என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். பொருளாதார முன்னேற்றம் கருதி நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விற்ற சொத்துகளை வாங்கும் யோகமுண்டு.
மிதுனம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடல்நலம் சீராகும்.
கடகம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
சிம்மம்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலன் கருதி மருத்துவ செலவுகளைச் செய்ய நேரிடும்.
கன்னி
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள்.
துலாம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சிகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். விரயங்கள் கூடும்.
தனுசு
சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்புகள் வந்து சேரும் நாள். வரவை விடச் செலவு கூடும். சகோதர வழியில் பிரச்சனைகள் உருவாகும். பஞ்சாயத்துகள் முடிவடையாது.
மகரம்
பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
கும்பம்
எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் நாள். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கலாம். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு. சம்பள உயர்வுடன் கூடிய புதிய உத்தியோகம் வரலாம்.
மீனம்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.
- வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது.
- இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியது.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது. இதனால் இன்றுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.
ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அடையாறு: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி ரோடு, ராஜலட்சுமி நகர், வி.ஜி.பி., தெரு, காந்திஅம்மாபுரம் செல்வா நகர், சீத்தாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி மற்றும் பேபி நகர்.
செம்பியம்: எம்.எச்.ரோடு, கொல்லம் தோட்டம், செயின்ட் மேரீஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குளந்தை 1 முதல் 4வது தெரு, எஸ்எஸ்வி கோவில் 1 முதல் 3வது தெரு, என்எஸ்கே தெரு, மதியழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6வது தெரு, நரசிம்மரெட்டி நகர், 1 முதல் 4வது தெரு, பள்ளி உயர் சாலை, மணலி.
பம்மல்: கிழக்கு மெயின் ரோடு, அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, சங்கர் நகர் 2வது குறுக்குத் தெரு, சங்கர் நகர் 17வது முதல் 27வது தெரு, பிள்ளையார் கோவில் தெரு, மற்றும் திருநீர்மலை மெயின் ரோடு.
தரமணி: காமராஜ் அவென்யூ 1வது, 2வது தெரு மற்றும் 3வது குறுக்குத் தெரு, கஸ்தூரிபாய் நகர், கால்வாய் வங்கி சாலை, ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, வெங்கடரத்தினம் நகர் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, 4வது முதல் 8வது மெயின் ரோடு, 6வது முதல் 15வது குறுக்குத் தெரு மற்றும் இந்திரா நகர்.
- மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி.
- சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-31 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி பின்னிரவு 3.26 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.45 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.
ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிறப்பு
கடகம்-முயற்சி
சிம்மம்-பொறுமை
கன்னி-பொறுப்பு
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஊக்கம்
மகரம்-உறுதி
கும்பம்-நிறைவு
மீனம்-நிம்மதி
- வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
- வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அனேக இடங்களில் வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை மட்டுமில்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
- இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
- தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று அப்பெண் கோரியுள்ளார்.
கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி இஸ்லாமியர் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் கடினம்குளம் மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த ராக்கி என்ற 44 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி, தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இஸ்லாமியரான சஃபீர் தானே முன்வந்து இந்து முறைப்படி அப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.
இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இஸ்லாம் மதம் எனக்கு தடையாக இருக்கவில்லை என்று சஃபீர் தெரிவித்தார்.
சஃபீரின் இச்செயலுக்கு உள்ளூர் ஜமாத் மற்றும் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.
- அவர்களால் மட்டுமே அந்த நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
- இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.
ரெயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மோசடியைத் தடுக்கவும் ரெயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அக்டோபர் 1, 2025 முதல், பொது முன்பதிவு திறந்த முதல் 15 நிமிடங்களில் டிக்கெட் பதிவு செய்வோர் ஆதாரை கட்டாயமாக இணைந்திருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே அந்த இடைப்பட்ட நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
தற்போது, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாகும். இப்போது இந்தக் கொள்கை பொது ஒதுக்கீட்டு டிக்கெட்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, நவம்பர் 15 ஆம் தேதி பயணிக்க பொதிகை எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், விதிகளின்படி, முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே, அதாவது செப்டம்பர் 16 காலை 8 மணிக்கு தொடங்கும். புதிய விதியின்படி, ஆதார் சரிபார்ப்பை முடித்த IRCTC பயனர்கள் மட்டுமே 8.00 முதல் 8:15 வரை, அதாவது முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், சரிபார்க்கப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
- 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி; கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.
2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.
இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை
- ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம்.
வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா' . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ''கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர். அவர் என் இளைய தம்பி என கொண்டாடுவேன். எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றி பெற வேண்டும். அவருடைய படைப்பு மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் நோக்கும், போக்கும் துன்பப்படுகிற நிலையில்தான் இருக்கிறது. இன்றைக்கு 200 திரைப்படங்கள் வெளியானால் அதில் 10 படங்கள்தான் வெற்றிக்கு அருகில் வருகின்றன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், மிகப் பெரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள்.
ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தை பார்த்து படம் எடுக்கிறார்கள். படம் என்பது பிம்பம். வாழ்க்கை என்பது நிஜம்.
ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம். அந்த வாழ்க்கையில் இருந்து கடந்து சென்ற வாழ்க்கை, தொட்ட வாழ்க்கை, துன்புற்ற வாழ்க்கை, துன்பப்படுத்திய வாழ்க்கை, சக மனிதனை துன்புறுத்தி சென்ற வாழ்க்கை இவற்றை நீ படமாக எடுத்தால்.. பார்வையாளர்களுக்கும், படைப்புக்கும் ஒரு தொடர்புத் தன்மை ஏற்பட்டிருக்கும். இந்த தொடர்பு தன்மையற்று போனதால் பல திரைப்படங்கள் ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டு போயின என நான் நினைக்கிறேன்.
எட்டு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு விட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.
அதிலும் தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?
மகாபாரதத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. ராமாயணத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. இந்த இரண்டு இதிகாசங்களின் கதையும் மக்களுக்கு தெரிந்ததுதான்.
படையாண்ட மாவீரா படத்தை பொருத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தை காண வரும் ரசிகர்களை பொறுத்தது. தமிழர்களை பொறுத்தது என நான் கருதுகிறேன்.
மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்,'' என்றார்.
- பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:47 மணிக்கு, சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.
- புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சங்கர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பதை நம்ப முடியவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதுகு வலி காரணமாக மேலதிகாரியிடம் Sick leave கேட்ட ஊழியர் சரியாக பத்து நிமிடங்களுக்குள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த சங்கர் (40) கடந்த 13 ஆம் தேதி தனது மேலதிகாரி கே.வி. ஐயருக்கு காலை 8:37 மணிக்கு, தனது முதுகு வலி காரணமாக அன்றைய தினம் விடுப்பு வேண்டும் என மெசேஜ் அனுப்பினார். மேலதிகாரி கே.வி.ஐயரும் விடுப்பு வழங்கி ஓய்வு எடுக்குமாறு பதிலளித்தார்.
ஆனால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:47 மணிக்கு, சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.
இந்த துயரச் செய்தியை ஐயர் காலை 11 மணிக்கு அறிந்தார். காலையில் தன்னிடம் விடுப்பு கேட்ட நபர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார் என்ற செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்த சம்பவத்தை ஐயர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அவரது பதிவில், "புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சங்கர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது" என்று அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். இந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
- சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.
ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் இணைந்து இயக்கிய 'Adolescence' என்ற நெட்பிலிப்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இந்தத் தொடர், வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டது.
லண்டனில் நடக்கும் 'Adolescence' தொடர் கதைக்களத்தில் சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் விழாவில் அவர் விருது வென்றுள்ளார். எம்மி விருது வரலாற்றில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற இளைய நடிகர் என்ற சாதனையை ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.
திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எம்மி விருதுகள் ஆகும்.
இந்த வருட எம்மி விழாவில், 'Adolescence' தொடர் பல முக்கிய விருதுகளை வென்றது.
சிறந்த தொடர், சிறந்த இயக்கம், சிறந்த எழுத்து, சிறந்த நடிகர் (ஸ்டீபன் கிரஹாம்) மற்றும் சிறந்த துணை நடிகை (எரின் டோஹெர்ட்டி) ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.
- சுரேஷ் கோபி அதை பகிரங்கமாக ஏற்க மறுத்துவிட்டார்.
- இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அவரது நடத்தை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
செப்டம்பர் 12 அன்று, கேரளாவின் திருச்சூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், வேலாயுதன் என்ற முதியவர் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம் அரசின் வீட்டு வசதி மூலம் வீடு கேட்டு மனு கொடுக்க முயன்றார்.
இருப்பினும், சுரேஷ் கோபி அதை பகிரங்கமாக ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அவரது நடத்தை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சுரேஷ் கோபி, "ஒரு மக்கள் பிரதிநிதியாக, நான் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது குறித்து எனக்கு தெளிவான புரிதல் உள்ளது.
வீட்டுவசதி என்பது மாநில அரசின் எல்லைக்குள்பட்ட விஷயம். மாநில அரசு அந்த விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது எனது பாணி அல்ல" என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிலர் இந்த சம்பவத்தை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி முதியவருக்கு வீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.






