என் மலர்tooltip icon

    இந்தியா

    வருமான வரி கணக்கு தாக்கல்: இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியது மத்திய அரசு
    X

    வருமான வரி கணக்கு தாக்கல்: இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியது மத்திய அரசு

    • வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது.
    • இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

    2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியது.

    வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது. இதனால் இன்றுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.

    ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×