என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் கோகோ காப் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், கனடாவின் டேனிஸ் ஷபோவலோவ் உடன் மோதினார்.

    முதல் செட்டை 5-7 என இழந்த சின்னர், அதிரடியாக ஆடி அடுத்த மூன்று செட்களை 6-4, 6-3, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டலேனாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
    • மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி 2வது இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல் மந்திரி யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2,06,826 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.

    இதன்படி, 36 சதவீதம் பேர் உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சிறப்பாகச் செயல்படும் முதல் மந்திரியாக கருதுகின்றனர். உ.பி. முதல்வர் கடந்த பிப்ரவரியில் 35 சதவீத ஆதரவு பெற்று இருந்தார். தற்போது ஒரு சதவீதம் அதிகரித்து 36 சதவீதம் பெற்றுள்ளார்.

    2வது இடம் பிடித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை 13 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.

    அவரைத் தொடர்ந்து 7 சதவீதம் பேர் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் லியு யீ- சென் போயாங் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி முதல் செட்டை 21-19 என கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2வது செட்டை சாத்விக் சிராக் ஜோடி 21-18 என வென்றது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சீன ஜோடி 21-12 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்கத்தைப் பெற்று அசத்தியது.

    • பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள்.
    • பி.எஸ்.எப். உள்ளிட்ட 5 படைகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.

    கொல்கத்தா:

    வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பா.ஜ.க.வினர் தொடர்ந்து ஊடுருவல் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியை 5 படைகள் செய்து வருகின்றன. அவை மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அப்படியிருக்க ஊடுருவலுக்கு மேற்குவங்க அரசை எப்படி பா.ஜ.க.வினர் குறை கூற முடியும்?

    பிரதமர் மோடி ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் ஊடுருவல் பற்றி பேசுகிறார். இதனால் நாட்டின் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிறார். அவர் இதைச் சொல்லும்போது உள்துறை மந்திரி சிரித்துக்கொண்டே கைதட்டுகிறார்.

    ஊடுருவல்காரர்கள் தினமும் நம் நாட்டினுள் வந்து கொண்டிருக்கின்றனர். நம் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்றால், இதற்கெல்லாம் யார் காரணம்?

    அமித்ஷாவின் தலையை வெட்டி உங்கள் (பிரதமர்) மேஜையில்தான் வைக்கவேண்டும். வேறு வழியில்லை. உள்துறை மந்திரியும் உள்துறை அமைச்சகமும் நம் எல்லைகளைப் பாதுகாக்க தவறினால் அது யார் தவறு? எங்கள் தவறா? உங்கள் தவறா? பி.எஸ்.எப். என்னதான் செய்கிறது? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    மஹுவா மொய்த்ராவின் பேச்சு பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. மஹுவாவை கைது செய்யும்படி பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹுவா மொய்த்ராவை மன்னிப்பு கேட்க மம்தா பானர்ஜி சொல்ல வேண்டும் அல்லது அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.

    • இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
    • கடந்த 2021 டி20 உலகக் கோப்பையிலும் தோனி இந்திய அணி ஆலோசகராக செயல்பட்டிருந்தார்.

    மும்பை:

    இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றன.

    இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ. நிர்வாகம் அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஆனாலும், இதற்கு தோனி என்ன முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    ஏற்கனவே, எம்.எஸ்.தோனி 2021-ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டார். ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு நடையை கட்டியது.

    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் 39 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்நிலையில், 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 69 ரன்னும், ஹசன் நவாஸ் 56 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த அணியின் ஆசிப் கான் தனியாக போராடினார். அதிரடியாக ஆடிய அவர் 35 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட77 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் ஹசல் அலி 3 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சென்னையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.
    • எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது;

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.

    எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.

    • இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி சந்திக்கிறது.
    • இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் சந்திக்கிறது.

    மும்பை:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி துபாயில் சந்திக்கிறது. பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19-ம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அறிவித்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி ஆசிய கோப்பை போட்டிகள் மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) தொடங்குவதாக இருந்தன. அந்த நேரத்தில் அங்கு அதிகப்படியான வெப்பம் இருப்பது வழக்கம் என்பதால் வீரர்கள் பெரிய சிரமத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    எனவே, இதை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய நேரத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார்.
    • ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பீஜிங்:

    ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தியான்ஜெனில் நாளை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி. நடந்து வரும் மோதல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்குகிறது எனதெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். அடுத்த செட்டை கேமரூன் நூரி 7-6 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 7-6 (7-3), 6-7 (9-11), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் ஜெரோம் கிம்மை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி
    • ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ளார்.

    ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.

    சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், துணை ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்த தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தெலுங்கு டைட்டன் கேப்டன் விஜய் மாலிக அதிகப்பட்சமாக 14 புள்ளிகள் பெற்றார்.
    • உ.பி. யோதாஸ் ரைடர் ககன் கவுடா 14 புள்ளிகள் பெற்றார்.

    புரோ கபடி லீக் 2025 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் 35-38 எனத் தோல்வியடைந்தது.

    தெலுங்கு டைட்டன்ஸ் இன்று தனது 2ஆவது அட்டத்தில் உ.பி. யோதாஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் 35-40 எனத் தோல்வியை தழுவியது. உ.பி. யோதாஸ் அணியின் ரைடர் குமன் சிங் 7 புள்ளிகள் பெற்றார். மற்றொரு ரைடர் ககன் கவுடா 14 புள்ளிகள் பெற்றார். டிபெண்டர் (Defender) சுமித் 8 பேரை அட்டகாசமாக பிடித்து அவுட்டாக்கினார். இதில் ஒன்று சூப்பர் டேக்கிள் ஆகும்.

    தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் கேப்டன் விஜய் மாலிக் ரெய்டு மூலம் 3 போனஸ் புள்ளிகள் உள்பட 13 புள்ளிகளும், டேக்கிள் மூலம் ஒரு புள்ளியும் என 14 புள்ளிகள் பெற்று அசத்தினார்.

    ×