என் மலர்
நீங்கள் தேடியது "வருமான வரி தாக்கல்"
- வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது.
- இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியது.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது. இதனால் இன்றுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.
ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
- தொழில்நுட்ப சிக்கல்களால் வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வோர் அவதியடைந்தனர்.
2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்துவரும் நிலையில் தொழில்நுட்ப சிக்கல்களால் அவதியடைந்துள்ளனர்.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.
ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஐடிஆர் படிவங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குத் தயாராவதற்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது.
2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
முதலில், இந்தக் காலக்கெடு ஜூலை 31, 2025 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது அது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்காக அறிவிக்கப்பட்ட ஐடிஆர் படிவங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குத் தயாராவதற்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது.
வரி செலுத்துவோர் எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் வருமானத்தை எளிதாக தாக்கல் செய்ய, ஜூலை 31 காலக்கெடுவை செப்டம்பர் 15 வரை நீட்டிக்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி கட்டியவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 416-ல் இருந்து 81 ஆயிரத்து 344 ஆக (68 சதவீதம்) உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அரசின் சட்டரீதியான, தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த உயர்வுக்கு காரணம் என மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் சுஷில் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியில் இருந்து 6.85 கோடியாக (80 சதவீதம்) உயர்ந்துள்ளது. #Crorepatis #IncomeTaxDepartment
மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர வருமானம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் சில காரணங்களால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை இந்த மாதம்(செப்டம்பர்) 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் பங்குதாரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படாது என்றும், அக்டோபர் 15-ந் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து அபராதம் செலுத்துவதை தவிர்க்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #IncomeTax






