப் பற்றாக்குறையை வைத்திருக்கும் அதிகாரம் கொண்டிருக்கும்.
இந்த உத்தரவு, கல்வித் துறை செயலாளர் லிண்டா மெக்மஹோனை, "மத்திய கல்வித் துறையை மூடுவதற்கும், கல்வி அதிகாரத்தை மாகாணங்களிடம் திருப்பி வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க" வலியுறுத்துகிறது.
- 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற புதிய சரித்திரத்தை கவன்ட்ரி படைத்துள்ளார்.
- இதற்கு முன்பு 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர்.
ஏதென்ஸ்:
சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் அதிகாரமிக்க, வலிமைமிக்க பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தார். பதவிகாலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கூறி ஒதுங்கினார்.
இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஐ.ஓ.சி.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நிதி நிலை, எதிர்கால போட்டிக்குரிய சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்று ஐ.ஓ.சி.யின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
தலைவர் பதவிக்கு முன்னாள் நீச்சல் வீராங்கனையும், ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி, உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ (இங்கிலாந்து), ஐ.ஓ.சி. நிர்வாக குழுவின் துணைத்தலைவர் ஜூவான் ஆன்டோனியா சமராஞ்ச் (ஸ்பெயின்) சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட் (பிரான்ஸ்), ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப் (ஜப்பான்), சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ் (இங்கிலாந்து), ஜோர்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் ஐ.ஓ.சி.யின் 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக 49 வாக்குகள் பெற்ற கிறிஸ்டி கவன்ட்ரி வெற்றி பெற்று புதிய தலைவர் ஆனார். 2-வது இடத்தை பிடித்த ஜூவான் ஆன்டோனியா சமராஞ்சுக்கு 28 வாக்குகள் கிடைத்தது. எதிர்பார்க்கப்பட்ட செபாஸ்டியன் கோ 8 ஓட்டுகளே பெற்றார்.
இதன் மூலம் 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற புதிய சரித்திரத்தை கவன்ட்ரி படைத்துள்ளார். இதற்கு முன்பு 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். அத்துடன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த உயரிய பொறுப்புக்கு வந்த முதல் நபர் மற்றும் இளம் வயதானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
41 வயதான கிறிஸ்டி கவன்ட்ரி முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். 2004, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருக்கிறார். உலக நீச்சல் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டியிலும் நிறைய பதக்கங்களை குவித்து இருக்கிறார்.
ஒலிம்பிக் தினமான ஜூன் 23-ந் தேதி அன்று ஐ.ஓ.சி.யின் 10-வது தலைவராக அவர் முறைப்படி பொறுப்பேற்பார். இந்த பதவியில் அவர் 8 ஆண்டுகள் நீடிப்பார். இந்த காலக்கட்டத்தில் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக், 2032-ம் ஆண்டு பிரிஸ்பேன் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு காத்திருக்கிறது.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்துவதற்கான உரிமத்தை பெற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பதை இவரது தலைமையிலான கமிட்டியே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு இளம் வீராங்கனையாக நீச்சல் பயணத்தை தொடங்கிய போது இது போன்ற ஒரு தருணத்தை அடைவேன், இப்படியொரு இடத்தில் நிற்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஐ.ஓ.சி.யின் முதல் பெண் தலைவராக இருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. நான் பெற்ற ஓட்டுகள் நிறைய பேருக்கு உத்வேகம் அளிக்கும் என கூறினர்.
- சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற இருக்கிறது.
இந்நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் சுராஜ், அருண்குமார், எஸ்.ஜே சூர்யா, விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. ஓரிரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. விக்ரமை கொள்ள பலப்பேர் ஆயுத்தமாகும் காட்சி டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
- அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
- அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
இதில் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 20 நாட்களில் வந்த 14 வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.
ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






