என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை
- சென்னையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.
- எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது;
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.
எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.
Next Story






